இந்த 1 பொருளை தலையை சுற்றி போட்டு விட்டு வெளியே சென்றால், செல்லும் காரியம் 100% வெற்றிதான்.

sanibagavan
- Advertisement -

காரியத்தடை ஒருவருக்கு இருக்குது என்றால் அதற்கு காரணம் சனி பகவான் தான். சனி பகவானால் வாழ்க்கையில் ஏற்படுத்தப்படும் காரியத்தடைகளை அகற்ற, கையில் எடுத்த முயற்சிகளில் வெற்றியை காண, செய்ய வேண்டிய எளிமையான விசித்திரமான ஒரு சில பரிகாரங்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை பின்பற்றினால் சக்சஸ் எப்போதுமே உங்களுடைய இருக்கும்.

சனிபகானால் வரும் காரியத்தடை விலக செய்ய வேண்டிய பரிகாரம்

அடுப்பு கரி துண்டு அயன் செய்பவர்கள் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் இப்போதெல்லாம் சார்கோல் என்று டிபார்ட்மென்டல் ஸ்டோரிலேயே இது நமக்கு கிடைக்கிறது. அதை எப்போதும் உங்கள் வீட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான காரியத்திற்கு வெளியே போறீங்க அதிலிருந்து ஒரு கரி துண்டை எடுத்து உங்கள் தலையை மூன்று முறை சுற்றி சாக்கடையில் போட்டு விட்டு செல்ல வேண்டும். காரிய தடை விலகும்.

- Advertisement -

அந்த கரி துண்டை கையில் தொட்டால் லேசாக கருப்பு நிற சாம்பல் ஒட்டும் அல்லவா. அதை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் புருவம் அல்லது உச்சந்தலையில் தடவிக் கொண்டு சென்றால் காரியத்தடை விலகும்.

நீல நிற ஹேர்பிக் எல்லார் வீட்டு பாத்ரூமிலும் இருக்கும். முக்கியமான வேலைக்காக வெளியே செல்லும்போது காரிய தடை விலக வேண்டும் என்று நினைத்து, அந்த ஹேர் பிக்கை சிறிதளவு எடுத்து கழிவறவையில் ஊற்றி விட்டு செல்லுங்கள். நீங்கள் செல்லும் காரியம் சக்சஸ்.

- Advertisement -

முக்கியமான வேலைக்காக வெளியே செல்லும்போது பூஜை அறையில் இருக்கும் குலதெய்வ படத்திற்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு 1 டம்ளர் தண்ணீரை குலதெய்வத்தின் முன்பு வைத்து வேண்டுதல் வைத்து செல்லவும். இதை செய்தாலும் காரிய தடை விலகும். காகத்திற்கு சாதம் வைத்துவிட்டு சென்றால் காரிய தடை விலகும்.

கொஞ்சமாக கருப்பு எள்ளு எடுத்து ஒன்பது முறை உங்கள் தலையை சுற்றி கால் படாத இடத்தில் போட்டு விட்டு செல்லுங்கள். காரிய தடை விலகும். ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் உங்களுக்கு அடிக்கடி தோல்வியும், காரியதடையும் இருந்தால் தினமும் செருப்பை காலில் போடுவதற்கு முன்பு அதை தண்ணீரில் கழுவி விட்டு, காய வைத்து விட்டு அதன் பின்பு செருப்பு அணிந்தால் காரியத்தடை இருக்கவே இருக்காது.

இதையும் படிக்கலாமே: முருகனை 19 முறை இப்படி சுற்றி வந்தால் மனதிற்கு பிடித்த வேலை, கை நிறைய சம்பளத்தில் உடனே கிடைக்கும்.

வாழ்க்கையில் எதைத் தொட்டாலும் தோல்வி என்று இருப்பவர்கள் கூடுமானவரை கருப்பு நிறத்தில் செருப்பு அணியாமல் இருப்பது நல்லது. வேறு நிறத்தில் செருப்பு அணிந்து கொள்ளுங்கள். நிறைய பிரபலங்கள் வெள்ளை நிறத்தில் செருப்பு அணிந்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேலே சொன்ன எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களில் உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -