வீடு வாங்கும் யோகம் கொடுக்கும் வாராகி அம்மன் வழிபாடு

veedu katta
- Advertisement -

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லும் பகலும் உழைத்து சம்பாரித்து சேமித்து வைக்கும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். என்னதான் பணத்தை சேமித்து வைத்தாலும் ஒரு சிலரால் அவர்களுக்கு சொந்தமாக வீடு வாங்கும் சூழ்நிலை ஏற்படாது. அப்படியே சூழ்நிலை ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் அது தட்டிப் போய்விடும். இப்படிப்பட்ட தடைகள் அனைத்தும் நீங்கி சொந்த வீடு வாங்கக்கூடிய யோகத்தை பெறுவதற்கு வாராகி அம்மனை எப்படி வழிபாடு செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சப்த கன்னிகளில் மிகவும் முக்கியமான தெய்வமாக கருதப்படுபவர் தான் வாராகி அன்னை. வாராகி அன்னை ஐந்தாவது கன்னியாக திகழ்வதால் தான் அவளுக்கு பஞ்சமி திதி என்பது மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பஞ்சமி திதி அன்று நாம் எந்த முறையில் வாராகி அம்மனை வழிபட்டால் நம்முடைய சொந்த வீடு வாங்கும் கனவு நினைவாகும் என்று பார்ப்போம்.

- Advertisement -

வாராகி அம்மனுக்கு உகந்த நாளான பஞ்சமி திதி அன்று அவளுக்கு மிகவும் பிடித்த நேரமான மாலை நேரத்தில் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நம்முடைய வீட்டிலும் செய்யலாம் அல்லது வாராகி அன்னையின் ஆலயத்திலும் செய்யலாம். இதற்கு நமக்கு நல்ல தேங்காயாக ஆறு தேங்காய் வாங்க வேண்டும். இந்த தேங்காயில் நாரை உரித்து விட்டு அதை தண்ணீர் ஊற்றி கழுவி சரி பாதியாக உடைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் வாராகி அன்னையின் படம் இருந்தால் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து பூக்கள் சூடிக்கொள்ள வேண்டும். பிறகு 12 மூடிகளுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து அதில் நெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு வாராகி அம்மனுக்கு படையல் போட வேண்டும். இந்த தீபங்களுக்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதில் எருமை மாட்டு தயிரில் செய்யப்பட்ட உப்பு போடாத தயிர் சாதம், சேப்பங்கிழங்கு வறுவல், சுக்கு பானகம் இவற்றை தயார் செய்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

சுக்கு பானகத்தை நாம் எப்படி செய்வது? வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி விட்டு அதில் ஒரு ஏலக்காய் சிறிது சுக்கு இவற்றை தட்டிப் போட்டால் சுக்குப் பானகம் தயாராகிவிடும். இதையும் அம்மனுக்கு வைத்து விட்டு மனதார வழிபட்டு வரவேண்டும். இப்படி தொடர்ந்து 7 பஞ்சமிகள் தொடர்ச்சியாக வழிபட்டு வருபவர்களின் வேண்டுதல் நிறைவேறும். கனவான சொந்த வீடு கட்டும் யோகம் என்பது அவர்களை தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: நடக்காத காரியத்தை நடத்தி காட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு

அம்மனுக்கு மிகவும் பிடித்தமான இந்த நெய்வேத்தியங்களை படையலாக வைத்து அதனுடன் அம்மனுக்கு ஆறு தேங்காயில் 12 தீபங்களை போட்டு வழிபாடு செய்பவர்களின் வாழ்க்கையில் சொந்த வீடு கட்டி குடிபோகும் யோகம் ஏற்படும்.

- Advertisement -