சொந்த வீடு கட்ட துவரம் பருப்பை எப்படி தானம் செய்ய வேண்டும்? சொந்த வீடும், துவரம் பருப்பும்!

thuvaram-paruppu-sevvai-home
- Advertisement -

சொந்த வீடு கட்டுவதற்கு மிகவும் வலிமை வாய்ந்த பரிகாரங்கள் உண்டு. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் வாழ்நாளின் மிகப் பெரிய அலட்சியமாக இருப்பது தனக்கென ஒரு சொந்த வீடு அமைய வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். சொந்த வீடு பேரு அமைவது என்பது சிலருக்கு ஜாதக ரீதியாக பொருந்தி வந்துவிடும். ஆனால் பலரும் கடுமையான முயற்சிக்குப் பிறகு சொந்த வீடு என்னும் கனவை நனவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. உங்கள் சொந்த வீட்டு கனவை எளிதாக்கி தரும் இந்த சக்தி வாய்ந்த சுலபமான பரிகாரம் துவரம் பருப்பு எனும் தானியத்தை வைத்து செய்யப்படுகிறது. துவரம் பருப்பிற்கும், சொந்த வீட்டிற்கும் என்ன சம்பந்தம்? சொந்த வீடு கட்ட என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலில் சொந்த வீடு கட்டுவதற்கு செவ்வாய் பலம் பெற்றிருக்க வேண்டும். செவ்வாய் பகவான் பூமி காரகன் என்று அழைக்கப்படுகிறார். பூமி காரகனாக இருக்கும் இந்த செவ்வாய் பகவான் சொந்த வீடு வாங்கும் யோகத்தை ஒரு மனிதனுக்கு கொடுக்கிறார். செவ்வாய் அருள் இல்லாமல் சொந்த வீட்டை நாம் எளிதாக வாங்கிவிட முடியாது. இவருக்கு அதிபதியாக இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டு சொந்த வீடு கட்டியவர்கள் ஏராளம்.

- Advertisement -

முருகப் பெருமானை வழிபட்டு வருபவர்களுக்கு எளிதாக சொந்த வீடு கட்டும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதற்கான பிரத்தியேக பலன்களைக் கொடுக்கக் கூடிய கோவில்களும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் துவரம் பருப்பை வைத்து ஏன் சொந்த வீடு கட்ட பரிகாரம் செய்யப்படுகிறது தெரியுமா? நவதானியங்களில் ஒவ்வொரு தானியமும், ஒவ்வொரு கிரகங்களை குறிப்பதாக ஐதீகம் உண்டு.

எந்த கிரகத்தினுடைய அருள் பெற, எந்த தானியத்தை பயன்படுத்த வேண்டும்? என்கிற ஜோதிட நியதி உண்டு. அந்த வகையில் பூமி காரகனாக விளங்கும் செவ்வாய் பகவானுக்குரிய தானியம் துவரம் பருப்பு ஆகும். துவரம் பருப்பை தானம் செய்பவர்களுக்கு செவ்வாய் அருள் கிடைக்கும் என்பது நியதி. எனவே துவரம் பருப்பை வைத்து எவ்வாறு சொந்த வீடு கட்ட பரிகாரம் செய்யலாம்?

- Advertisement -

முதலில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உங்கள் வீட்டிற்காக நீங்கள் அந்த வாடகை பணத்தை உரிமையாளரிடம் மாதா மாதம் கொடுக்கிறீர்கள், எனவே நீங்கள் ஆளுமை செய்யும் வீட்டின் வாடகை பணத்தை துவரம் பருப்பில் வைத்துக் கொடுப்பது சிறந்த பரிகாரமாக இருக்கிறது. உங்கள் வீட்டின் சமையலறையில் இருக்கும் துவரம் பருப்பு டப்பாவில் ஒரு பாலித்தீன் பையில் திங்கட் கிழமை காலையில் பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பூமி காரகனாகிய செவ்வாய் பகவானுக்கு உரிய கிழமை செவ்வாய் என்பதால் மறுநாள் செவ்வாய்க்கிழமை அன்று நீங்கள் வாடகை பணத்தை மதியம் 12 மணிக்குள் கொடுங்கள். இவ்வாறு செய்ய முடியாதவர்கள் செவ்வாய்க் கிழமையில் முருகன் கோவிலுக்கு சென்று குறைந்தது ஆறு பேருக்கு துவரம் பருப்பை தானம் செய்ய வேண்டும். உங்களால் முடிந்த அளவிற்கு துவரம் பருப்பை நீங்கள் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் விரைவிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு என்கிறது ஆன்மீகம்! எனவே இந்த எளிய பரிகாரத்தை உரிய முறையில் செய்து பயனடையலாமே!

- Advertisement -