சூரிய பகவானின் முழுமையான அருள் கிடைத்து வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற இந்த ஒரு ராசிக் கல்லை இப்படி அணிந்தால் போதும்.

Rasi kal
- Advertisement -

ஒருவரின் உடலில் சூரிய கிரகத்தின் ஆதிக்கம் குறைந்தால் அவருக்கு கண், இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் என பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நமது ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதை தற்போது நவீன விஞ்ஞானமும் ஆராய்ச்சிகளின் மூலம் உண்மை என கண்டறிந்து ஏற்றுக் கொண்டுள்ளது. உலகத்திற்கே ஒளி தருபவரும், எல்லாவிதமான உயிர்களுக்கும் நன்மை அளிப்பவருமாக சூரிய பகவான் விளங்குகிறார். அத்தகைய சூரிய பகவானின் அருள் ஆற்றல் நமக்கு முழுமையாக கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பலவகையான அதிர்ஷ்டக் கற்கள் எப்படி பூமியிலிருந்து நமக்கே கிடைக்கின்றதோ, அது போல தான் மாணிக்கம் எனப்படும் இரத்தின கல்லும் பாறை படிமங்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு நமக்கு அழகான அதிர்ஷ்ட கல்லாக கிடைக்கிறது. தூய்மையான மாணிக்கக்கல் அவ்வளவு தெளிவாக இருக்காது. அந்தக் கல்லின் உள்ளே மெல்லிய கோடுகள் போல இழைகள் காணப்படும். இதை அடிப்படையாக வைத்து இயற்கை மாணிக்க கற்களையும், செயற்கை மாணிக்கக் கற்களையும் தரம் பிரிக்கின்றனர்.

- Advertisement -

பொதுவாக 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற சூரிய பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், ஜாதகத்தில் சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் நபர்களும் மாணிக்கக் கல்லை தங்கம் அல்லது வெள்ளி மோதிரத்தில் பதித்து, வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய ஹோரையில் தங்களது இடக் கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும்.

உண்மையான மாணிக்கக் கற்கள் கிடைக்கப் பெறாதவர்கள் அந்த மாணிக்கக் கல்லின் பலன்களை தரவல்ல கார்னெட் கற்களை தங்கம் அல்லது வெள்ளி மோதிரத்தில் பதித்து அணியலாம். நீங்கள் அணியும் அந்த மாணிக்க கல்லின் எடை 3 அல்லது அதிகபட்சம் 5 ரத்திகள் (காரட்) அளவிலான எடையில் இருந்தால் மட்டுமே சிறந்த பலனை தரும்.

- Advertisement -

யோக சாஸ்திரப்படி நமது இரண்டு கைகளிலும் இருக்கும் இரண்டு மோதிர விரல்களும் சூரியனின் அம்சம் கொண்டதாகும். மாணிக்கக் கற்களை வெள்ளி அல்லது தங்க மோதிரத்தில் பதித்து இந்த இரண்டு மோதிர விரல்கள், குறிப்பாக இடது மோதிர விரலில் அணிந்து கொள்பவர்களுக்கு சூரிய பகவானின் முழுமையான அருள் ஆற்றல் கிடைக்கும். உடலிலும், மனதிலும் ஒரு கம்பீர உணர்வு தோன்றும். சமுதாயத்தில் மதிப்பு உண்டாகும். அரசுத் துறைகளில் இருப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்க வழிவகுக்கும்.

கூச்ச சுபாவம், தயக்கம் போன்ற குணங்கள் நீங்கி, மனோ தைரியம் அதிகரிக்கும். தந்தையாலும், தந்தை வழி உறவுகள் மூலமாகவும் லாபங்கள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள், பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவார்கள். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றியும் அரசின் முழு உதவியும் கிடைக்கும்.

மேலும் மாணிக்கக் கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்பவர்கள் புயல், காற்று, இடி, மின்னல், மழை, கடல் சீற்றம், சூறாவளி, நிலநடுக்கம், தீவிபத்து போன்ற பேரிடர்களால் ஆபத்து ஏற்படாமல் காக்கும். எதிர்மறை எண்ணங்களை அறவே நீக்கும். தீய சக்திகள் அணுகாதவாறு தடுக்கும்.

இந்த மாணிக்கக் கல்லை அணிந்து கொள்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது துன்பம் ஏற்படுவதற்கு முன்பாகவே அடர் நிறத்தில் இருக்கின்ற மாணிக்கக் கல்லின் நிறம், சற்று மங்கி அவர்களை எச்சரிக்கை செய்யும் என அனுபவம் வாய்ந்த ராசிக்கற்கள் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -