சுரைக்காய் குருமா செய்முறை

sorakkai kurma
- Advertisement -

காலையில் எழுந்து டிபன் செய்வது மதியத்திற்கு சாப்பாடு செய்வது என்பதுதான் இல்லத்தரசிகளுக்கும் சரி வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் சரி மிகப்பெரிய சவாலாக திகழ்கிறது. வெளியில் ஆயிரம் பிரச்சனைகளை சமாளித்தாலும் வீட்டில் சமைப்பதற்கு என்ன செய்வது என்ற பிரச்சனை மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கும். வேலையும் அதிகமாக இருக்கக்கூடாது. நேரமும் செலவாக கூடாது. அதே சமயம் ருசியிலும் அருமையாக இருக்க வேண்டும். அனைத்திற்கும் ஏற்ற விதத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு முறை இப்படி சுரைக்காயை வைத்து குருமா செய்து பாருங்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் மிகவும் சுவையான எளிமையாக செய்யக்கூடிய சுரைக்காய் குருமாவை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளில் ஒன்றாக திகழ்கிறது. சுரைக்காயை வெயில் நேரங்களில் அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமன் செய்து விடும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சுரைக்காயை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுரைக்காயில் பல அற்புதமான குணங்கள் இருக்கிறது. இந்த சுரைக்காயை நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • சுரைக்காய் – 300 கிராம்
  • தேங்காய் துருவல் – 1/4 கப்,
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • பூண்டு – 5 பல்
  • இஞ்சி – 1 இன்ச்
  • பச்சை மிளகாய் – 3
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் சுரைக்காய், வெங்காயம், தக்காளி இவற்றை பொடியாக தனித்தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் இவை மூன்றையும் வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மீதம் இருக்கும் எண்ணையில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கி கரைந்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சுரைக்காயை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இதில் கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு இவற்றை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட வேண்டும். குக்கரில் இரண்டு விசில் வந்த பிறகு குக்கரை ஆப் செய்து விடலாம். இப்பொழுது நாம் தனியாக வதக்கி வைத்திருக்கும் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல், சோம்பு இவற்றையும் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் விசில் போன பிறகு குக்கரை திறந்து அதில் இருக்கும் சுரைக்காயை கரண்டியை வைத்து முடிந்த அளவிற்கு நன்றாக மசித்துவிட்டு கொள்ளுங்கள். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து குருமாவின் பதத்திற்கு ஏற்றார் போல் தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதை அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்ட பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை அதில் தூவி இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் குறைவான நேரத்தில் அதே சமயம் எல்லா விதமான சாதத்திற்கும் டிபன் ஐட்டத்திற்கும் உதவக்கூடிய ஒரு ஆரோக்கியமான சுரைக்காய் குருமா தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: பிரட் உப்புமா செய்முறை

ஆரோக்கியமான பொருட்களை வைத்து எளிதில் செய்யக்கூடிய சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வதன் மூலம் நேரமும் மிச்சமாகும், அதே சமயம் உடல் ஆரோக்கியமும் பெறும்.

- Advertisement -