தங்க நகைகளை அதிகமாக சேர்க்க ஆசைப்படும் பெண்கள் இதை செய்தால் போதும்.

konda-kadalai-lady
- Advertisement -

தங்கத்தின் மீது ஆசை இல்லாதவர் எவரும் கிடையாது. இதில் ஆண்கள் பெண்கள் என்ற பாராபட்சம் எல்லாம் எதுவும் கிடையாது. முன்பெல்லாம் தங்க நகையானது வெறும் அணிகலன்களாக மட்டும் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அது ஒரு கௌரவ பொருளாகவும், சமூகத்தில் நமக்கான அந்தஸ்தை உயர்த்திக் காட்டக் கூடியதாகவும் உள்ளது.

அது மட்டும் இன்றி அவசர காலத்தில் உதவக்கூடிய பொருட்களில் தங்கம் முக்கியமான நிலையில் உள்ளது. ஆகையாலே தங்கத்தை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இன்று எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது. இதில் இருப்பவர், இல்லாதவர் என்பதெல்லாம் கிடையாது. தங்கத்தின் தேவையானது அனைவருக்கும் அதிகமாகவே உள்ளது.

- Advertisement -

தங்கம் அதிகமாக சேரவேண்டுமெனில் நம்மிடம் தங்கம் தங்குவதற்கான யோகம் இருக்க வேண்டும். குறிப்பாக நமக்கு சொர்ண தோஷம் இல்லாமல் இருப்பது அவசியம். இந்த சொர்ண தோசமானது இருந்தால் எத்தனை பாடுபட்டாலும் தங்கம் வாங்க முடியாது. ஒரு வேளை வாங்கினாலும் அது தாங்காது. இவையெல்லாம் சரி செய்வதற்கான ஒரு எளிய பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தங்கம் சேர பரிகாரம்

முதலில் சொர்ண தோஷம் ஏற்பட கூடிய சில காரணங்களை தெரிந்து கொள்ளலாம். தங்க நகையை நினைத்த இடத்தில் கழற்றி வைக்க கூடாது. நம்முடைய நகையை பிறர் அணிந்து கொள்ள கொடுக்கக் கூடாது. அதே போல் பிறருடைய நகையும் நாம் வாங்கி அணிந்து கொள்ள கூடாது. தங்கம் வாங்குவது போதும் நேரம் பார்த்து வாங்க வேண்டும். அதுமட்டுமின்றி பெண்கள் மாதவிலக்கான நேரங்களிலும் தங்கம் வாங்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி கிரகங்களின் பாதிப்பாலும் சொர்ண தோஷம் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தங்கம் சேர செய்ய போகும் இந்த பரிகாரமானது, தங்கம் உங்களிடம் சேரவில்லை என்றாலும், சொர்ண தோஷம் இருந்தாலும் இதை செய்வதன் மூலம் நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு முதல் நாள் இரவே ஒரு கைப்பிடி வெள்ளை கொண்டை கடலை, ஒரு கைப்பிடி பச்சரிசி, ஒரு கைப்பிடி துவரம் பருப்பு மூன்றையும் ஒன்றாக தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள்.மறுநாள் காலையில் இதை சுத்தம் செய்த பிறகு குக்கரில் சேர்த்து நான்கு விசில் வரும் வரை விட்டு விடுங்கள். இவை எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்றாக குழைந்து விடும்.

- Advertisement -

அதன் பிறகு இதில் வெல்லத்தை சேர்த்து மேலும் நன்றாக குழைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதை பசு மாட்டிற்கு தானமாக கொடுக்க வேண்டும். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சொர்ண தோஷம் நீங்குவதுடன், தங்கம் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: வீடு தொடர்பான அனைத்து தோஷங்களும் நீங்க வாஸ்து நாளில் ஏற்ற வேண்டிய தீபம்.

இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து தங்கம் வாங்கும் யோகத்தினை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -