கஷ்டங்கள் தீர பைரவர் வழிபாடு

bhairavar white pepper
- Advertisement -

கஷ்டம் என்று கலங்கி நின்றால் உடனே வந்து காப்பாற்றக் கூடிய தெய்வங்களில் பைரவர் மிகவும் முக்கியமானவர் என்றே சொல்லலாம். ஒருவர் தாள முடியாத துன்பத்தில் சிக்கி இருக்கும் போது பைரவரை பற்றி விட்டால் போதும் நிச்சயம் அந்த துன்பக் கடலில் இருந்து அவரை காப்பாற்றி விடுவார். அப்படியான பைரவரை நம் பிரச்சனைகள் தீர எப்படி வழிபட வேண்டும் என்பது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கஷ்டங்கள் தீர பைரவர் வழிபாடு

இந்த வழிபாடு செய்ய எந்த கிழமையாக இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் ஆரம்பிக்கலாம். இந்த வழிபாடு செய்ய வெள்ளை நிற மிளகு, நீல நிற துணி, கருப்பு திரி, இலுப்பை எண்ணெய் இவையெல்லாம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் 9 அகல் விளக்கையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து நீங்கள் வாங்கி இருக்கும் வெள்ளை மிளகை பவுடர் செய்து கொள்ள வேண்டும். இந்த வெள்ளை மிளகு தூளை நீல நிற துணியில் வைத்து கட்டி 9 முடிச்சுகளாக தயார் செய்து கொள்ளுங்கள். இவற்றுடன் நாம் வீட்டில் வைரவருக்கு எள் சாதத்தை நெய்வேத்தியமாகக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த வழிபாட்டை சிவாலயத்தில் இருக்கும் பைரவருக்கு தான் செய்ய வேண்டும். ஆகையால் இவை எல்லாம் தயார் செய்து கொண்டு பைரவர் இருக்கும் ஆலயத்திற்கு செல்லுங்கள். வைரவருக்கு முன்பாக வெற்றிலை அல்லது ஆலம் இலை இரண்டில் ஏதாவது ஒன்றை வைத்து அதன் மேல் அகல் விளக்கை வைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி கருப்பு திரி போட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த அகல் விளக்கில் நீங்கள் தயார் செய்த மிளகு முடிச்சை போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த ஒன்பது அகலில் 9 மிளகு முடிச்சுடன் பைரவர் முன்பாக தீபம் எரிய வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் பைரவரை 9 முறை சுற்றி வர வேண்டும். ஒவ்வொரு சுற்றின் தொடக்கத்திலும் ஒரு கைப்பிடி எள் சாதத்தை எடுத்துச் பைரவரை சுற்றி வந்து பைரவருக்கு முன்பாக ஒரு பாத்திரம் வைத்து அதில் வைத்து விடுங்கள்.

ஒரு வேளை பைரவர் முன்பாக வைக்க முடியாது என்றால் சிவாலயத்தில் உள்ள கொடி மரத்திடம் வைக்கலாம். இப்படி ஒன்பது முறை கையில் எள் சாதத்துடன் பைரவரை சுற்றி வந்த பிறகு அவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் அந்த எள் சாதத்தை வைரவருக்கு (நாய்களுக்கு) உணவாக அளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சகல நன்மைகள் தரும் சோமவார வழிபாட்டு முறை

இந்த வழிபாட்டை 48 வாரங்கள் எவர் ஒருவர் தொடர்ந்து செய்து வருகிறாரோ அவர் வாழ்க்கையில் துன்பம் என்ற வார்த்தைக்கு வழியில்லை. இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -