பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைக்கு வருவதில் பிரச்சனை இருந்தாலும், சொத்து பிரிப்பதில் உங்கள் உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் இவை அனைத்திலிருந்தும் விடுபட்டு உங்கள் சொத்துகள் உங்கள் வசம் வரும்

sothu
- Advertisement -

இன்றைய காலத்தில் பணம் மட்டும் தான் மனிதனின் முதல் தேவையாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காகவே ஒவ்வொருவரும் தான் வேலை பார்க்கும் இடத்திலும் சரி, சமூகத்திலும் சரி போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். எவனொருவன் சீக்கிரமாக முன்னேறி தனது தகுதியை உயர்த்திக் கொள்கிறானோ அவன் மட்டுமே இந்த சமுதாயத்தில் முதன்மையானவனாக பார்க்கப் படுகிறான். எனவே தன்னுடன் இருப்பவர்களை காட்டிலும் தான் மேலே வரவேண்டும் என்பதற்காக உடன் இருப்பவர்களையும் கீழே தள்ளும் காலமிது. அவ்வாறு தான் குடும்ப சொத்துக்களாக இருந்தாலும், பூர்வீக சொத்துகளாக இருந்தாலும் அவற்றை ஒவ்வொருவரும் சரி சமமாக பங்கு போட்டுக்கொள்வதில் பல சிக்கல்கள் உண்டாகின்றன. இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பூர்வீக சொத்துக்களை சரிசமமாக பிரிக்க நினைக்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்க நான் தான் முதலில் பிறந்தவன் எனது குடும்பத்திற்கு தான் அதிக உரிமை என்று ஏன் இவ்வாறெல்லாம் கூறி தங்களுக்கு அதிக சொத்து கொடுக்க வேண்டும் என பிரச்சனையை கிளப்பி விடுவார்கள்.

- Advertisement -

அல்லது உங்களுக்கு சொந்தமான இடத்தை மற்றொருவர் ஆக்கிரமித்துக் கொண்டு உங்களுடன் பிரச்சனை செய்து கொண்டிருப்பார்கள். அல்லது நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்துக்கள் திடீரென உங்கள் கைவிட்டு போகின்ற அளவிற்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கும் இது போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு உங்கள் சொத்துக்கள் உங்களிடமே வந்து சேர செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால்,

உங்களுக்கு பிரச்சனை கொடுக்கக் கூடிய அந்த இடத்திலிருந்து சிறிது அளவு மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒன்பது கருவெற்றிலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மஞ்சள் நிற நூலை ஒன்பது துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலமரத்திலிருந்து ஆலங்குச்சி அல்லது ஆலம் விழுதை எடுத்து ஒன்பது துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒன்பது வேப்பம் கன்றுகளை வாங்கி கொள்ள வேண்டும். பின்னர் எடுத்து வந்த மண்ணை 9 பகுதியாக பிரித்து, சிறிது சிறிதாக ஒவ்வொரு வெற்றிலையிலும் வைத்து, மஞ்சள் நிற நூல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஆலமர விழுதையும் இதன் மேல் வைத்து கட்டிக்கொள்ள வேண்டும்.

பிறகு மரக்கன்று நடும் அளவிற்கு குழிதோண்டி ஒவ்வொருமரக்கன்றறையும் நடும் பொழுதும், அதன் அடிப்பகுதியில் மண் சேர்த்து கட்டி, வைத்துள்ள கருவெப்பிலை பொட்டலங்களில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு மரக்கன்று நடும் பொழுதும் அதன் அடியில் சேர்த்து விட வேண்டும். இவ்வாறு ஒன்பது மரக்கன்றுகளை நட்டு முடித்துவிடவேண்டும். இதில் உங்கள் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை மரக்கன்றுகள் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கின்றன. இதன் மூலம் உங்களுடைய சொத்துக்கள் எப்போதும் உங்கள் வசமே இருக்கும்.

- Advertisement -