அனைவருக்கும் பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவலை ஒரு முறை இந்தப் பக்கத்தில் செய்து பாருங்கள். இன்னும் அட்டகாசமாக இருக்கும்

potato
- Advertisement -

காய்கறிகளில் பலவிதமான வகைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது உருளைக்கிழங்கு தான். இந்த உருளைக்கிழங்கில் செய்யும் பொரியல், கூட்டு, வறுவல், குழம்பு இவை அனைத்தையுமே எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறோம். அதிலும் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என அனைத்து வகையான சாதத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த உருளைக்கிழங்கு வறுவல் ஒன்று மட்டும் இருந்தால் போதும். அவ்வளவு அருமையாக இருக்கும். இப்படி எந்த குழம்பு வைத்தாலும் தொட்டுக்கொள்ள இந்த உருளைக்கிழங்கை செய்துவிட்டால் போதும். வேலை முடிந்துவிடும். இவ்வளவு சுவையான உருளைக்கிழங்கு மசாலாவை ஒரு முறை இந்தப் பக்கத்தில் செய்து பாருங்கள். நீங்கள் எப்போதும் செய்யும் அளவில் செய்தாலும் நிச்சயம் பத்தவே பத்தாது. இதன் சுவை அவ்வளவு ருசியாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – அரை கிலோ, மிளகாய் தூள் – மூன்று ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 100 கிராம்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரைக்கிலோ உருளைக்கிழங்கை ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் நிரப்பி, முதலில் உருளைக்கிழங்கில் இருக்கும் மண் அனைத்தையும் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றின் மேல் உள்ள தோலை சீவி வைக்க வேண்டும்.

பிறகு இவற்றை வட்ட வடிவில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதாவது உருளைக்கிழங்கு சிப்ஸ் போடுவதற்கு ஏற்ற பக்குவத்தில் வட்ட வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 200 கிராம் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வட்ட வடிவில் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் பொரித்த உருளைக்கிழங்கை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு மீதமிருக்கும் எண்ணையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்.

பிறகு அதே கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு, எண்ணெயில் மூன்று ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் உடனேயே வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் இவை அனைத்தும் நன்றாக கலந்து, எண்ணெயில் பொரிந்து, மசாலா பக்குவத்தில் வரும் வரை தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும். பின்னர் இந்த மசாலா சிவந்து வரும் வரை அடுப்பை சிம்மில் வைத்திருக்க வேண்டும். பிறகு இறுதியாக ஒருமுறை கிளறி விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும். இப்படி சுவையான உருளைக்கிழங்கு வறுவலை ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள். நீங்கள் செய்த உருளைக்கிழங்கு முழுவதும் ஐந்தே நிமிடத்தில் தீர்ந்துவிடும்.

- Advertisement -