சில்லரை நாணயங்களை இப்படி மட்டும் வீட்டில் வைக்காதீங்க பணமே சேராது! லட்சுமி கடாட்சம் வர நாணயங்களை இப்படித்தான் வீட்டில் வைக்கணும் தெரியுமா?

lakshmi-coins
- Advertisement -

சில்லறை நாணயங்களை ஒருபோதும் வீட்டில் இப்படி மட்டும் வைக்கக்கூடாது என்று ஆன்மீகம் கூறுகிறது. ரூபாய் நோட்டுகளை விட சில்லறை நாணயங்களுக்கு மதிப்பு அதிகம். செல்வாதிபதி குபேரனுக்கு கூட சில்லரை நாணயங்களால் அர்ச்சனை செய்தால் நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது நியதி. அதே போல மகாலட்சுமிக்கும் நாணய அர்ச்சனை மிகவும் பிடிக்கும். இப்படி இருக்க வீட்டில் சில்லரை நாணயங்களை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்கிற ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டில் சில்லறை நாணயங்களை ஒருபோதும் ஆங்காங்கே சிதற விடக்கூடாது. நாணயங்கள் கீழே தரையில் தூக்கி வீசக்கூடாது. இது போல செய்யும் பொழுது உங்களிடம் இருந்து மகாலட்சுமி ஆனவள் நிரந்தரமாக விட்டு வெளியேறிவிடுவாள். குடும்பத்தில் வருமான தடை, தொழில் பாதிப்புகள், புதிய தொழில் துவங்கியிருந்தால் அதில் நஷ்டங்கள், இழப்புகள் போன்றவை ஏற்படக்கூடும் எனவே நாணயங்களை கண்டிப்பாக தூக்கி எறிய கூடாது.

- Advertisement -

இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை உண்டாக்கக்கூடிய சக்தி உண்டு. அது போல நாணயங்களுக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு. ரூபாய் நோட்டுகளை விட உலோகத்தால் ஆன இந்த நாணயங்கள் மகாலட்சுமிக்கு ரொம்பவும் இஷ்டமான பொருளாக இருக்கிறது. இதன் ஓசை எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கெல்லாம் குபேர வாசம் உண்டாகும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். எனவே வீட்டில் கண்டிப்பாக சில்லரை நாணயங்களின் சத்தம் கேட்பதில் தவறில்லை பெரும்பாலானவருக்கு இந்த குழப்பம் இருக்கும். சில்லரை நாணயங்கள், கொலுசு சத்தம், மெட்டி தரையில் படும் ஓசை, வளையல் ஓசை, பூஜை மணி அடிக்கும் ஓசை, மழலை சத்தம், பெண்களின் சிரிப்பு சத்தம் இவை எல்லாம் ஒரு வீட்டில் மகாலட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும் சத்தங்கள் ஆகும்.

இந்த சத்தங்களுக்கு ஒரு விதமான ஈர்ப்பு உண்டு. இது ஒரு விதமான காந்த அலைகளை உண்டு பண்ணும். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களையும், ஆற்றல்களையும் தூண்டிவிடும். இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் இருக்கும். எனவே தான் இந்த ஓசைகளை எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்குமாறு வீட்டில் செய்யுங்கள். பெண் குழந்தைகளுக்கு அதிகம் முத்து உள்ள கொலுசுகள் வாங்கி போடுவதும், திருமணமான பெண்களுக்கு மெட்டி போடுவதும், பெண்கள் கண்ணாடி வளையல் அதிகமாக அணிவதும் குடும்பத்தில் மகாலட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும்.

- Advertisement -

சில்லறை நாணயங்களை ஆங்காங்கே சிதற விடாமல், ஓரிடத்தில் சேகரித்து வையுங்கள். குறிப்பாக கண்ணாடி பாத்திரத்தில் சேகரிப்பதால் சுக்ர யோகமும் உண்டாகும். அது மட்டும் அல்லாமல் வெள்ளி கிண்ணத்தில் பூஜை அறையில் வெள்ளி நாணயங்களையும் அல்லது சில்லறை நாணயங்களையும் போட்டு வைக்கலாம். அதே போல ரூபாய் நாணயங்கள் ஒரு பாத்திரம் நிறைய போட்டு வைத்து அங்கு குபேரன் சிலை ஒன்றை நிறுவுங்கள். இதனால் குபேரன் மகிழ்ச்சி அடைவார். நாணயங்கள் எப்பொழுதும் பணத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் பணத்தை ஒரு இடத்திலிருந்து துடைத்து எடுக்கக் கூடாது. அங்கு சில சில்லறை நாணயங்களை ஆவது போட்டு வைக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

அரிசி, நாணயங்கள், ஊறுகாய், நெய், கல் உப்பு எண்ணெய், குடிக்கும் நீர் ஆகியவற்றை ஒருபோதும் வீட்டில் இல்லை என்கிற நிலை வரக்கூடாது, துடைக்க கூடாது. எப்பொழுதும் நீக்கமற இருக்க வேண்டிய பொருட்களில் இவையெல்லாம் அடங்கும். இந்த வகையில் நாணயங்களை நீங்கள் வீட்டில் பயன்படுத்துங்கள், வருமானம் பெருகுவதையும், லாபம் அதிகரிப்பதையும் உணரலாம். வீட்டில் மட்டும் அல்லாமல் தொழில் செய்யும் இடங்களிலும் சில்லறை நாணயங்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தான் பணம் சேருகிறது.

- Advertisement -