சனிக்கிழமையில் இந்த பாடலை பாடினால் சகல பிரச்சினைகளும் தீர்ந்து செல்வாக்கு உயரும் தெரியுமா?

hanuman-ramar-om
- Advertisement -

ஸ்ரீ ராமர் மீது அலாதியான பிரியம் உள்ளவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் கலியுக கடவுளாகவும் விளங்குகிறார். சிரஞ்சீவியாக வரம் பெற்ற ஆஞ்சநேயர் வழிபாடு செய்தால் நினைத்தது நடக்குமாம். அது மட்டுமல்லாமல் எந்த இடத்திலும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க கீழ்வரும் இந்த பாடலை ஒருமுறை பாடினால் போதும்!

hanuman-heart

ஸ்ரீ ராமஜயம் ஸ்தோத்திரம்:
அன்பர்கள் இடரை அகற்றிடவேண்டி அயோத்தியில் வந்தது ஸ்ரீ ராமஜயம்!
அசுரரை அழித்து அறந்தழைத்தோங்க அமைதி அளித்தது ஸ்ரீ ராமஜயம்!
ஆதவன் மரபில் அழகிய உருக்கொண்டு அவதரித்தது ஸ்ரீ ராமஜயம்!
ஆரணம் கமழும் வேதமாமுனிவன் அருளைப் பெற்றது ஸ்ரீ ராமஜயம்!

- Advertisement -

இருள் வடிவான அலகையைக்கொன்று மருள் ஒழித்தது ஸ்ரீ ராமஜயம்!
இருடியின் மகத்தை இலக்குவனோடு இமைபோல் காத்தது ஸ்ரீ ராமஜயம்!
ஈசனை ஒத்தகௌதமன் இல்லாள் இடரை ஒழித்தது ஸ்ரீ ராமஜயம்!
ஈசனோடு இந்திரன் இமையவர் எவரும் ஏத்தநின்றது ஸ்ரீ ராமஜயம்!

ramar

உண்மையின் வடிவாய் பீஜாக்ஷரத்தை ஓர்வாய் என்றது ஸ்ரீ ராமஜயம்!
உறுதியை கொடுத்து மறதியை கெடுத்து உலகத்தை காப்பது ஸ்ரீ ராமஜயம்!
ஊனமில் உடலும் உயரிய பொருளும் உடனே தருவது ஸ்ரீ ராமஜயம்!
ஊமைபோன்ற உயிர்களும் பேசும் உயர்வை அளிப்பது ஸ்ரீ ராமஜயம்!

- Advertisement -

என்றும் நமக்கு இன்பம் அளித்து இங்கே இருப்பது ஸ்ரீ ராமஜயம்!
எமக்கு இது சாது பிறர்க்கு இது தீது என்பது அற்றது ஸ்ரீ ராமஜயம்!
ஏதுமற்று ஏங்கி நிற்போர் தமக்கு ஏற்றம் தருவது ஸ்ரீ ராமஜயம்!
ஏன உருகொண்ட வனியை ஏந்தி இருக்கையில் வைத்தது ஸ்ரீ ராமஜயம்!

ramar

ஐம்பூதங்களை அடிமையாய்க் கொண்ட அனுமன் உரைத்தது ஸ்ரீ ராமஜயம்!
ஐம்முகத்தவனும் பங்கயத்தவனும் அமரரும் உரைப்பது ஸ்ரீ ராமஜயம்!
ஒருவழி நில்லாது அலையுறு மனத்தை ஒருவழிப்படுத்தும் ஸ்ரீ ராமஜயம்!
ஒருவனும் யான் எனநினை என்று உண்மை உணர்த்தும் ஸ்ரீ ராமஜயம்!

- Advertisement -

ramar

ஓங்காரப் பொருளே உண்மையின் வடிவாய் ஓர்வாம் என்பது ஸ்ரீ ராமஜயம்!
ஓவியம் தனிலும் காவியம் தனிலும் ஊக்கமளிப்பது ஸ்ரீ ராமஜயம்!
ஒளவையைப் போன்று அருணகிரிக்கும் அறத்தை உரைப்பது ஸ்ரீ ராமஜயம்!
ஒளடதம் போன்று படிபோர் தமக்கு அனைத்தும் அளிப்பது ஸ்ரீ ராமஜயம்!

ramar palam

ஆ முதல் ஔ வரை தொடங்கும் இந்த பாடல் ராமரை துதிப்பதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு எழுத்துக்களும் இருமுறை இரு வரிகளில் வரும். இப்பாடலை பாடுபவர்களுக்கு எத்தகைய துன்பங்களும் எளிதாக நீங்கி விடுவதாக ஐதீகம் உள்ளது. மேலும் பாடல் வரிகள் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீ ராமஜெயம் ஸ்தோத்திரம் என்று கூறப்படுகிறது.

sri ramar

இந்த பாடலைப் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீராமரின் படத்திற்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். கோவில்களுக்கு சென்று துளசி மாலை சாற்றி விட்டு பின்னர் அமர்ந்து இப்பாடலை பாடினாலும் நல்ல பலன்களை கொடுக்கும். ஸ்ரீ ராம ஜெயம் என்னும் மந்திரம் எவ்வளவு மகத்துவமானது என்பதை உணர்த்தவே இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது போல இருக்கும். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் தீர இறைவன் சரியான பாதையை காண்பிப்பார். நம்முடைய பாதை தென்படும் வரை நாம் அமைதியாக இருப்பதை தவிர வேறு வழியே இல்லை.

- Advertisement -