ஐந்து நாட்கள் தொடர்ந்து இந்த மந்திரத்தை எழுதினால் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும். அது என்ன மந்திரம்?

hanuman
- Advertisement -

ஸ்ரீராம ஜெயம் என்று சொல்லும் சக்திவாய்ந்த மந்திரத்தினை 108 முறை எழுதி அருகிலுள்ள அனுமனுக்கு மாலையாக செலுத்தினால் அனைத்து மங்கள காரியங்களையும் நடத்தித் தருவார் அனுமன். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை எழுதி பிரார்த்தனை செய்து வந்தால் நம் பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் அதிகரிக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள். ஸ்ரீராமரை விடவும் ஸ்ரீ ராம நாமத்திற்கு இருக்கும் சக்தி அதிகம். ஏனென்றால் ஸ்ரீராமர் சீதையைக் காண பாலம் கட்டி தான் இலங்கைக்குச் சென்றார். ஆனால் ராம நாமத்தினை சொல்லிக்கொண்டே இருக்கும் அனுமனோ விண்ணில் பறந்து இலங்கைக்குச் சென்றுவிட்டார். எனவே ராம நாமத்திற்கு அத்தனை சக்திகள் உண்டு என்கிறது புராணங்கள்.

ramar

ராவணன் சீதா தேவியை கடத்திச் சென்றபோது நீரை பிரிந்த மீனாக ஸ்ரீராமர் துடித்தார். எப்படியாவது ஜானகி தேவியை கண்டு விட வேண்டும் என்ற ஸ்ரீராமரின் துடிப்பை பார்த்து அனைத்து வானர கூட்டமே அழுதது. எனினும் எவருக்கும் இலங்கை வரை சென்று வர திறன் இல்லை. இவ்வாறு தனது பலமே தெரியாமல் ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்த வாயு புத்திரனான அனுமன் ஸ்ரீ ராமருக்காக தகர்க்க முடியாத பல தடைகளையும் கடந்து விண்ணில் பறந்து சென்று சீதாதேவியை சந்தித்து வந்தார்.

- Advertisement -

இவ்வாறு வாழ்வில் தவிர்க்கமுடியாத பல தடைகள், சோதனைகள் இருந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து நீங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி இந்த ஸ்ரீராமஜெயம் என்னும் மந்திரத்திற்கு உண்டு.

hanuman-2

எவராலும் செய்ய முடியாத காரியத்தை அனுமன் செய்தபோதும், பலராலும் அழிக்கமுடியாத துர்சக்திகளை அனுமன் அழித்த போதும் அவர் எப்போதும் உபயோகப்படுத்திய வார்த்தைகள் “ஸ்ரீராமஜெயம்” மற்றும் “ஜெய் ஸ்ரீ ராம்”. இவையே இப்பொழுது சக்தி வாய்ந்த மந்திரங்களாக மாறியுள்ளன.

- Advertisement -

உங்களின் மனம் சஞ்சலமாக இருக்கும் பொழுதும், நீங்கள் வருத்தத்தில் இருக்கும் பொழுதும், அல்லது ஏதேனும் ஒரு காரியம் உங்களுக்கு நிச்சயம் நடந்தேரவேண்டும் என்ற சமயத்திலும் ஸ்ரீ ராம ஜெயம் எனும் மந்திரத்தை 108 முறை காகிதத்தில் எழுத வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் எழுதி வர நிச்சயம் நீங்கள் நினைத்தது நிறைவேறும். நீங்கள் உங்களுக்கு வேண்டிய வேண்டுதலை மனதில் நினைத்து அந்தக் காரியம் நடந்து விட்டதாக உணர்ந்து இந்த மந்திரத்தை எழுத வேண்டும்.

hanuman-3

பிறகு உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேற ஏதேனும் ஏழைகளுக்கு தானம் அளிப்பது, அல்லது ஏதேனும் ஒரு குழந்தைக்கு கல்வி கொடுப்பது போன்றவற்றை செய்வதாக கூறி உங்கள் வேண்டுதலை மனதில் நினைக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு பலன் கிடைக்கும் பொழுது அதில் ஒரு பங்கினை மற்றவருக்கு தானமாக வழங்கினால் உங்களுக்கு கிடைத்த நன்மை உங்களை விட்டு விலகாமல் அதன் முழு பலனும் உங்களைச் சேரும். எப்பொழுதும் தங்களுக்காக வேண்டும் வேண்டுதலை விட மற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் வேண்டுதலுக்கு விரைவில் பலன் கிடைக்கும். எனவே ஸ்ரீராமஜெயம் என்று 108 முறை எழுதி வீட்டில் உள்ள அனுமன் படத்திற்கோ அல்லது கோவிலுக்குச் சென்று அங்கு இருக்கும் அனுமனுக்கோ மாலையாக சாத்திடலாம்.

- Advertisement -