வருடா வருடம் கருவறையை நோக்கி தானாக நகரும் அதிசய கல். ஆச்சர்யத்தில் பக்தர்கள்

adhisayakall
- Advertisement -

இந்தியாவில் உள்ள சில கோவில்களில் நிகழும் அதிசயங்களை பார்க்கையில் கலியுகத்திலும் கடவுள் மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த வகையில் வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்படும் ஒரு கோவிலில் எண்ணிலடங்கா பல அதிசயங்கள் நிகழ்கிறது. வாருங்கள் அந்த கோவிலை பற்றி பார்ப்போம்.

hasanamba temple

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ளது ஹசனாம்பா கோவில். பெங்களூரிலிருந்து இந்த கோவில் 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வருடா வருடம் தீபாவளி அன்றும் அதற்கு அடுத்த நாளும்தான் இங்கு மக்கள் வழிபடுவதற்கு அனுமதி உண்டு. அதன் பிறகு கோவில் நடைசார்த்தப்பட்டு மீண்டும் அடுத்த ஆண்டு தான் திறக்கப்படும்.

- Advertisement -

ஓராண்டு கழித்து ஆலயம் திறக்கப்படும்போது முந்தைய ஆண்டு தேவிக்கு வைத்த சந்தனம், குங்குமம் அப்படியே இருப்பதாகவும், நிவேதனமாக வைத்த அரிசி கெடாமலும், நந்தா விளக்கான நெய் விளக்கு எரிந்து கொண்டிருப்பதையும் கண்டு பக்தர்கள் பரவசப்படுகின்றனர்.

கோவில் உருவான கதை

- Advertisement -

நீண்ட நாட்களுக்கு முன்பு அந்தகாசுரன் எனும் அரக்கன் பிரம்மனை நினைத்து கடுமையான தவம் மேற்கொண்டான். கடும் தவத்தினால் ‘தன்னை யாராலும் அழிக்க முடியாது’ என்ற வரத்தினை பெறுகின்றான். அந்த வரத்தினால் அவனது அட்டூழியங்கள் மேலோங்கியது. பல கிராமங்களில் உள்ள மக்களை அழித்து சூறையாடினான்.

hasanamba

இதனைக் கண்டு கோபமடைந்த சிவன் அவனை கொல்ல முயன்றார். ஆனால் அந்தகாசுரனின் உடலிலிருந்து தரையில் விழும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஒவ்வொரு அரக்க அவதாரம் எடுத்து வந்து கொண்டே இருந்தது. இதனை சிவனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

- Advertisement -

சிவன், சக்தியான யோகேஸ்வரி மூலம் சப்த கன்னியர்களை உருவாக்கினார். பிராம்ஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டீஸ்வரி. இந்த சப்த கன்னியர்களின் உதவியினால் அந்த அரக்கன் அழைக்கப்பட்டான். அரக்கனை வதம் செய்ததில் களைப்படைந்த சப்தகன்னியர்கள் வாரணாசியிலிருந்து தெற்கு பக்கமாக பயணித்தனர். அந்த இடத்தில் உள்ள ஒரு அழகான காட்டில் ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். அந்த இடம் தான் இன்று ஹாசனாம்பா கோவிலாக மாறியிருக்கிறது.

இந்த கோவிலில் ஒரு அதிசய கல் உள்ளது. அந்த கல் வருடா வருடம் அம்மனை நோக்கி ஒரு இன்ச்(inch) நகர்ந்து செல்கிறது. இந்த கல்லிற்கு பின்னால் ஒரு கதையும் உண்டு.

hasanamba kovil

அதிசய கல்லின் கதை

இங்குள்ள அம்மனை வணங்க ஒரு பெண் வந்துள்ளாள். அவள் அம்மனின் ஒரு தீவிர பக்தை. அப்போது அவளை பின் தொடர்ந்து வந்த அவளின் மாமியார், வீட்டில் வேலை இருக்கும் சமயத்தில் கோவிலுக்கு வந்து என்ன செய்கிறாய் என அவளை அடித்திருக்கிறார். அந்த பெண் அழுதுகொண்டே வலிதாங்காமல் அம்மனை வேண்ட, அம்மன் அவளை கல்லாக மாற்றிவிட்டாளாம். அதனால் இந்த கல்லுக்கு மாமியார் மருமகள் கல் என்று பெயர்.

வருடா வருடம் இந்த கல் அம்மனை நோக்கி எப்படி நகர்ந்து செல்கிறது, எதற்காக நகர்கிறது, இது அம்மனை அடைந்தாள் என்னவாகும் என்பதெல்லாம் இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.

- Advertisement -