உங்க வீட்டில் இந்த சத்தம் எல்லாம் கேக்குதா? கேட்கலைனா பண பிரச்சினை இருக்கத்தான் செய்யும் மாத்தவே முடியாது!

mantra-sign-cash
- Advertisement -

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சத்தங்கள் நிறைந்துள்ளன. ஒரு சிறு சிறு விஷயங்களில் கூட எழும் இந்த சப்தங்கள் மெல்லிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. ஒலியின் இந்த அதிர்வலைகளால் உண்டாகக்கூடிய சக்தி அதிகம். நம் வீட்டிலும் ஒலி சார்ந்த நிறைய விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். அங்கனம் இந்த சத்தங்கள் எல்லாம் உங்கள் வீட்டில் கேட்டுக் கொண்டே இருந்தால் பணவரவிற்கு பஞ்சமே இருக்காதாம். அப்படியான சத்தங்கள் என்னென்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

எல்லோருடைய வீட்டிலும் பெண்கள் வளையல் அணிந்து இருப்பார்கள். வளையல் அணியாத பெண்களிடம் காசு, பணம் அவ்வளவு சீக்கிரம் தங்குவது இல்லையாம் எனவே தான் கண்ணாடி வளையல்களின் சத்தம் கேட்குமாறு பெண்கள் முந்தைய காலங்களில் நிறையவே வளையல் அணிந்து வந்தனர். இந்த வளையல் சத்தம் வீட்டில் கேட்டுக் கொண்டே இருந்தால் அங்கு சுபிட்சம் நிலைத்திருக்கும் என்கிறது சாஸ்திரங்கள். குறிப்பாக வளையல் அணியாமல் பூஜை அறையில் பெண்கள் விளக்கு ஏற்றவே கூடாது.

- Advertisement -

அதே போல பெண்களின் காலில் அணியும் மெட்டி மற்றும் கொலுசின் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும் இல்லங்களில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. நிறைய முத்து உள்ள கொலுசுகளை வாங்கி அணியும் பெண்களிடம் எப்பொழுதும் மகிழ்ச்சியை நிறைந்திருக்கும். இந்த சத்தம் வீட்டுக்குள் குழந்தைகள் பாதம் வழியாகவும் நாம் கேட்கும் படி அமைந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

வாஸ்துவிற்காக மாட்டி வைக்கும் இந்த வாஸ்து மணி ஓசையும் இனிய இசைகளை எழுப்பிக் கொண்டிருக்கும். இந்த இசையின் சத்தமும் நம் வீட்டில் கேட்டுக் கொண்டே இருந்தால் அங்கு அதிர்ஷ்டங்கள் நிறையும் என்கிற ஒரு சாஸ்திரம் உண்டு. இந்த இசை மனதில் எழும் அனாவசிய கிளர்ச்சியை குறைக்கும் மேலும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நமக்கு நேர்மறையாக சிந்திக்கும் எண்ணத்தை வலுவாக்கும் எனவே இச்சத்தங்கள் நம் வீட்டில் இருப்பது சுப பலன்களை கொடுக்க வல்லது.

- Advertisement -

இவை மட்டும் அல்லாமல் நம் வீட்டில் எப்பொழுதும் சில்லறை நாணயங்களின் ஓசையும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அடிக்கடி சில்லறை நாணயங்களை எண்ணுவது போன்ற செயல்களை செய்யலாம். மேலும் இந்த சில்லரை நாணயங்களின் சத்தம் குபேர பகவானுக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால் தான் நாணய அர்ச்சனை அவருக்கு செய்து வருகிறோம். எனவே நீங்கள் பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு சிறிய கண்ணாடி பௌலில் நாணயங்களை போட்டுக் கொண்டே வாருங்கள். அதன் இனிய ஓசை நம் வீட்டில் கேட்கும் பொழுது பணவரவானது தங்கு தடை இல்லாமல் வந்து சேருமாம்.

அதேபோல நம்முடைய பூஜை அறையில் எப்பொழுதும் இறைவனுடைய மந்திரங்கள் ஒலிக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். மந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை உண்டு பண்ண வல்லவை. அதனால் தான் கோவில்களில் நாம் நுழையும் பொழுதே நமக்கு நல்ல ஒரு வைப்ரேஷன் கிடைப்பதை நம்மால் உணர முடிகிறது. மந்திரங்களின் ஒலி அலைகள் நிரம்பி உள்ளதால் தான் கோவில்களில் நமக்கு மனநிம்மதியும் கிடைக்கிறது. அதே போல வீட்டிலும் எப்பொழுதும் குறைவான ஒலியில் மந்திரங்களை ஒலிக்க விடுங்கள். இது தொடர்ந்து நம் வீட்டில் கேட்டுக்கொண்டே இருக்கும் பொழுது மெல்லிய அதிர்வலைகள் நம்மை சுற்றிலும் உருவாகும். இந்த அதிர்வலைகள் நம்மை பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வைத்திருக்கும். இதனால் குடும்பத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளும் தீரும். இத்தகைய குறிப்பிட்ட ஓசைகள் நம் வீட்டில் எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருப்பது நமக்கு அதிர்ஷ்டம் தான்.

- Advertisement -