இந்த 5 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் வெற்றி தானாம் தெரியுமா? உங்க ராசியும் இதுல இருக்கான்னு பாத்துக்கோங்க!

astro-success
- Advertisement -

எல்லா விஷயங்களிலும் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் அமைவது கிடையாது. பல தோல்வி படிகளை தாண்டித் தான் வெற்றிப் படியை எட்ட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்க இந்த 5 ராசிக்காரர்கள் எதைத் தொட்டாலும் வெற்றி தான் வருமாம் தெரியுமா? அப்படியான ராசிகள் என்னென்ன? என்கிற ஜோதிடம் சார்ந்த பொது பலன்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் நன்மையாக நடப்பது கிடையாது. இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. அது போல வெற்றியும், தோல்வியும் இணைந்தே தான் நாம் பயணிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் பல படிகளில் சுலபமாக வெற்றி பெறக்கூடிய அதிர்ஷ்டசாலி ராசிகள் யாரெல்லாம்?

- Advertisement -

மேஷம்:
ராசியின் முதல் ராசியாக இருக்கக் கூடிய மேஷ ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ஜெயிப்பதற்காகவே ஓடிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் எத்தகைய தடைகளையும் தன்னுடைய நுண்ணறிவால் தகர்த்து எறிந்து வெற்றி அடைவார்கள். கடமை தான் முக்கியம் என்று கங்கணம் கட்டிக் கொள்ளும் திரியும் இவர்களுக்கு தோல்விகளை தாங்கும் சக்தி கிடையாது.

சிம்மம்:
சிம்மத்தை தன் ராசியாக கொண்ட இவர்கள் அரசாலும் யோகம் பெற்றவர்கள். எப்பொழுதும் தலைமை பண்பை கொண்டு விளங்குபவர்களாக இருப்பார்கள். தனக்கு கீழ் பல பேர் பணிபுரிய வேண்டும் என்ற கனவுடன் பயணிக்க கூடிய இவர்களுக்கு பல இடையூறுகள் வந்தாலும், அவை வந்த வழியே சென்று விடும். எதையும் போராடித் தான் இவர்கள் பெறுவார்கள். எனினும் வெற்றி வாய்ப்புகளை சாமர்த்தியமாக தன் கைக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்பவர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்த இவர்கள் எப்பொழுதும் எதையாவது கற்றுக் கொண்டே இருக்கக் கூடிய விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தாமல் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற முனைப்புடன் இருப்பார்கள் எனவே இவர்களுக்கு எப்பொழுதும் வெற்றி என்பது எட்டாக் கனியாக இருந்தது கிடையாது. மற்றவர்கள் முன்னிலையில் தனித்துவம் வகிக்க நினைக்கும் இவர்களுக்கு எப்பொழுதும் ஜெயம் தான்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் துரு துருவென இருப்பார்கள். எந்த பிரச்சனைகளையும் நிதானமாக கையாளுவதால் இவர்களுக்கு தோல்வி என்பது அவ்வளவு சீக்கிரம் வருவது கிடையாது. ஒரே சிந்தனையுடன் ஒரு விஷயத்தை செய்து முடிக்கும் வரை கவனமாக இருப்பார்கள். மனதை அலைபாய விடாமல் செய்ய நினைத்ததை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பதால் இவர்களுக்கு வெற்றிகள் பல வழிகளில் வந்து சேர்கிறது.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களும் தனித்துவம் மிக்கவர்களாக விளங்குவார்கள். தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு அவ்வப்பொழுது தோல்விகள் வந்தாலும் அதை மனம் தளராமல் எதிர்கொண்டு எப்படியாவது வெற்றியாக மாற்றிக் கொள்வார்கள். எதற்காகவும் மனம் கலங்காமல் இருப்பதால் இவர்களுடைய எண்ணங்கள் பெரிய பிரச்சனைகளை சந்திக்காமல் சுலபமாகவே நிறைவேறுகின்றன. கொஞ்சம் சுயநலம் பார்க்காமல் இவர்கள் தொடர்ந்து நியாயமான பாதையில் சென்றால் இவர்களை வெற்றி கொள்வது மற்றவர்களுக்கு கடினமாக இருக்கும். அத்தகைய ராசிக்காரர்களான இவர்களுக்கு எப்பொழுதும் வெற்றி வசப்படுகிறது.

- Advertisement -