சூடத்தை இப்படி ஏற்றி இறைவனை வீட்டிற்குள் அழையுங்கள்! தெய்வங்கள் மனம் விரும்பி உங்கள் வீட்டிற்குள் குடியேறும்.

sudam
- Advertisement -

வீடு என்று இருந்தால் அந்த இடத்தில் நிச்சயமாக இறைசக்தி நிறைந்திருக்க வேண்டும். இறைசக்தி இல்லாத வீட்டில் நிச்சயமாக சாத்தான் தான் குடிகொண்டிருக்கும். வறுமை, சண்டை சச்சரவு, நிம்மதி இல்லாமல் நோய்நொடிகளுடன் அவதிப்படுவது இவை அனைத்துமே சாத்தானின் உருவம் தான். நம்முடைய வீட்டில் சாத்தான் ரூபத்தில் குடியிருக்கும் இந்த எதிர்மறை ஆற்றலை எல்லாம் விரட்டியடிக்க, இறை சக்தியை வீட்டிற்குள் குடியேற்ற வாரத்தில் ஒரு முறை உங்கள் வீட்டில் சூடத்தை இப்படி ஏற்றி இறை வழிபாடு செய்தாலே போதும். தெய்வங்கள் உங்கள் வீடு தேடி வரும். விரும்பி உங்கள் வீட்டிலேயே குடியிருக்கும்.

மனிதர்களாக இருப்பவர்கள் கூட விருப்பம் இல்லாத இடத்தில் தங்களுடைய வாழ்க்கையை நடத்த மாட்டார்கள். பிடிக்காத இடத்தில் தங்க மாட்டார்கள். இதேபோல் தான் தெய்வங்களும் தங்களுக்கு விருப்பமில்லாத தங்களுக்கு பிடிக்காத இடத்தில் நிச்சயமாக தங்காது. நம்முடைய வீட்டை தெய்வங்களுக்கு பிடித்த இடமாக மாற்றுவது எப்படி.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை இந்த இரண்டு நாட்களில் உங்களுக்கு எந்த கிழமையில் இந்த சூடத்தை ஏற்ற முடியுமோ அந்த கிழமையில் ஏற்றலாம். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, ஒரு தாம்பூலத் தட்டில் பன்னீர் ஊற்றி, அந்த பன்னீரில் சிவப்பு சந்தனத்தை கரைத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே ஒரு வெற்றிலையை வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலையின் மேலே ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து, கூடவே ஒரு சாதாரண கற்பூரத்தையும் வைத்து ஏற்றி விடுங்கள்.

sudam

இந்த ஆரத்தியை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே அப்படியே வைத்துவிட வேண்டும்.  இறைவனுக்கு 3 முறை ஆரத்தி காண்பித்து அப்படியே வைத்து விடுங்கள். இந்த சூடம் எரிகின்ற சமயத்தில் சூட்டிலிருந்து புகை வெளிப்படுகின்ற சமயத்தில் நீங்கள் பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய வீட்டிற்குள் இறைவனை அழைக்க வேண்டும். பூஜை அறையில் இறைசக்தி நிறைந்திருக்க வேண்டும் என்று மனதார வேண்டி இறைவனை அழைக்க வேண்டும்.

- Advertisement -

சூடம் எரிந்து அனைந்ததும் இந்த ஆரத்தியை கொண்டுபோய் வீட்டு வாசலில் கொட்டி விடலாம். நம்முடைய வீடு பார்ப்பதற்கு சுத்தமாக இருந்தாலும், நம் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலும் கெட்ட வாடையும் நம் வீட்டில் இருக்கத்தான் செய்யும். அதை நம்மால் உணர முடியாது. கண்ணுக்கே தெரியாத உணரவே முடியாத எதிர்மறை ஆற்றலை கூட விரட்டியடிக்க கூடிய சக்தி இந்த பூஜைக்கு உண்டு.

aarathi

நீங்கள் ஏற்றக்கூடிய பச்சைக் கற்பூரம் சூடம் வெற்றிலை சிவப்பு சந்தனம் பன்னீர் கலந்த வாசத்திற்கு வீட்டில் இருக்கும் சாத்தான் தானாக வெளியேறிவிடும். தெய்வங்கள் நிம்மதியாக உங்கள் வீட்டிற்குள் குடியேறும் முயற்சி செய்து பாருங்கள். நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -