சுகபோகமான வாழ்க்கையை பெற வெள்ளிக்கிழமை சுக்கிர வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள்.

sukkiran
- Advertisement -

சில பேருக்கு வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் கூட எதுவுமே கிடைக்காது. ஆனால் சில பேர் வாழ்க்கையில் கஷ்டப்படாமல் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். பரம்பரை பரம்பரையாக சொத்து, உழைக்காமலேயே சொத்தின் மூலம் வரக்கூடிய வருமானம், என்று ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்திருக்கும். இதற்கெல்லாம் காரணம் என்ன. சுக்கிரன் யோகம் அவர்களுடைய ஜாதகத்தில் இருப்பது தான். நமக்கும் சுக்கிர யோகம் அடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்காக உழைக்காமல் சொத்துபத்து வரவேண்டும் என்று நாம் நினைக்கக் கூடாது. உழைக்க வேண்டும் அதேசமயம் சுகபோக வாழ்க்கையையும் வாழ வேண்டும். அதற்கு சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமைகளில் எப்படி வழிபாடு செய்வது.

Elakkai

சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்தமான பொருள் என்றால் அது ஏலக்காய். ஏலக்காய் வாசம் நிறைந்த இடத்தில் எல்லாம் சுக்கிரபகவான் கட்டாயமாக வசியமாவார். இந்த ஏலக்காய்களை வாங்கி உள்ளே இருக்கும் விதையை மட்டும் எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். ஏலக்காய் தோலை நீக்கிவிடுங்கள். அந்த ஏலக்காய் தூளை கொஞ்சமாக பன்னீரில் குழைத்து தினமும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நெற்றியில் சுக்கிர பகவானை நினைத்து இட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு பூஜை அறையில் தீபம் ஏற்றி மகாலட்சுமிக்கு சிவப்பு நிற செம்பருத்தி பூவை சூட்டி சுக்கிர பகவானை மனதார பிரார்த்தனை செய்து வரவேண்டும். வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை பூஜையில் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்கள். ‘ஏலக்காய் பொடியை நெற்றியில் இட்டுக் கொள்ள போகிறீர்கள். சிவப்பு நிறப் பூவை மகாலட்சுமிக்கு சூட்ட போகிறீர்கள். இந்த 2 வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி சுக்கிர பகவானை வழிபாடு செய்தால் சுக்கிர பகவான் உங்கள் வசியமாவார். நெற்றியில் இந்த ஏலக்காய் வசிய திலகத்தை இட்டுக்கொண்டு என்ன வரங்களை நாம் மகாலட்சுமியிடமும் சுக்கிரபகவானிடமும் கேட்டாலும் அது நமக்கு சீக்கிரத்தில் கிடைக்கும்.

sembaruthi

உங்களுடைய ஜாதக கட்டத்தில் சுக்கிர யோகம் இல்லை என்றாலும் சரி, வாழ்க்கையை சுகமாக வாழலாம். அதாவது பணம் காசு சம்பாதிக்க உழைத்து தான் ஆகவேண்டும். பெரும்பாடு பட வேண்டாம். உங்கள் கடமைகளை நீங்கள் செய்தால் உங்கள் தேவைக்கு ஏற்ப வருமானமும் வந்து கொண்டே இருக்கும். இதே போல் தினமும் ஏலக்காய்களை நம்முடைய உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.

- Advertisement -

ஏலக்காயை பொடி செய்து வைத்துக்கொண்டு, சிறிதளவு ஏலக்காய் பொடியை தினமும் பாலில் கலந்து குடித்துவர நம்முடைய உடலில் இருக்கும் பீடை விலகி நம்முடைய உடல் வசீகரமான உடலாக மாறும் என்று சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவர்கள் இதையும் முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு வெள்ளிக்கிழமை செய்துவிட்டு அடுத்த வெள்ளிக்கிழமையே, நாம் எதிர் பார்த்தது நடந்துவிட வேண்டும் என்பது மிகவும் தவறு. தொடர்ந்து வழிபாட்டினை செய்து வாருங்கள். நிச்சயமாக பதினோரு வெள்ளிக்கிழமை இப்படி மகாலட்சுமி வழிபாட்டையும், சுக்கிர வழிபாட்டையும் மேற்கொண்டால் நிச்சயமாக வாழ்க்கையில் ஏதாவது ஒரு மாற்றத்தை உணர முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -