சுகபோகமான ராஜ வாழ்க்கையைப் பெற, சுக்கிர யோகம் அடிக்க, தினமும் நெற்றியில் இதை இட்டு வந்தாலே போதுமே. நீங்கதான் இந்த உலகத்துக்கே ராஜா.

sukkiran
- Advertisement -

இந்த உலகத்தில் வாழும் மத்தவங்க, நம்மை ராஜாவாக நினைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம் மனதிற்கு நாம் ராஜாவாக இருந்தாலே போதுமே! நம்முடைய வாழ்க்கையை ராஜ வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளலாம். குடிசையில் வாழ்ந்தாலும் நிம்மதியாக வாழும் வாழ்க்கையே ராஜ வாழ்க்கை. மாட மாளிகையில் வாழ்ந்து மனநிம்மதி இல்லாமல் சந்தோஷம் இல்லாமல் வாழ்ந்தால், அவனால் நிச்சயமாக ராஜ வாழ்க்கையை வாழ முடியாது. ஆக நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு, நம்முடைய தகுதிக்கு தகுந்தவாறு வருமானத்தை பெற இல்லற வாழ்க்கையை இனிமையாக வாழ, சுக்கிர பகவானின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கான ஒரு வழிபாட்டு முறையை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

sukkiran

இந்த பரிகாரத்தை செய்தால் ஓவர் நைட்ல கோடீஸ்வரன் ஆகி விடுவீர்கள் என்று சொல்ல வரவில்லை. இருக்கும் கடன் அனைத்தும் முழுமையாக அடைந்து விடும் என்று சொல்ல வரவில்லை. இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வருமானத்திற்கு வழி கிடைக்கும். கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வராது. நிச்சயமாக உங்களுடைய தகுதிக்கு ஏற்ற நல்ல வாழ்க்கையை வாழ்வீர்கள்.

- Advertisement -

சுக்கிர பகவானின் அருள் கிடைத்தால் நம்மால் நிச்சயமாக நல்ல வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். சுக்கிர பகவானின் அருளை எப்படி பெறுவது. முதலில் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில் சுக்கிர பகவானை மனதார வழிபாடு செய்யவேண்டும். கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிரனுக்கு ஒரு மண் அகல் தீபத்தில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சுக்கிரனின் அருளை முழுமையாகப் பெறலாம். இத்தனை வாரங்கள் தான் இதை செய்ய வேண்டும் என்ற எந்த கணக்கும் கிடையாது. உங்களால் முடிந்த வரை இந்த தீபத்தை வாரம் வாரம் ஏற்றி கொண்டே வாருங்கள்.

athimathuram

அடுத்தபடியாக சுக்கிரனுக்கு உண்டான ஒரு பொருள். மூலிகைப் பொருள் என்று வைத்துக் கொள்வோம். சுக்கிர பகவானின் மூலிகை பொருளாக அதிமதுரம் சொல்லப்பட்டுள்ளது.
அதிமதுரம் சிறிய சிறிய குச்சிகளாக அதாவது, சிறிய சிறிய கட்டிகளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த அதிமதுரம் பொடியாக கிடைத்தாலும் பரவாயில்லை. அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அந்த பொடியை லேசாக தண்ணீர் விட்டு குழைத்து சுக்கிர பகவானை நினைத்து தினம்தோறும் நெற்றியில் இட்டு வந்தால் உங்களுக்கு சுக்கிர யோகம் உண்டாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. கட்டையாக கிடைத்தால் அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மஞ்சள் இழைக்கும் கல்லில் இழைத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.

sukran

அழகு சம்பந்தப்பட்ட அழகு சார்ந்த விஷயங்கள் சுக்கிரனுக்கு இணையாக சொல்வார்கள். இந்த அதிமதுரப் பொடியை நாம் சருமத்தில் பயன்படுத்தி வந்தால் அழகும் மேம்படும் என்று சொல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -