தினமும் இந்த திலகத்தை வைத்தால் போதும் சுக்கிர யோகம் பெற்று ஆனந்தமான,அழகான வாழ்க்கை அமைவதோடு நீங்கள் கனவிலும் நினைத்து பார்க்க உயரத்தை தொடலாம்.

thilagam sukran
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் யோகம் என்பது மிகவும் முக்கியமானது. அந்த யோகம் நமக்கு கிடைத்து விட்டால் நம் வாழ்க்கையில் நாம் பல முன்னேற்றங்களை அடையலாம். சிலருக்கு ஜாதக ரீதியாக யோகங்கள் இருக்கும். சிலருக்கு அந்த மாதிரி எந்த யோகமும் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் சில பரிகாரங்களை மேற்கொண்டு யோகத்தை வரவழைத்துக் கொள்ளலாம். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் சுக்கிர யோகம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த முன்னேற்றம் ஏற்படுவதற்கு நம்முடைய முயற்சிகள் முக்கியம் என்றாலும், கிரகநிலை படி சுக்கிரனின் அருள் கண்டிப்பாக வேண்டும். சுக்கிரனின் அருளுக்கே மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும் என்றால், சுக்கிர யோகம் கிடைத்தால் நம் வாழ்க்கை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு முன்னேறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

- Advertisement -

ஒருவரை வசியம் செய்வதற்கு மை வைக்க வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வாறு மனிதர்களை மட்டுமல்ல தெய்வத்தையும் வசியம் செய்வதற்கு நாம் மையை தான் பயன்படுத்த வேண்டும். சுக்கிரனை வசியம் செய்து சுக்கிர யோகம் பெறுவதற்கு செய்யக்கூடிய மையை பற்றி பார்ப்போம். இந்த மையை தயாரிப்பதற்கு மூன்று பொருட்கள் தேவைப்படுகின்றன. அவை அரகஜா, ஏலக்காய் மற்றும் செம்பருத்தி பூ. இந்த மையை ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் தயாரிக்கலாம். அரகஜா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இது மிகவும் குறைவாகவே இருக்கும். ஆகையால் இதை மூன்று டப்பாக்களை வாங்கிக் கொள்ளுங்கள்.

அடுத்து மூன்று ஏலக்காய் எடுத்து அதனுள் இருக்கும் விதைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு செம்பருத்தி பூவை எடுத்து, அதில் இருக்கும் மகரந்தத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மூன்று பொருட்களையும் மஞ்சள் உரசும் கல்லில் வைத்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மையை நாம் எடுத்து இரும்பு இல்லாத வேறு உலோக டப்பாவில் வைக்க வேண்டும் (இரும்பு இருந்தால் அதன் சக்தி குறைந்து விடும்).

- Advertisement -

இந்த மையை நாம் தினமும் குளித்து முடித்து விட்டு அன்றாட வழிபாட்டை முடித்த பிறகு நம்முடைய புருவ மத்தியில் வைக்க வேண்டும். பிறகு அதன் மேல் குங்குமத்தை வைத்துக் கொள்ளலாம். மை வைத்தது தெரியாமல் இருக்கும். அவ்வாறு புருவ மத்தியில் வைக்க விருப்பம் இல்லாதவர்கள் உச்சந்தலையில் புருவத்திற்கு நேராக இருக்கும் இந்த மையை வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: மூன்று விரலி மஞ்சள் உங்கள் கையில் இருந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலையே இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். திடீர் பணவரவை ஏற்படுத்தும் அதிசய பரிகாரம்.

இவ்வாறு வைப்பதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய தீய எண்ணங்கள் அனைத்தும் மாறும். நல்ல எண்ணங்கள் ஏற்படும். நல்ல வழிகள் பிறக்கும். சுக்கிரனின் யோகம் கிடைத்து நம் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் பல ஏற்படும். வசிய சக்தி ஏற்படும். நல்ல பல திருப்பங்கள் வாழ்க்கையில் ஏற்படுவதை கண்கூடாக பார்க்கலாம்.

- Advertisement -