மூன்று விரலி மஞ்சள் உங்கள் கையில் இருந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலையே இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். திடீர் பணவரவை ஏற்படுத்தும் அதிசய பரிகாரம்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் பெரிதாக கேட்கும் ஒரு வார்த்தை பணம். இந்த பணம் என்ற ஒற்றை காகிதம் கையில் இல்லை என்றால் ஒவ்வொருடைய வாழ்க்கையும் நடை பிணம் போன்றது தான். பணத்தை மட்டும் வைத்து எதுவும் செய்ய முடியாது என்று ஒரு புறம் கூறினாலும், பணம் இல்லாமலும் எதுவும் செய்ய முடியாது. ஆகையால் இந்த பணத்தை நாம் சம்பாதித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். எவ்வளவு தான் நாமும் பாடுபட்டு சம்பாதித்தாலும் கூட அவசர தேவை என்று வரும் போது நாம் யாரிடமாவது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறோம்.

ஏதாவது ஒரு அவசர தேவைக்கோ அல்லது நம்முடைய ஆசைக்காக ஏதேனும் ஒன்றை வாங்கும் போதோ, நாம் நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கும் போதும் பணம் ஒரு பெரும் தடையாக இருக்கிறது. இனி பணத்தடை என்ற வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் இல்லாமல் இருக்க சில எளிய தாந்த்ரீக முறைகள் உள்ளது. அது குறித்தான விளக்கங்களை ஆன்மீகம் குறித்த இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

திடீர் பணவரவு ஏற்பட
இந்த பரிகாரத்தை செய்ய நீங்கள் எப்போது வீடு துடைத்தாலும் அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பையும் சிறிது மஞ்சளையும் சேர்த்து கலந்த பிறகு அந்த தண்ணீரை கொண்டு வீடு துடைத்து விடுங்கள். இதை வாரம் ஒரு முறை கட்டாயம் செய்து விடுவது நல்லது. இதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்குவதுடன் மஞ்சள் குரு பகவானுக்குரிய நிறம் இதனால் அங்கு பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

அடுத்ததாக ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் துளசி இலைகளையும், 11 கிராம்பையும் வைத்த பிறகு இதை ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். அதை உங்கள் உள்ளங்கையில் வைத்து கண் மூடி சிறிது நேரம் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றும் உங்களுக்கு தேவையான நேரத்தில் தேவைக்கு பணம் கிடைக்க வேண்டும் என்று மனதார உங்கள் பிரார்த்தனையை வைத்த பிறகு இந்த மூட்டை அரிசி பானையில் போட்டு வைத்து விடுங்கள். இதை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி வந்தால் போதும். இந்த மூட்டையும் பணத்தை ஈர்க்கும் சக்தியை தரும்.

- Advertisement -

இந்த இரண்டு பரிகாரங்களை விட, இந்த பரிகாரம் கொஞ்சம் அதிகமான பலன்களை விரைவில் கொடுக்கக் கூடியது. இந்த பரிகாரத்திற்கு மூன்று விரலி மஞ்சள் தேவை. ஒரு சிகப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று விரலி மஞ்சள் வைத்த பிறகு கொஞ்சம் கற்கண்டை வைத்து விடுங்கள். இதை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக முடிச்சாக கட்டி ஒரு டப்பாவில் போட்டு மூடி விடுங்கள்.

இதை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இதனால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதோடு நீங்கள் ஏதாவது ஒரு செயலை தொடங்கவோ அல்லது நல்ல காரியத்திற்கும் பணம் தேவை என்றால் அதற்காக நீங்கள் அலைய வேண்டிய அவசியமும் இருக்காது. உங்களுக்கு தேவையான பணம் எப்படியும் உங்களுக்கு வந்து சேரும். இந்த பரிகாரம் முடிச்சு 48 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயமாக மாற்றி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து மகாலட்சுமி அருள் கிடைப்பதற்கு இந்த ஒரு தீபத்தை வைரவருக்கு ஏற்றி வழிபட்டாலே போதும். சகல செல்வங்களும் பெற்று நிறைவோடு வாழலாம்.

இந்த எளிய பரிகார முறைகளை நம்பிக்கையுடன் செய்து வீட்டில் பணப்புழக்கத்தையும் திடீர் பரவையும் ஏற்படுத்தி கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழுங்கள் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -