பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபடுபவர்களா நீங்கள்? அப்படியானால் இனி இந்த முறையில் வழிபட்டு பாருங்கள் மகாலட்சுமி தாயாரின் அருளோடு சுக்கிர யோகத்தையும் சேர்த்தே பெறலாம்.

poojai arai kannadi
- Advertisement -

பூஜை அறையில் கண்ணாடியை வைத்து வழிபடும் முறை காலம் காலமாக பின்பற்றி வருகின்ற ஒன்று தான். ஒரு சில இடங்களில் தெய்வப் படங்களுக்கு நிகராகவே இந்த கண்ணாடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்யப்படுகிறது. பூஜை அறையில் கண்ணாடி இருப்பது அத்தனை விசேஷமானதாகவும் பார்க்கப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் இதை பெரும்பாலானோர் பின்பற்றியும் வருகிறார்கள். அப்படி வைக்கும் கண்ணாடியை இந்த முறையில் வைத்து வணங்கும் போது தாயாரின் அனுகிரகத்தோடு சுக்கிர திசையும் சேர்த்தே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் கிடைத்தாலே அங்கு செல்வ கடாட்சம் நிறைந்து இருக்கும். அந்த குடும்பத்தில் இல்லை என்ற நிலை இல்லாது உயர்ந்து இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இத்துடன் சேர்ந்து சுக்கிர யோகமும் கிடைத்து விட்டால் அவர்களுடைய வாழ்க்கையின் தரம் பற்றி சொல்லவே தேவையில்லை. நினைத்த செயல் அனைத்தையும் வெற்றியில் முடிப்பார்கள் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் இதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

கோடீஸ்வர யோகத்தை பெற
இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை சுக்கிர கோரையில் அதாவது காலை 6 மணி முதல் ஏழு மணிக்குள்ளாக செய்து முடிக்க வேண்டும். இந்த நேரத்தில் செய்யும் பொழுது தாயாரின் அனுகிரகமும் சுக்கிரருடைய அனுகிரகத்தையும் சேர்த்து பெறலாம். இப்போது இந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த வழிபாட்டை செய்வதற்கு ஒரு மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் தாயார் பச்சை நிற புடவை உடுத்தி இருப்பது போன்ற படம் கிடைத்தால் மிகவும் நல்லது இந்த படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்து வைத்து விடுங்கள். அதன் பிறகு பக்கத்தில் ஒரு வட்ட வடிவிலான கண்ணாடியை வைத்து விடுங்கள்.

- Advertisement -

அந்தக் கண்ணாடிக்கு முன்பு ஒரு சிறிய வெள்ளித் தட்டு வெள்ளித் தட்டு இல்லாதவர்கள் பித்தளை காப்பர் போன்றவற்றை காப்பர் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சில்வர் தட்டை பயன்படுத்தக் கூடாது. அந்த தட்டு கொஞ்சம் பழங்கள் பூக்கள் என நிரப்பி வைத்த பிறகு அதில் முழுவதும் சில்லறை காசுகளை நிரப்பி வைத்து விடுங்கள். இந்த சில்லறை காசுகள் பழங்கள் இதற்கு இடையில் ஒரே ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி விடுங்கள்.

இந்த தட்டில் இருக்கும் பழங்கள் சில்லறை காசு தீபம் அனைத்தும் கண்ணாடியில் தெரிய வேண்டும். அத்துடன் உங்கள் முகமும் இந்த பொருட்களுடன் சேர்த்து கண்ணாடியில் தெரிவது போல் நீங்கள் அமர்ந்து தெய்வத்தை வணங்க வேண்டும். இந்த முறையில் வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்து வந்தால் தாயாரின் அனுகிரகமும் சுக்கிர யோகமும் கிடைத்து உங்கள் வீட்டில் பணமழை பொழிய தொடங்கி விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: பணத்தைப் பிறரிடம் கொடுத்து ஏமாந்து விட்டீர்களா? எப்படி திரும்ப பெறுவது என்று தெரியாமல் கஷ்டப்படுகிறீர்களா? எலுமிச்சம் பழத்தை வைத்து இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து பாருங்கள். கடன் வாங்கியவர்களே உங்களை தேடி வந்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பார்கள்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமை நாட்களில் விசேஷ பூஜைகள் நம் வீட்டில் செய்வோம். அத்துடன் சேர்த்து எந்த ஒரு எளிய பூஜையும் செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கை தரம் செல்வ நிலை இரண்டும் உயரும் எனும் பொழுது இதை தாராளமாக செய்யலாம் தானே. நம்பிக்கை இருப்பவர்கள் இதை நம்பிக்கையுடன் செய்து கொள்ளுங்கள் என்று எந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -