சுக்கிரனை வசியம் செய்ய சர்க்கரை பரிகாரம்

sukkiran
- Advertisement -

வீட்டில் செல்வ கடாட்சம் அதிகரிக்க வேண்டும், மகாலட்சுமியின் அருளாசி முழுமையாக இருக்க வேண்டும், என்றால் அந்த சுக்கிர பகவானின் கடைக்கண்பார்வை நம் மீது விழ வேண்டும். இதற்கான பல பரிகாரங்கள் ஆன்மீகத்தில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதையெல்லாம் தாண்டி இன்று ஒரு புத்தம் புதிய பரிகாரத்தை நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இதை நீங்கள் செய்தால் தினம் தினம் உங்களுடைய வீட்டில் சுக்கிர பகவான் ஆக்டிவ் ஆகிக் கொண்டே இருப்பார். அதாவது தினம் தினம் சுக்கிர பகவானின் நினைப்பு உங்களுக்கு வரும். உங்களுடைய நினைப்பும் சுக்கிர பகவானுக்கு வரும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. சுக்கிர பகவானை வசியம் செய்ய, ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

சுக்கிரனை வசியம் செய்ய பரிகாரம்

சுக்கிரன் என்றால் யார். வெள்ளி. வெள்ளி உலோகம் சுக்கிர பகவானுக்கு உரியது. உங்க வீட்டில் இருக்கும் சர்க்கரை டப்பாவில் சாதாரண பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் ஸ்பூன் இருக்கும் அல்லவா. அதை எடுத்து விடுங்கள். சின்னதாக ஒரு வெள்ளி ஸ்பூன் வாங்கி அந்த சக்கரை டப்பாவில் போட்டு தினமும் புழங்குங்கள். சுக்கிர பகவான் உங்களுக்கு அருள் ஆசையை கொடுத்து விடுவார்.

தண்ணீர் குடிக்கின்ற டம்ளர், வெள்ளி டம்ளராக பயன்படுத்துங்கள். தினம் தினம் வெள்ளி டம்ளரில் தண்ணீர் குடித்தால் உங்களிடம் இருக்கும் தரித்திரம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி கொஞ்சம் கொஞ்சமாக லட்சுமி கடாட்சம் பெருக தொடங்கிவிடும். வெள்ளி டம்ளருக்கும், வெள்ளி ஸ்பூனுக்கும் எங்க போவது. அப்படியெல்லாம் யோசிக்க கூடாது.

- Advertisement -

கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்து முதலில் இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி வீட்டில் வையுங்கள். சுக்கிர பகவானே உங்களுடைய வீட்டிற்குள் வந்ததாக அர்த்தம். சில வீடுகளில் சின்ன குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்ட வெள்ளி ஸ்பூன் வாங்கி வச்சிருப்பீங்க. அதையே எடுத்து சர்க்கரை டப்பாவில் போட்டு பயன்படுத்தலாம்.

சின்ன பிள்ளைகளுக்கு சாதம் ஊட்ட வெள்ளி கிண்ணம் வைத்திருப்பீங்க. அதுல கூட தண்ணீர் ஊற்றி குடியுங்கள். தவறே கிடையாது. இந்த இரண்டு பொருளைப் புழக்கத்தில் கொண்டு வரக்கூடிய வீட்டில் நிச்சயம் பணக்கஷ்டம் இருக்காது. இதை சொன்னால் யாருக்கும் புரியாது. பயன்படுத்தும் போது நீங்களே உங்கள் குடும்பத்தில் வரக்கூடிய மாற்றத்தை வைத்து இந்த பரிகாரத்திற்கு பின்பு இருக்கும் முழு அர்த்தத்தை புரிந்து கொள்வீர்கள்.

- Advertisement -

சரி ஜாதக ரீதியாக எங்களுக்கு சுக்கிரன் சரியாக வேலை செய்யவில்லை. இருந்த பணத்தை எல்லாம் கூட இழுந்து நஷ்டமாகிவிட்டது. இப்போது இழந்ததை எல்லாம் மீட்பதற்கு சுக்கிரனின் அனுகிரகத்தை பெற, இந்த கெட்ட நேரத்தில், சுக்கிர அணுகிரகத்தை பெறுவதற்கு என்ன செய்யலாம். ஒரு வெள்ளை துணி எடுத்துக்கோங்க.

அதில் ஒரு கைப்பிடி அளவு மொச்சையை வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து 48 நாள் நீங்க தூங்கும்போது இந்த மொச்சையை உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். கண் விழித்ததும் அதை எடுத்து ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள். 48 நாள் அதை மொச்சையை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

48 நாள்வது இந்த முடிச்சை ஓடுகின்ற தண்ணீரில் விட்டு விட்டால், சுக்கிரனின் அனுகிரகம் உங்களுக்கு கிடைக்கும். ஓடுகின்ற தண்ணீரும் இப்போது இல்லை என்ன செய்வது. அதை தண்ணீரில் ஊற வைத்து பசுமாட்டுக்கு கொடுக்கலாம். இல்லையென்றால் காக்கா குருவிகளுக்கு இரையாக போடலாம்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க முருகன் வழிபாடு

இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் ஜாதக கட்டத்தில் சுக்கிரன் பலமாக இல்லை என்றாலும் அவனது அனுகிரகத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கஷ்டத்தில் கொஞ்சம் குறையும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை செய்து பலன் பெறவும்.

- Advertisement -