நினைத்தது நடக்க முருகன் வழிபாடு

vendhal niravera
- Advertisement -

இன்று உலகெங்கிலும் பல்லாயிரம் கணக்கான முருகப்பெருமானின் மகிமையை உணர்ந்து அவரை தினந்தோறும் உருகி வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான சூழ்நிலையிலும் கூட இன்னும் சில நம்முடைய வேண்டுதலுக்கு மட்டும் முருகர் செவி சாய்ப்பதில்லையே என்று மனக்குறையுடன் இருக்கிறார்கள். இந்த மனக்குறையை தீர்ப்பதற்கான ஒரு எளிய வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வேண்டுதல் நிறைவேற முருகப்பெருமான் வழிபாடு

இந்த வழிபாட்டை நீங்கள் முருகருக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை அன்று துவங்கலாம் அல்லது சஷ்டி திதி கிருத்திகை நட்சத்திரம் பரணி நட்சத்திரம் போன்ற நாட்களில் தொடங்குங்கள். இந்த வேண்டுதலை செய்யும் நாள் என்று காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் இருக்கும் முருகப்பெருமான் படத்தை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முருகருக்கு உகந்த செவ்வரளி பூவை கொண்டு மாலை சூட்டுங்கள். அவருக்கு நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல், தினை மாவு, பஞ்சாமிர்தம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தயார் செய்து வைத்து விடுங்கள். இந்த வழிபாடு செய்வதற்கு முன்பு உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு முருகரை நினைத்துக் கொள்ளுங்கள். அதாவது திருச்செந்தூர் முருகன், திருத்தணி முருகன், வடபழனி முருகன், சிறுவாபுரி முருகன் என உங்களுக்கு யார் பிடிக்குமோ அவரை நினைத்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு வெள்ளை நிறத்தாலை எடுத்துக் கொள்ளுங்கள்க். அந்த தாளின் நான்கு புறமும் மஞ்சளை தடவி விடுங்கள். தாளில் நடுவில் ஓம் சரவண பவ என்று எழுதுங்கள். பேனாவின் நிறம் எது வேண்டுமானாலும் இருக்கலாம் கருப்பு பயன்படுத்தாதீர்கள். அதன் பிறகு கீழே உங்களுடைய வேண்டுதல் எதுவோ அதை எழுதுங்கள் எழுதிய பிறகு அதற்கு கீழே உன் நீங்கள் எந்த முருகரை மனதார பிரார்த்தனை செய்தீர்களோ அதை எழுதுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த காகிதத்தை மடித்து உங்கள் வீட்டில் இருக்கும் முருகர் படத்திற்கு பின்புறம் வைத்து விடுங்கள். இப்படி வைத்த பிறகு 48 நாட்கள் தொடர்ந்து முருகருக்கு தீபம் ஏற்றி உங்களுடைய இந்த வேண்டுதலை உங்களுக்கு பிடித்த முருகரை மனதில் நினைத்துக் கொண்டு நடக்க வேண்டும் என்று வேண்டுங்கள்.

இந்த 48 நாட்களுக்குள் உங்கள் வேண்டுதல் நடக்கும் அல்லது நடப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. உங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு நீங்கள் எழுதி வைத்த இந்த காகிதத்தை நீங்கள் மனதில் நனைத்த முருகர் ஆலயத்திற்கு சென்று காணிக்கையுடன் உண்டியலில் போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க எருக்கம் பூ பரிகாரம்

இந்த வழிபாடு மிகவும் எளிமையானது தான். ஆனால் மிக மிக சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏனெனில் முருகப்பெருமான் மீது நம் முழு நம்பிக்கையுடன் இது வேண்டும் என்று 48 நாட்கள் நம்பி நாம் வேண்டும். இந்த வேண்டுதலுக்கு கட்டாயம் முருகன் செவி சாய்ப்பார் என்று நம்பப்படுகிறது. இந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் சேர்ந்து பலன் அடையுங்கள்

- Advertisement -