இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வந்தால் சுக்கிர பகவானின் ஆசீர்வாதம் பெற்று கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம்.

- Advertisement -

ஒரு மனிதனுக்கு சுகபோகமான வாழ்க்கை தேவை என்றால், அவனுடைய ஜாதக கட்டத்தில் சுக்கிரன் சரியான இடத்தில் அமர்ந்து இருக்க வேண்டும். உங்களுக்கு சுக்கிர திசை நடந்தாலும் சரி, அல்லது சுக்கிரன் நீச்சம் அடைந்திருந்தாலும் சரி, அல்லது சுக்கிர பகவானின் அருள் ஆசி உங்களுக்கு கிடைக்காமல் திருமணத்தடை, குழந்தை பாக்கியத்தில் தடை, செல்வ செழிப்பு இல்லாமல் கடன் சுமையில் சிக்கி இருக்கிறீர்கள் என்றாலும் சரி, இல்லற வாழ்க்கையில் சதா பிரச்சனை என்றாலும் சரி, பின் சொல்ல கூடிய இந்த பரிகாரங்களை செய்யுங்கள். முடிந்தால் இந்த திருத்தலத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள். சுக்கிர பகவானின் பரிபூரணமான அனுகிரகம் கிடைத்து ஆசீர்வாதத்தை பெற, ஆன்மீகம் சொல்லும் எளிமையான பரிகாரங்கள் இதோ உங்களுக்காக.

சுக்கிர பகவானின் அருள் பெற செல்ல வேண்டிய கோவில்:
கஞ்சனூரில் இருக்கும் சுக்கிர பகவானின் ஸ்தலமாக சொல்லப்படும் அக்னீஸ்வரர் கோவிலுக்கு ஒரு முறை சென்று வர வேண்டும். இந்த கஞ்சனூர் என்னும் இடம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் சுக்கிர பகவானுக்கு உரிய ஸ்தலமாக சொல்லப்பட்டாலும், இங்கு சுக்கிரனுக்கு என்று தனியாக சன்னதியெல்லாம் கிடையாது. அந்த சிவபெருமான் ரூபத்தில் சுக்கிர பகவான் நமக்கு காட்சி தருகின்றார். இந்த கோவிலுக்கு சென்று வந்தால் ஜாதகத்தில் சுக்கிரனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் கொஞ்சம் தனியும். பெரியதாக பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்கும்.

- Advertisement -

இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று சென்று சுக்கிர பகவானுக்கு வெள்ளை நிற வஸ்திரத்தை தானமாக கொடுத்து, 20 நெய் விளக்குகளை ஏற்றி வைத்து, 11 முறை கோவிலை வலம் வர வேண்டும்‌. அப்போது சுக்கிர பகவானின் அனுகிரகத்தை முழுமையாக பெறலாம்.

சரிங்க, கோவிலுக்கு செல்லக்கூடிய பரிகாரம் எல்லோருக்கும் பெரும்பாலும் தெரிந்ததாக தான் இருக்கும். இருந்தாலும் தெரியாதவர்கள் இந்த தகவலை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது அல்லாமல் சுக்கிர பகவானின் ஆசிர்வாதத்தை நாம் பெற வேண்டும் என்றால் வேறு என்ன பரிகாரம் செய்யலாம். அதற்கும் ஒரு சில வழிமுறைகள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்களுக்கு சுக்கிர திசை நடக்கிறது என்றால், நீங்கள் ஒரு வெள்ளி பொருளை வாங்கி யாருக்காவது தானமாக கொடுக்க வேண்டும். ஒரு கிராம் வெள்ளியை வாங்கி தானமாக கொடுத்தாலும் அது நல்லது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த வெள்ளி தானத்தை செய்தால் உங்களுக்கு வாழ்வில் இருக்கும் அத்தனை சுப காரியங்களும் அத்தனை பண கஷ்டங்களும் உடையும் என்பது நம்பிக்கை.

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் மகாலட்சுமி தாயை நினைத்து பூஜை செய்ய வேண்டும்‌ மகாலட்சுமிக்கு பசும்பாலால், நெய் முந்திரி திராட்சை எல்லாம் சேர்த்த பாயாசம் வெள்ளை நிறத்தில் நிவேதனமாக வைத்து வழிபாடு செய்வதன் மூலமும் சுக்கிரனின் அனுகிரகம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: மருதாணியை இப்படி கையில் வைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு தரித்திரம் தான் பிடிக்கும். மருதாணியை கையில் வைத்திருக்கும் பெண்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?

பிறகு வெள்ளை நிறத்தில் இருக்கும் மொச்சை வாங்கி தானமாக கொடுக்கலாம். வெள்ளை மொச்சையில் சுண்டல் செய்து சுக்கிர பகவானுக்கு நிவேதியம் படைத்து, அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்தாலும் சுக்கிரனின் அனுகிரகம் கிடைக்கும். இந்த எளிமையான பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் குடும்பத்திலும் நன்மை நடக்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -