சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரம்

sukkiran
- Advertisement -

சுக்கிர பகவானின் அருள் ஆசி மட்டும் இருந்தால் போதும், எவ்வளவு பெரிய பணப்பெரிச்சனையில் இருந்தும் சுலபமாக வெளிவரலாம். எவ்வளவு பணமாக இருந்தாலும் சுலபமாக வீட்டுக்குள் வர வைக்கலாம். நம்முடைய பணகஷ்டம் ஒரு நிமிடத்தில் காணாமல் போகவும், கடன் சுமை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகவும், சுக்கிரனை வசியம் செய்வது எப்படி.

அந்த தந்திர வித்தையை நாம் எப்படி கற்றுக் கொள்வது. சுக்கிர பகவானை வசியம் செய்யும் ஒரு சுலபமான வழிபாட்டு முறையைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சூட்சமமான வழிபாட்டு முறையை உங்க வீட்டு பூஜை அறையில் செய்து பாருங்கள். சுக்கிர பகவான் நிரந்தரமாக பூஜையறையில் தங்கி உங்களுக்கு வேண்டிய செல்வ வளங்களை வாரி வழங்குவார்.

- Advertisement -

சுக்கிர பகவானை வசியம் செய்யும் விளக்கு

நாம எல்லாருக்குமே தெரியும். சுக்கிர பகவானுக்கு உரிய உலோகம் வெள்ளி. எல்லோர் வீட்டிலும் வெளியில் காமாட்சி அம்மன் விளக்கு இருக்கு அல்லது வெள்ளியில் ஏதோ ஒரு விளக்கு பூஜையறையில் வைத்து ஏற்றக்கூடிய வழக்கம் இருக்கும். அப்படி உங்க வீட்ல வெள்ளி விளக்கு இல்லை என்றால் இந்த வழிபாட்டிற்காக சின்ன அகல் விளக்கு மாதிரி கூட வெள்ளியில் வாங்கிக் கொள்ளலாம். தவறு கிடையாது.

பூஜை அறையில் வெள்ளி விளக்கு ஏற்றினால் வீட்டில் செல்வம் நிலையாக இருக்கும். வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கில் கொஞ்சமாக நெய் ஊற்றி, அந்த நெய்யில் ஒரு சிட்டிகை ஜவ்வாது, 1 ஏலக்காய் போட்டு, பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி சுக்கிர பகவானை அழைத்தால், சுக்கிர பகவான் அந்த தீபச்சுடரின் வழியாக உங்க பூஜை அறையில் அமர்ந்திடுவார்.

- Advertisement -

தினமும் இந்த விளக்கை ஏற்றி வர சுக்கிரனின் அருளாசி உங்களுக்கு நிரந்தரமாக கிடைக்கும். தினமும் நெய் விட்டு விளக்கு ஏற்ற முடியாது என்று சொல்பவர்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாவது இந்த வழிபாட்டை மேற்கொள்ளணும். இப்படி செய்தால் சுக்கிர பகவான் உங்களுக்கு நிரந்தரமாக செல்வ வளத்தை கொடுத்துக் கொண்டே இருப்பார்.

வாசம் நிறைந்த பொருட்களில் இந்த ஜவ்வாதுக்கு ரொம்ப ரொம்ப முக்கியத்துவம் இருக்கு. அதிலும் குறிப்பாக சுக்கிரனை வசியம் செய்யக்கூடிய தன்மை இந்த ஜவ்வாது வாசத்திற்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. மகாலட்சுமி அம்சம் பொருந்தியது நெய். சுக்கிர பகவானுக்கு உரிய வெள்ளி, சுக்கிரனுக்கே உரிய ஜவ்வாது, பணத்தை வசியம் செய்யும் தன்மை கொண்ட ஏலக்காய், இந்த எல்லா பொருட்களும் ஒன்றாக சேரும்போது உங்களுக்கு வரக்கூடிய பண வரவை நிச்சயம் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

- Advertisement -

அதற்கு சுக்கிர பகவானை சாட்சியாக இருப்பார். இப்படிப் ஏற்றப்பட்ட விளக்குக்கு முன்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் பிரார்த்தனை வைத்தால் எவ்வளவு பண பிரச்சனையும், சீக்கிரம் சரியாகும். இப்படி பூஜை செய்யும் போது ஒரு வெள்ளை காகிதத்தில் கொஞ்சமாக ஜவ்வாது, கொஞ்சமாக பச்சை கற்பூரம் வைத்து கலந்து மடித்து இதை பணம் வைக்கும் பெட்டியில் பணம் வைக்கும் பர்ஸில் வையுங்கள். நிச்சயமாக பண ஈர்ப்பு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்யம் பெருக மந்திரம்

பணக்கஷ்டத்தை தீர்க்கும் சுக்கிரனை வசியம் செய்யும் இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -