ஐஸ்வர்யம் பெருக மந்திரம்

mahalashmi2
- Advertisement -

பணத்தின் மீது யாருக்குத்தான் ஆசை இல்லை. பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று சொல்லுவார்களே. பணம் இல்லாத மனிதன் பிணத்திற்கு சமம் என்றும் சில பேர் சொல்லுகிறார்கள். சொல்லப்போனால் அதுவும் சரிதான். பணம் இல்லை என்றால் ஒரு ஈ எறும்பு கூட இந்த உலகத்தில் நம்மை மதிப்பது கிடையாது.

வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் என்றென்றும் நிறைவாக இருக்க வேண்டும். தினம் தினம் பணம் நம் வீடு தேடி வர வேண்டும் என்றால் என்ன செய்வது. இந்த பணத்தை நம்மிடத்தில் தக்க வைத்துக்கொள்ள ஐஸ்வர்ய கடாசத்தை பெறுவதற்கு தேவையான ஆன்மீகம் சார்ந்த ஒரு வழிபாட்டு முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஐஸ்வர்யம் நிலைக்க பரிகாரம்

இந்த ஐஸ்வர்யத்தை நிலை நிறுத்துவதற்கு நமக்கு முதலில் தேவையான பொருள் ஒரு நெல்லிக்காய். பெரிய நெல்லிக்காய், நாட்டு நெல்லிக்காய் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதை வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்துவது ரொம்ப ரொம்ப சிறப்பு. தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கொள்ளவும். உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரு நெல்லிக்காயை வைத்துக் கொண்டு, 27 முறை பின் சொல்லக்கூடிய பணம் தரும் மந்திரத்தை சொல்லுங்கள்.

பிறகு கையில் இருக்கும் நெல்லிக்காயை சாப்பிட்டு விட வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாய்ப்பு கிடைத்தவர்கள் இந்த வழிபாட்டை செய்யுங்கள். அவ்வளவு அதிகாலை வேலையில் கண்விழிக்க முடியாது என்பவர்கள், அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. அதுவும் முடியாது என்பவர்கள் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகாவது இந்த வழிபாட்டை செய்யலாம்.

- Advertisement -

தினமும் ஒரு ஐந்து நிமிடங்கள் இந்த வழிபாட்டிற்காக நேரத்தை ஒதுக்குங்கள். நிச்சயமாக உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். தினமும் ஒரு நெல்லிக்காய் கட்டாயம் சாப்பிடலாம் தவறு கிடையாது. அப்படி உங்களால் தினமும் அந்த நெல்லிக்காயை சாப்பிட முடியவில்லை என்றால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை, ஒரு நெல்லிக்காயை தினமும் உள்ளங்கைகளில் வைத்து மந்திரத்தை சொல்லிவிட்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை அந்த நெல்லிக்காயை எடுத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

மீண்டும் புது நெல்லிக்காயை எடுத்து வழிபாட்டு முறைக்கு பயன்படுத்துங்கள். செல்வ வளத்தை அள்ளிக் கொடுக்கும் நெல்லிக்காயை கையில் வைத்துக்கொண்டு, இந்த மந்திரத்தை சொன்னால் எவ்வளவு பரம ஏழையாக இருந்தாலும் அவன் வீட்டில் ஐஸ்வர்யா கடாட்சம் நிலைக்கத் தொடங்கிவிடும். பணம் வரும். நீங்கள் ஏமாந்த பணத்தை திரும்ப மீட்டெடுக்கவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. நெல்லிக்காயை கையில் வைத்துக்கொண்டு சொல்ல வேண்டிய மந்திரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர்க்கும் துர்க்கை அம்மன் வழிபாடு

இதுதான் மந்திரம். இந்த மந்திரத்தை வெறுமனே சொன்னால் ஒரு பலன் கிடைக்கும். கையில் நெல்லிக்காயை வைத்து சொல்லும் போது பலன் இரட்டிப்பாகும். தொடர்ந்து 48 நாள் இந்த வழிபாட்டை செய்து விட்டால் இந்த மந்திரத்தை நிச்சயம் உங்களால் உச்சரிக்காமல் இருக்க முடியாது. ஏனென்றால் அத்தனை நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -