உதவாக்கரையாக இருப்பவர்கள் கூட, வாழ்க்கையில் ஓஹோவென முன்னேறி விடலாம். தலைநிமிர்ந்து கௌரவமாக வாழ்க்கையை நடத்திச் செல்ல ஒரு சுக்கு உங்கள் கையில் இருந்தால் போதும்.

murugan-vel
- Advertisement -

சில சமயங்களில் சில பேருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிப்பது உண்டு. நாமே நிறைய பேரை பார்த்து இருப்போம். ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவன், ஒரு சில நாட்களிலேயே கடகடவென முன்னேறி சொந்த வீடு வாங்கி, சொந்தமாக வாகனம் வாங்கி வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்து இருப்பான். இதேபோல் புத்தி இல்லாதவன் அறிவே இல்லாதவன் மந்தமாக சோம்பேறியாக இருப்பவன் கூட எதிர்பாராத சமயத்தில் ஏதாவது ஒரு விஷயத்தில் சாதனை படைத்து தன்னுடைய அறிவாற்றலை நிரூபித்து இருப்பான். இவன் வாழ்க்கையில் தோற்று தான் போவான் என்று அடுத்தவர்களால் முத்திரை குத்தப்பட்ட யாராக இருந்தாலும் சரி, பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக அவன் வாழ்க்கையில் ஜெயிப்பது உறுதி.

murugan-silai-abishegam

பணம் விஷயமாக இருந்தாலும் சரி, வைராக்கியமாக வாழ்ந்து காட்ட வேண்டும், வாழ்க்கையில் ஜெயித்துக் காட்ட வேண்டும், குறிக்கோளை அடைய வேண்டும் என்று இருந்தாலும் சரி, எந்த விஷயத்திலும் நீங்கள் ஜெயிக்க இந்த பரிகாரம் உங்களுக்கு துணையாக நிற்கும். நம்மை காக்கும் கடவுளாக கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக இருப்பவர் முருகப்பெருமான்.

- Advertisement -

முருகப்பெருமானை நம்பியவர்கள் ஏமாந்து போனதாக சரித்திரம் கிடையாது. உண்மையான பக்தியோடு முருகப்பெருமானை வழிபாடு செய்துவிட்டு நாம் எந்த செயலை மேற்கொண்டாலும் அதில் நமக்கு வெற்றி நிச்சயம் கிட்டும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நாம் ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை.

sukku

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த சுககிற்க்கு நிறைய நோய்களை குணப்படுத்தும் தன்மை உண்டு. இந்த சுக்கு முருகப் பெருமானுக்கு உரிய பொருளாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சிறிய துண்டு சுக்கை எடுத்து கொள்ளுங்கள். பூஜையறையில் அமர்ந்து முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது உள்ளங் கைகளில் சுக்கை வைத்துக் கொண்டு உங்களுக்கு எந்த கஷ்டம் இருக்கின்றதோ, உங்களுக்கு என்ன வாழ்க்கையில் தேவையோ அந்த வேண்டுதலை மனதார முருகப்பெருமானிடம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

உள்ளங்கையில் சுக்கு இருக்கும்போது முருகப்பெருமானின் நாமத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். ‘ஓம் முருகா’ என்ற மந்திரத்தை கூட சொல்லலாம் தவறு கிடையாது. இந்த மந்திரத்தை நீங்கள் சுக்கை கையில் வைத்துக்கொண்டு உச்சரிக்கும்போது சுக்குக்கு இருக்கும் மகத்துவம் மேலும் அதிகரிக்கப்படுகிறது. அந்த சுக்கு சக்திவாய்ந்த பொருளாக மாறும்.

murugan-vel-thaipoosam

முருகப்பெருமானின் ஆசியை பெற்றிருக்கும் அந்த சுக்கை ஒரு சிறிய கயிறு கட்டி தாயத்தாக உங்களுடைய கழுத்திலோ கையிலோ கட்டிக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், அந்த சுக்கை ஒரு பேப்பரில் மடித்து உங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். பெண்களாக இருந்தால் ஒரு கைக்குட்டையில் முடிந்து இடுப்பில் செருகிக் கொண்டாலும் தப்பு கிடையாது.

muruga

இந்த சுக்கு உங்களுடன் இருந்தால் போதும். உங்களை அறியாமல் உங்களுக்குள்ளேயே ஒரு தன்னம்பிக்கை வரும். ஒரு தெம்பு பிறக்கும். வாழ்க்கையில் உங்களால் அடையவே முடியாது என்று சொல்லப்படும் சில லட்சியங்களை கூட அடைந்து காட்டுவீர்கள். நம்பிக்கை இருந்தால் முருகப் பெருமானை நினைத்து இந்த பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்.

- Advertisement -