செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த குச்சியை வைத்து தூபம் போட்டால் குடும்ப ஒற்றுமை ஏற்பட்டு, செல்வ செழிப்பில் சிறந்து விளங்கலாம்.

sukkiran thoobam
- Advertisement -

பணத்திற்கு அதிபதியாக விளங்க கூடியவர்கள் தான் மகாலட்சுமி. நவகிரகங்களில் பணத்திற்கு அதிபதியாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர்கள் இருவரின் அருள் யாருக்கு பரிபூரணமாக கிடைக்கிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பிற்கு பஞ்சமே இருக்காது. நாம் ஒவ்வொருவரும் செல்வ செழிப்பில் நிலைத்திருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். அப்படி ஆசைப்படுபவர்கள் சுக்கிரன் மற்றும் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்காக பல பரிகாரங்களையும், வழிபாட்டு முறைகளையும் மேற்கொள்கிறோம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மிகவும் எளிமையாக எந்த குச்சியை வைத்து வீட்டில் தூபம் போட்டால் செல்வ செழிப்பு மேலோங்கும் என்றும் குடும்ப ஒற்றுமை மேம்படும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நம் இல்லங்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் சாம்பிராணி தூபம் போட்டு வழிபடும் வழக்கம் அனைவருக்கும் இருந்து வருகிறது. இவ்வாறு நாம் தூபம் போட்டு வழிபடுவதால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. இந்த தூபத்தை போடுவதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளையும் அதே நேரம் சுக்கிரனின் அருளையும் எவ்வாறு பெற முடியும் என்று பார்ப்போம்.

- Advertisement -

நவகிரகங்கள் என்று கூறும் பொழுது ஒவ்வொரு கிரகத்திற்கும் அதற்குரிய தானியம், நிறம், மரம் என்று பல இருக்கின்றன. அதை வைத்து நாம் அந்த கிரகத்தை வழிபட்டோம் என்றால் நமக்கு அந்த கிரகத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் சுக்கிரனுக்கு உகந்த மரமாக கருதப்படுவது தான் அத்திமரம். இந்த அத்திமர குச்சிகளை வைத்து நாம் தூபம் போட்டோம் என்றால் நமக்கு சுக்கிரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் அத்தி மர குச்சி கிடைக்கும். இந்த குச்சியை வாங்கி வந்து வீட்டில் வைத்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் சாம்பிராணி தூபம் போடுவதற்கு நெருப்பை உருவாக்குவதற்கு இந்த அத்தி மர குச்சிகளை பயன்படுத்த வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய நெயில் இந்த அத்தி மர குச்சிகளை நாம் நனைத்து நெருப்பு உண்டு பண்ணி அதில் சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு காட்டும் பொழுது நம்முடைய வீட்டின் தளத்தில் புகைப் படும் அளவிற்கு நாம் ஒவ்வொரு மூலையிலும் காட்ட வேண்டும். இப்படி நாம் செய்தோம் என்றால் நம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகுவதோடு மட்டும் அல்லாமல் மகாலட்சுமி மற்றும் சுக்கிரனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து குடும்ப ஒற்றுமை மேலோங்குவதோடு செல்வ செழிப்பும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: தொழிலில் லாபம் பெற வேண்டுமா? கடைகளில் வியாபாரம் நன்றாக நடைபெற வேண்டுமா? அப்போ இந்த பொடியை பயன்படுத்தி சுப லாபம் போட்டு பாருங்க. நீங்கள் நினைப்பதை விட லாபம் பல மடங்கு அதிகமாக கிடைக்கும்.

சாதாரணமாக நாம் போடும் தூபத்தில் இந்த ஒரு சிறிய மாற்றத்தை மட்டும் செய்து நம் வீட்டில் பண வருகை அதிகரித்து, ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -