நாளை(22/6/2021) சுக்ரன் பெயர்ச்சி! இதனால் சாதக, பாதக பலன்களை பெற இருக்கும் ராசிகள் யாரெல்லாம் தெரியுமா? 12 ராசிக்குமான துல்லிய கணிப்பு.

sukran-cash
- Advertisement -

சுக போக வாழ்க்கையை அள்ளிக் கொடுக்கும் சுக்கிர பகவான் நாளை பிலவ வருடம், ஆனி மாதம், எட்டாம் தேதி செவ்வாய்க் கிழமையில் மதியம் 2:34 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஒருவருடைய ராசிக்கு செல்வம், செல்வாக்கு, போன்ற சகல சம்பத்துகளும் தரக் கூடியவர் சுக்ர பகவான், லட்சுமி கடாட்சத்தை பெற்று தரக் கூடியவரும் சுக்கிர பகவானாவார்.

ஒருவருடைய இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கவும், எல்லா வசதி வாய்ப்புகளும் பெறவும், சுக்கிர பகவான் ஆகிய களத்திரகாரகன் நம் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும். வசீகரத்தையும், ஆடம்பரத்தையும் அதிகம் விரும்பும் சுக்கிரன் அசுரர்களின் குருவாக விளங்குகின்றார். மேலும் ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளுக்கு அதிபதியாக இருக்கின்றார். ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிர பகவான் இம்மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்க போகிறார்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்கு சுக்கிரன் உங்கள் ராசியில் இருந்து நான்காவது இடமாக இருக்கும் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் வீடு பராமரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி குவிக்கும் வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு சுக்கிர பகவான் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். உங்களுடைய திறமையை வெளிக் கொணர சரியான தருணம் இது. மருத்துவ ரீதியான செலவுகள் ஏற்படும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய நண்பர்களின் சேர்க்கை அதிகரிக்கும். வெளியிட பயணங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. செல்வ வளத்திற்கு லட்சுமி தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் தன ஸ்தானத்தில் அமர்வதால் பணவரவு சீராக இருக்கும். எந்த வகையிலும் வர வேண்டிய பணம் சரியாக வந்து சேர்ந்துவிடும். இல்லத்தில் சுபகாரிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தடைபட்ட நல்ல விஷயங்கள் தடையில்லாமல் நிறைவேறி வரும். புத்திர பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் யாவும் நீங்கி பரஸ்பர அன்பு ஒற்றுமை மேலோங்கி காணப்படும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஒரு ஜாக்பாட் என்றே கூறலாம். உங்கள் ராசியில் சுக்கிர பகவான் பெயர்ச்சி ஆகி இருப்பதால் ஆடம்பர பொருள் சேர்க்கை, விலையுயர்ந்த நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்கால கல்வி சிறப்பாக அமைவதற்கு அடித்தளம் அமைப்பீர்கள். உடல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். அம்பாளை வழிபடுவதால் நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து சுக்கிரன் 12ம் இடத்தில் அமர்ந்து இருப்பதால் வீண் விரயங்களையும், தேவையற்ற பிரச்சினைகளையும் கொடுப்பார். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனத்தை மேற்கொள்வது உத்தமம். வரும் விரயங்களை சுப கிரகங்களாக சாதுரியமாக மாற்றிக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் மேலும் அதிகரிக்கும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதற்கு ஏற்ப செயல்படுவது நல்லது. அம்பாளை வெள்ளி தோறும் விளக்கேற்றி வழிபடுங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் வருவாய் வருவதில் குறைவில்லாமல் இருக்கும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி தரும். சொத்துக்கள் ரீதியான விஷயங்களில் ஆதாயம் காண்பீர்கள். ஒரு சிலருக்கு புத்திர பேறு உண்டாகும். வெள்ளிக்கிழமை தோறும் துளசி பூஜை செய்து வழிபட்டு வர நன்மைகள் நடக்கும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் இருந்து 10-வது இடத்தில் சுக்கிர பகவான் அமர இருப்பதால் தொழில் ஸ்தானம் சிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறி உற்சாகம் அடையும் அளவிற்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மற்றும் வெளி இடங்களில் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் உருவாகலாம் என்பதால் கூடுமானவரை விட்டு கொடுத்து செல்வது நல்லது. ராகு கால துர்க்கை பூஜை மேற்கொள்வது நலம் தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர இருப்பதால் நண்பர்கள் மற்றும் உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் புரிதல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் மாறி குதூகலம் அடையும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான மாதமாக அமையும் சிவ வழிபாடு மேற்கொள்வது நலம் தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலிருந்து சுக்ர பகவான் எட்டாமிடத்தில் அமர இருப்பதால் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை அதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற மருத்துவ செலவுகளை சமாளிக்க முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும். தொழில் ரீதியான முன்னேற்றம் மந்த நிலை மாறி ஓரளவுக்கு சிறப்பாக அமைய இருக்கிறது. துர்க்கை வழிபாடு மேற்கொள்ள நன்மைகள் நடக்கும்.

மகரம்:
மகர ராசியில் இருந்து சுக்கிர பகவான் ஏழாம் இடமாக இருக்கும் களத்திர ஸ்தானத்தில் அமர இருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகம் உண்டாகும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வெள்ளிக்கிழமையில் சுக்கிர வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் உங்கள் ராசியிலிருந்து 6ஆம் இடத்தில் வந்தமர்வதால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உருவாகும் என்பதால் கூடுமானவரை உணவுக் கட்டுப்பாட்டில் எச்சரிக்கை தேவை. வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பது உத்தமம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தவும். உங்கள் உழைப்பை பன்மடங்கு அதிகம் கொடுத்தால் முன்னேறலாம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் இருந்து ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் கற்பனை வளம் அதிகரிக்கும். குடும்பத்தின் மீது பற்று உண்டாகும் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும் வருமானம் பன்மடங்கு பெருகும். ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும் இனிய காலமாக இருக்கும்.

- Advertisement -