சுக்கிர தோஷம் நீங்கி சுக்கிரனுடைய அருளை முழுமையாக பெற இன்று சுக்கிர ஜெயந்தியில் இதை செய்யுங்கள்.

sukura cow jathagam logo
- Advertisement -

சுக்கிர யோகம் என்பது சாதாரண விஷயம் இல்லை சுக்கிர பார்வை ஒருவர் ஜாதகத்தில் பட்டால் போதும். அவர்களுடைய வாழ்க்கை நினைத்துப் பார்க்காத செல்வநிலை அந்தஸ்துடன் உயர்ந்து நிற்பார்கள். அதுவே அந்த ஜாதகத்தில் சுக்கிர தோஷமும் சுக்கிர பலம் இழந்து இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவது பெரும்பாடு.

இப்படி ஜாதகத்தில் சுக்கிர தோஷம் இருப்பதால் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் சுக்கிர ஜெயந்தி ஆன இன்று இதையெல்லாம் செய்த சுக்கிர பலம் பெற்று அவருடைய அருளாசியுடன் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அது குறித்தான தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சுக்கிர தோஷம் நீங்க சுக்கிர அருளை பெற

சுக்கிர தோஷம் நீங்க முதலில் செய்ய வேண்டியது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல வேண்டும். அதுவும் சுக்கிரருடைய நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய தினங்களில் செல்வது மேலும் பல பலன்களை தரும்.

இத்துடன் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வரும் போதும் சுக்கிர பலன் கிடைக்கும். அது மட்டும் இன்றி துர்க்கை அம்மனை வழிபடுவதனாலும் சுக்கிரனுடைய அருளைப் பெறலாம். துர்க்கை அம்மனை வழிபடும் போது அவருடைய மந்திரத்தை சொல்லி வழிபட்டால் இன்னும் சிறப்பு.

- Advertisement -

இது மட்டும் இன்றி வெள்ளிக்கிழமைகளில் பட்டாடை, மொச்சை பயிறு, தயிர் வாசனை பொருட்கள், பாலாடை போன்றவற்றை எல்லாம் வைத்து மகாலட்சுமி தாயாரை வணங்கிய பிறகு அன்று மாலை ஏழைப் பெண்களுக்கு இதை தானமாக கொடுக்கும் பொழுது சுக்கிரதோஷம் நீங்கி விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இத்துடன் சுக்கிர ஜெயந்தியான இன்று பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கி கொடுப்பதன் மூலம் சுக்கிர தோஷம் நீங்குவதுடன் சுக்கிர பலம் பெறுவதற்கான யோகமும் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் தானமாக கொடுக்க சொல்லப்பட்ட பொருட்களை சுக்கிர ஜெயந்தி ஆன இன்றும் தாயாரை வழிபட்டு கொடுக்கலாம்.

- Advertisement -

சுக்கிர காயத்ரி மந்திரம்

‘ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தநு ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ரஹ் ப்ரசோதயாத்’

என்ற இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து மகாலட்சுமி தாயாரை வணங்கும் பொழுது சுக்கிர பலம் கிடைப்பதுடன் சுக்கிர தோஷமும் நிவர்த்தியாகும்.

இதையும் படிக்கலாமே: பாவம் நீங்கி கோடி புண்ணியம் தேடி வர இன்று இரவுக்குள் இந்த தீபத்தை ஏற்றுங்கள்

இத்துடன் மேற் சொன்ன தான வழிபாட்டு முறையும் இன்றைய நாளில் செய்யும் பொழுது இன்னும் அதிக பலன்களை தரும். சுக்கிர தோஷம் நீங்கி சுக்கிரன் பலம் பெற இந்த வழிப்பாட்டு முறைகள் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -