விளக்கு வைத்த பின்பு சுமங்கலிப் பெண்கள் வீட்டிற்கு வந்தால் இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீங்க. இது உங்கள் பரம்பரைக்கே தீராத வறுமையையும் கஷ்டத்தையும் கொடுத்துவிடும்.

kungumam-kumkum
- Advertisement -

சுமங்கலி பெண்கள் விளக்கு வைத்த பின்பு நம் வீட்டிற்கு வந்தால், அவர்களுக்கு மங்களகரமான பொருட்களை தானம் கொடுக்கலாமா. கொடுக்க கூடாதா? குறிப்பாக வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் விளக்கு எரியும்போது சுமங்கலி பெண்கள் நம் வீட்டிற்கு வந்து விட்டால் அவர்களுக்கு இப்படி மஞ்சள் குங்குமம் பூ இவைகளை தானம் கொடுப்பதால் நம் வீட்டு ஐஸ்வரியும் குறைந்து போய்விடுமா. இந்த சந்தேகம் உங்களுடைய மனதில் என்றாவது எழுந்திருக்கிறதா. இந்த கேள்விகளுக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பொதுவாக சுமங்கலி பெண்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து சென்றால், அவர்களுக்கு குங்குமம் கொடுக்க வேண்டும். பூ கொடுக்க வேண்டும் என்று நம்முடைய அம்மா பாட்டி எல்லாம் நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால் நிறைய பேர் அதை இப்போது கடைபிடித்து வருகிறார்கள். அது தவறு கிடையாது.

- Advertisement -

இப்படி செய்தால் ஐஸ்வர்யம் நம் வீட்டை விட்டு சென்று விடுமோ என்ற சந்தேகமும் நிறைய பேருக்கு இருக்கிறது. (இப்படிப்பட்ட சந்தேகம் உங்கள் மனதில் எழுந்தாலே அது உங்கள் குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுத்து விடும். அதேபோல மனதில் இவ்வளவு சஞ்சலத்துடன் ஒருவருக்கு தானம் கொடுப்பது நமக்கு முழு பலனை கொடுக்காது.)

சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருட்களை எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும், நம் வீட்டில் இருந்து தானமாக கொடுக்கலாம். வீட்டில் பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது என்றாலும் தவறு கிடையாது. உங்கள் வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்ணுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, ரவிக்கை துணி வளையல் சீப்பு இந்தப் பொருட்களை எல்லாம் தாம்பூல தட்டில் வைத்து தானமாக கொடுக்கலாம். (இந்த தானம் எதைக் குறிக்கின்றது. நம் வீட்டிற்கு வந்த அந்தப் பெண் தீர்க்க சுமங்கலியாக காலம் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் அந்த பொருட்களை தானம் செய்கின்றோம்).

- Advertisement -

நம்முடைய வீட்டில் சுமங்கலி பூஜை செய்கின்றோம். சுமங்கலி பூஜை செய்யும் போது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டு தான் இருக்கும். வீட்டிற்கு வந்த பெண்களுக்கு தாம்பூலம் பிரசாதம் வஸ்திரம் என்று நான் நிறைய பொருட்களை தானமாக கொடுக்கின்றோம் அல்லவா. அதே போல் தான். சுபிட்சம் தரக்கூடிய மங்களகரமான பொருட்களை நம் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுக்கும் போது நம் வீட்டு ஆண்களுக்கு ஆயுள் பலம் கூடும். செல்வ வளம் பெருகும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் மீண்டும் நடக்கும். (சில பேர் வெள்ளி செவ்வாயில் தயங்கி தயங்கி சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் பூ இவைகளை கொடுப்பார்கள். அப்படி மனதில் தயக்கத்தோடு தானம் செய்வதற்கு நீங்கள் செய்யாமலேயே இருக்கலாம். அதன் மூலம் உங்களுக்கு பலன் வந்து சேர போவது கிடையாது. பாவம்தான் மிஞ்சும்.)

இதையெல்லாம் தானம் கொடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் நமக்கு அப்படியே போன போக்கில் சொல்லவில்லை. மஞ்சள் என்பது குருவின் அம்சம். குங்குமம் என்பது செவ்வாய் அம்சம். வஸ்திரம் என்பது சுக்கிரனின் அம்சம். வெற்றிலை பாக்கு தேங்காய் என்று எல்லாமே ஒவ்வொரு கிரகங்களை குறிக்கும் ஒரு பொருளாக தான் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய பிறப்பில் ஜாதக கட்டத்தில் நவகிரகங்களின் மூலம் ஏதாவது தோஷங்கள் இருந்தாலும் அந்த தடையை சரி செய்வதற்காகத்தான் இப்படிப்பட்ட தானங்களை கொடுக்க சொல்லி இருக்கிறார்கள். ஆகவே எதையும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மனதில் நல்லதை நினைத்து மன நிறைவோடு செய்யக் கூடிய தானம் உங்களுடைய பரம்பரையை வாழ செய்யும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -