ஆடி மாதம் முடிவதற்குள் ஒரு சுமங்கலி பெண்ணுக்காவது தாம்பூலத்தை இப்படி தானமாக கொடுத்து பாருங்கள். குடும்பத்தில் நல்லது சீக்கிரமே நிச்சயம் நடக்கும்.

- Advertisement -

பொதுவாகவே மனதார, மன திருப்தியோடு தாம்பூலத்தை சுமங்கலி பெண்ணுக்கு தானமாகக் கொடுத்தால் நம்முடைய வீட்டில் நிச்சயம் ஒரு நல்லது நடக்கும். குறிப்பாக நம் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களை வெறுங்கையோடு திருப்பி அனுப்பக்கூடாது. முடிந்தவரை ஒரே ஒரு பூ, நெற்றியில் இட்டுக்கொள்ளும் குங்குமத்தை கொடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

vetrilai-pakku-pazham

இப்படியாக சுமங்கலிப் பெண்களுக்கு நாம் கொடுக்கக்கூடிய தானத்தை மனத் திருப்தியோடு கொடுத்தால் தான் நமக்கு அதன் மூலம் பலன் கிடைக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக வீட்டில் சுப காரியங்கள் நடக்க ஆடி மாதத்தில் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் எப்படி தானம் கொடுக்கவேண்டும் என்பதைப்பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

தாம்பூலம் என்பது வெற்றிலை பாக்கு பூ பழம் சேர்ந்தது மட்டுமல்ல. இந்த தாம்புளத்திற்கு சிறப்பு  கொடுப்பதே, இந்த தாம்பூலத்தை நம் வாயில் போட்டு சாப்பிட்டால், அது சிவப்பு நிறமாக மாறும். தாம்பூலம் சிவப்பதற்கு காரணமாக இருப்பது, ஒரு சொட்டு சுண்ணாம்பு தான். இந்த சுண்ணாம்பை கடுகளவு உங்களுடைய விரல்களில் தொட்டு, அந்த வெற்றிலைக்கு அடியில் தடவி விட்டு, அதன் பின்பு இந்த தாம்பூலத்தை தானமாகக் கொடுப்பது மேலும் சிறப்பு தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

vetrilai pakku

உங்களுடைய வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு இரண்டு வெற்றிலை, இரண்டு கொட்டைப்பாக்கு, வாசனை மிகுந்த பூ, இரண்டு விரலி மஞ்சள் 2, ஒரு ரூபாய் நாணயம், அந்த வெற்றிலை அடியில் லேசாக சுண்ணாம்பு தடவி மனதார வாழ்த்துக்களுடன் இந்த தாம்பூலத்தை தானமாக கொடுத்தீர்கள் என்றால் நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் படிப்படியாக குறையும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். இதே போல் தான் இறைவனுக்கு வெற்றிலை பாக்கு பூ பழம் வைத்து இறை வழிபாடு செய்யும் போதும் அந்த வெற்றிக்கு அடியில் லேசாக சுண்ணாம்பு தடவி இறைவனுக்கு படைக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. நீங்கள் இறைவனுக்காக வைத்த வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவதன் மூலம், அந்த வெற்றிலை பாக்கு தாம்பூலம் ஆனது முழுமை அடைகின்றது.

thambulam

வெற்றிலை பாக்கு போடுவதை, தாம்பூலம் தரிப்பது என்றுதானே சொல்லுவார்கள். தாம்பூலம் தரிப்பதற்கு வெற்றிலைபாக்கு தயாராக உள்ளது என்றால் நிச்சயம் அதில் சுண்ணாம்பு வேண்டும். சுண்ணாம்பு இல்லாத தாம்பூலம் முழுமை பெறாத நிலையில் இருக்கும். ஆகவே இனி வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சுண்ணாம்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் இல்லம் சுபிட்சம் அடையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -