இன்று நீல நிற பௌர்ணமி! இந்த நாளை தவிர விட்டால் இதற்காக நாம் மீண்டும் 14 வருடம் காத்திருக்க வேண்டும். நினைத்ததை உடனே சாதிக்க, இன்று மாலை நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்.

chandran
- Advertisement -

இந்த ஆகஸ்ட் மாதத்தில் 1ஆம் தேதி, ஒரு பௌர்ணமி வந்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் 30ம் தேதி இன்னொரு பௌர்ணமி தினம். அதாவது இன்று வரக்கூடிய இந்த பௌர்ணமி தினத்தை தான் நீல நிற பௌர்ணமி என்று சொல்லுகிறார்கள். இன்று பூமிக்கு அருகாமையில் நிலவு வருவதன் மூலம், வழக்கத்தை விட இந்த நிலவு சற்று பெரியதாக தெரியும் என்றும், வளிமண்டலத் துகள்களின் பிரதிபலிப்பால், அந்த நிலவு லேசான நீல நிறத்தில் தெரியும் என்றும் விஞ்ஞானிகளால் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இன்றைய நாளை நீங்கள் தவறவிட்டால் இதேபோல நீல நிற நிலாவை பார்ப்பதற்கு இன்னும் 14 வருடம் காத்திருக்க வேண்டும். 2037 ஆம் வருடம், ஜனவரி மாதத்தில் தான் இதே போல நிகழ்வு மீண்டும் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கிறார்கள். இத்தனை அற்புதம் வாய்ந்த நாளை நம் தவறவிடலாமா. இன்று மாலை ஜோதிட ரீதியாக, சாஸ்திர ரீதியாக நாம் செய்ய வேண்டிய சில பரிகாரங்களை தான் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நீல நிற பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்:
‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ’ என்ற இந்த மந்திரத்தை சொல்லி பதிவினை தொடர்வோம். இன்று நாம் இரண்டு விதமான பரிகாரங்களை தெரிந்து கொள்ளப் போகின்றோம். சந்திர பகவான் என்பவர் யார். ஜோதிடப்படி மனது சம்பந்தப்பட்ட குழப்பங்களில் தெளிவு பிறக்க வேண்டும் என்றால் அந்த சந்திர பகவானின் ஆசிர்வாதம் நமக்கு தேவை. சில பேரால் எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுக்க முடியாது. எப்போதும் குழப்ப நிலையில் தான் இருப்பார்கள். அதேபோல மனதில் எதிர்மறை சிந்தனைகள், எதிர்மறை எண்ணங்கள், தோன்றி கொண்டே இருக்கிறது. எப்போதுமே கெட்ட எண்ணங்கள் தோன்றுகிறது, என்பவர்கள் இன்றைய தினம், அதாவது ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் இந்த ஒரு வழி பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டிற்கு வெளியே வந்து விடுங்கள். எந்த இடத்தில் அந்த சந்திர பகவானின் தரிசனம் உங்களுக்கு கிடைக்குமோ, அந்த இடத்தில் அமர்ந்து சந்திர பகவானை பார்த்து மனம் உருகி உங்களுடைய பிரச்சனையை சந்திர பகவானிடம் சொல்லி, எல்லா குழப்பங்களுக்கும் தெளிவு பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யலாம். இந்த பிரார்த்தனையானது ஐந்து நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை கூட இருக்கலாம். இன்று மாலை சந்திர தரிசனத்தின் போது, மனதை ஒருநிலைப்படுத்தி வேண்டுதல் வைத்தால் உங்கள் மனது சம்பந்தப்பட்ட அத்தனை குழப்பங்களுக்கும் தெளிவு பிறக்கும். (ஒருவேளை மேகமூட்டம் காரணமாக உங்கள் வீட்டில் சந்திர பகவானின் தரிசனம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. மாலை நேரத்தில் வெட்ட வெளியில் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.) நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் மனம் தெளிவு பெறும்.

இந்த பௌர்ணமி நாளில் இரண்டாவதாக நாம் பார்க்கப் போகும் பரிகாரம், நம்முடைய வாழ்க்கையில் நினைத்தது நடக்க இன்றைய நாள் என்ன செய்ய வேண்டும். நினைத்ததை சாதித்து காட்டுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் இன்றைய தினம், மாலை நேரத்தில் நீங்கள் என்ன வரங்களை இந்த பிரபஞ்சத்திடம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும். அதை ஒரு சூட்சம முறையில் இன்று நாம் செய்யப் போகின்றோம்.

- Advertisement -

வெற்றியைத் தரும் வெற்றிலையை ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். பச்சை நிற பேனா ரொம்ப ரொம்ப முக்கியம். பச்சை நிற ஸ்கெட்ச் பேனாவை கூட பயன்படுத்தலாம் தவறு கிடையாது. வாய்ப்பு கிடைத்தவர்கள் வெட்டவெளியில் அமர்ந்து சந்திர பகவானின் தரிசனத் தோடு இந்த பரிகாரத்தை செய்யலாம். வாய்ப்பு இல்லை என்பவர்கள் நீங்கள் இருக்கின்ற இடத்திலேயே இந்த பரிகாரத்தை செய்தாலும், நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை நிற பேனாவில் உங்களுடைய கோரிக்கையை எழுத வேண்டும். நீங்கள் வாழ்க்கையில் எதில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், உங்களுக்கு வாழ்க்கையில் எது ரொம்ப ரொம்ப தேவை அதை ஒரே வரியில் அந்த வெற்றிலையில் எழுதி விடுங்கள்.

- Advertisement -

உதாரணத்திற்கு கை நிறைய சம்பளத்தோடு ஒரு வேலை கிடைக்கணும். நிறைய பணம் சம்பாதிக்கணும், நல்ல இடத்தில் என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும், மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும். பணப் பிரச்சனை தீர வேண்டும். வெளிநாட்டுக்கு போகணும். நிறைய தங்க நகை வாங்க வேண்டும். என்று ஒவ்வொருவரும் மனதில் ஒவ்வொரு ஆசை இருக்கும். அந்த ஆசையை, அந்த வெற்றிலையில் எழுதி விடுங்கள். ஏதாவது ஒரு கோரிக்கையை மட்டும் தான் எழுத வேண்டும். ஒரு வரியில் உங்களுடைய வேண்டுதலை எழுதி அந்த வெற்றிலையை அப்படியே சுருட்டி ஒரு பச்சை நிற நூல் போட்டு கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். (இந்த வெற்றிலையை சந்திர பகவானின் ஒளியில் காண்பித்து முடித்து வைத்தால் நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் ஒரு சில நாட்களில் பளிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.)

நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள் இந்த பரிகாரத்தை இன்று மாலை 6:30 மணியிலிருந்து இரவு 12.00 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் செய்து கொள்ளலாம். இவ்வாறாக நீங்கள் இந்த வெற்றிலையில் எழுதிய கோரிக்கையானது ஒரு சில நாட்களில் நிச்சயம் நடக்கும். அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில். பூஜையறையில் வைத்த வெற்றிலை வாடிய பிறகு எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். தவறு ஒன்றும் கிடையாது.

சந்திர பகவான் இந்த பூமிக்கு அருகாமையில் வரும் சமயத்தில் சந்திர பகவானின் அருள் ஆசியும், நேர்மறை ஆற்றலும் இந்த பூமியில் நிறைந்திருக்கும் சமயத்தில் நாம் வேண்டக்கூடிய வேண்டுதல் செய்யக்கூடிய பரிகாரங்கள் எல்லாம் முழு பலனை தரும் என்பது ஜோதிட ரீதியான நம்பிக்கை. ஆகவே, பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவின் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -