சூரசம்ஹார நாளில் செய்யக் கூடாதவை

murugan
- Advertisement -

பெரும்பாலான மக்கள் கந்த சஷ்டி விரதம் மேற் கொண்டு முருகனுக்கு வழிபாடுகள் செய்து வணங்கி வரும் தருணம் இது. இந்த காலத்தில் முருகப்பெருமானை மனதார நினைத்து வேண்டி வணங்கும் பொழுது நாம் நினைத்த காரியம் அனைத்தும் முடியும். கேட்டவருக்கு கேட்ட வரத்தை கொடுக்கக் கூடிய அற்புதமான இந்த தெய்வத்தை வணங்கக் கூடிய ஒரு அற்புதமான காலம் இது.

இந்த நேரத்தில் பலருக்கும் வழிபாடுகள் எப்படி செய்ய வேண்டும். என்னென்ன முறையில் விரதம் இருக்க வேண்டும். கந்தனை எப்படி எல்லாம் துதிக்க வேண்டும் என்ற தகவல்கள் தெரிந்திருக்கும். ஆனால் இந்த வழிபாடு நேரத்தில் செய்யக் கூடாத சில முறைகளும் உண்டு. அதுவும் சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில் நாம் செய்ய கூடாத முக்கியமான சில விஷயங்கள் உள்ளது. அதைப் பற்றிய தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சூரசம்ஹாரதன்று செய்யக் கூடாதவை

சூரசம்ஹாரம் என்பதே சூரபர்த்தனை முருகன் வதம் செய்த தினம் தான். அத்தகைய உக்கிரமான இந்த நாளில் நாம் யாரிடமும் கோபப்படக் கூடாது. அனாவசியமான பேச்சுக்கள் கூடாது. தீய சொற்கள் கெட்ட செயல்கள் போன்றவற்றை சிந்தையிலும் நினைக்காமல் இருக்க வேண்டும். யாரையும் ஆபாச வார்த்தைகள் சொல்லி திட்டி நம்முடைய கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது.

அடுத்து சூரசம்ஹாரம் நடைபெறும் இந்த நாளில் மறந்தும் அசைவம் சாப்பிடக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தை விரதம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரும் நிச்சயமாக அன்றைய தினம் கடைபிடிக்க வேண்டும். அடுத்ததாக வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அன்று வெறும் நெற்றியுடன் இருந்தால் அது அமங்கலத்தை குறிக்கும்.

- Advertisement -

நான்காவதாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம். அன்றைய தினம் ஆண்கள் முகசவரம் செய்வது, நகத்தை வெட்டுவதோ கூடாது. பெண்கள் முடி திருத்தம் போன்றுவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இன்றைய தினத்தில் இது போன்ற காரியங்களை அறவே செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இத்துடன் சூரசம்ஹாரம் தினத்தன்று பகல் உறக்கம் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதையும் விரதம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயலாக பார்க்கப்படுகிறது. ஆகையால் விரதம் இல்லாதவர்கள் கூட இன்றைய ஒரு தினமாவது முருகப்பெருமானை நினைத்து பகல் முழுவதும் அவருடைய நாமத்தை சொல்லி கந்தனின் அருளை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: அடகு வைத்த நகையை திருப்ப தாந்திரீக பரிகாரம்.

கந்த சஷ்டி விரதத்தில் முக்கிய நாளான சூரசம்ஹாரம் தினத்தில் என்னென்ன காரியங்கள் நாம் செய்யக் கூடாது என்பன பற்றி இந்த பதிவில் உங்களுக்கு தெரிந்திருக்கும். இவையெல்லாம் நம் குடும்பத்திற்கு துன்பத்தை தரக்கூடிய செயல்களாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் இவற்றையெல்லாம் தவிர்த்து விடுவது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -