காலையில் எழுந்தவுடன் இரண்டு உள்ளங்கைகளிலும் இந்த பொருளை வைத்தால் அந்த நாள் முழுவதும் உடல் சோர்வு அடையாது. சுறுசுறுப்பாக செயல்பட்டு வாழ்க்கையை வெல்லலாம்.

meditation
- Advertisement -

மனிதர்களாக பிறந்தவர்கள் இயந்திரம் போல வேலை செய்ய முடியாது. சில நேரம் சோர்வு இருக்கும். சில நேரம் சுறுசுறுப்பாக செயல்படுவோம். ஆனால் சில பேருக்கு எப்போதுமே சோம்பேறித்தனம் இருக்கும். அவர்களுடைய வேலையை சரியாகவே செய்ய மாட்டார்கள். அப்படி இருக்கும் போது வாழ்க்கையில் நிச்சயம் பின்னடைவு ஏற்படும். சுறுசுறுப்பாக இருப்பதற்கும் சோம்பேறித்தனமாக இருப்பதற்கும் காரணம் நம்முடைய உடம்பில் இருக்கும் சக்கரங்கள் தான். அந்த சக்கரங்களை இயக்கக்கூடியது ஆராசக்தி. இந்த இரண்டையும் ஆக்டிவாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும். ஆன்மீகம் இதற்கு ஒரு எளிமையான பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. அதை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

சுறுசுறுப்பாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்:
காலையில் எழுந்ததும் ஒரு ஐந்து நிமிடம் கண்களை மூடி தியானத்தில் இருந்தால் உடம்பு சுறுசுறுப்பு பெரும். மனது அமைதி பெறும் என்று சொல்லுவார்கள். இந்த தியானம் செய்யும் போது நம்முடைய உள்ளங்கைகளில் இந்த பொருளை வைத்துக் கொள்ள வேண்டும். அது என்ன பொருள் என்றால் சார்கோல். கரித்துண்டு. அயன் செய்யும் கடையில் போய் கேட்டாலே கொடுப்பார்கள். அப்படி இல்லை என்றால் இப்போதெல்லாம் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் சார்கோல் பேக் செய்து விற்கப்படுகின்றது. அதை வாங்கி இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

காலையில் எழுந்து பல் தேய்த்து விட்டு, முகம் கை கால்களை கழுவி விட்டு, முடிந்தால் குளித்துவிட்டு வீட்டில் கிழக்கு பார்த்தவாறு ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இன்னும் சொல்லப்போனால் அதிகாலை வேலை 6.00 மணி சூரிய உதயத்தின் போது தென்றல் காற்று வீசும் போது மொட்டை மாடியிலோ பால்கனியிலோ அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்தால் இன்னும் சூப்பரான பலன் கிடைக்கும். முதுகு தண்டுவடம் நேராக இருக்கட்டும். சம்மனம் போட்டு ஒரு விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு இரண்டு உள்ளங்கைகளிலும் ஒவ்வொரு கரி துண்டு வைத்து மூடி கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளங்கை அளவு கரித்துண்டு இருந்தால் போதும்.

அப்படியே மனதை அமைதியாக வைத்து உங்களுக்கு பிடித்த மந்திரத்தை சொல்லலாம். அல்லது பிடித்த தெய்வத்தின் பெயரை சொல்லலாம். உதாரணத்திற்கு வெறும் ‘ஓம்’ என்று சொல்லிக்கூட தியான நிலையில் மனதை ஒருநிலைப்படுத்தி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய சக்கரங்கள் சீராக இயங்கவில்லை என்றாலும், உங்களை சுற்றி இருக்கும் ஆரா வட்டத்தில் ஏதேனும் இடர்பாடு இருந்தாலும் அதை இந்த கரி துண்டு சரி செய்து விடும்.

- Advertisement -

அந்த சார்கோவிலுக்கு அவ்வளவு பவர் இருக்குங்க. இதை சொன்னால் உங்களுக்கு புரியாது. 11 நாள் தொடர்ந்து தினமும் மேல் சொன்னபடி தியானத்தில் அமருங்கள். வெறும் ஐந்தே நிமிடம் தான். (ஐந்து நிமிடத்திற்கு மேல் 15 நிமிடம் வரை இந்த தியானத்தில் அமரலாம்‌. அது உங்களுக்கு நேரம் இருப்பதை பொருத்தது.) உங்களுக்கு நீங்களே புத்துயிர் பெற்றது போல உணர்வீர்கள். தினமும் அதே இரண்டு கரித்துண்டை பயன்படுத்தலாம். அந்த கரித்துண்டு உடைந்து போய்விட்டால் மட்டும் புதிதாக மாற்றிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பொல்லாத கண் திருஷ்டியை பொடி பொடியாக்க ஒரு கைப்பிடி வெண்கடுக்கில் இதை போட்டு விடுங்கள். இனி ஊரே ஒன்றாக சேர்ந்து உங்களை பார்த்து கண் வைத்தாலும் ஒன்றும் ஆகாது

தியானத்தை முடித்துவிட்டு ஒரு டப்பாவில் போட்டு அந்த கரி துண்டை மூடி ஏதாவது ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்து விடுங்கள்‌‌. இதை ஆண்கள் பெண்கள் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் என்று எல்லோருமே செய்யலாம். வாழ்வில் ஒரு புதுமையான மாற்றத்தை நிச்சயம் உங்களால் உணர முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -