எதிலும் உங்கள் கை ஓங்கி இருக்க, பகைவர்களை ஒன்றும் இல்லாமல் செய்ய, காலையில் எழுந்ததும் சூரியனுக்கு இதை மட்டும் செய்தால் போதுமே!

suryan-uruli
- Advertisement -

ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் சூரியன் சுப பலன்களை கொடுத்தால் போதும், அவர்கள் எத்தகையவரையும் தனக்கு கீழ் கொண்டு வந்து விடலாம். சூரியன் ஆளுமை திறனை வளர்க்கக் கூடிய அற்புத ஆற்றலை கொடுக்க வல்லது. அதிகாரத்தையும், தலைமைப் பண்பையும் விரும்புபவர்கள் சூரிய பகவானை நிச்சயம் வழிபட வேண்டும். எதிலும் உங்கள் கை ஓங்கி இருக்க, சூரிய வழிபாடு செய்வது சிறப்பு. அவ்வகையில் பகைவர்களை கூட ஒன்றும் இல்லாமல் செய்ய நாம் காலையில் எழுந்ததும் சூரியனுக்கு என்ன செய்ய வேண்டும்? என்கிற ரகசியத்தை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

enemy

நம் அனுதின வாழ்க்கையில் பல எதிரிகளையும், துரோகிகளையும் கடந்து கொண்டு தான் இருக்கிறோம். நம்மை சுற்றி தெரிந்தும், தெரியாமலும் எவ்வளவோ எதிரிகளையும், பகைவர்களையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். நம் கண்முன்னே இருக்கும் பகைவர்களும், நமக்குத் தெரியாமல் இருக்கும் துரோகிகளையும் சமாளிக்க தலைமை பண்பு அவசியம் தேவை. அடுத்தவர்களை அடக்கி ஆளும் அதிகாரமும், துணிச்சலும் நம்மிடம் வருவதற்கு சூரிய பகவான் அருள் தேவை.

- Advertisement -

பெயர், புகழ், செல்வாக்கு அதிகரிக்க தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்ய முடியாதவர்கள் காலையில் எழுந்ததும் குளித்து முடித்த பின்பு சூரியனுக்கு தண்ணீரை சமர்ப்பணம் செய்ய வேண்டும். நீங்கள் எழுந்ததும் முதலில் தண்ணீர் கூட பருகாமல் குளித்து முடித்து விட்டு வர வேண்டும். பின்னர் முதல் தண்ணீரை சூரியனுக்கு கிழக்கு நோக்கி நின்று சூரியனை பார்த்தபடி கையில் பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தபடி பூமியில் விட வேண்டும்.

surya-namaskar1

சூரிய காயத்ரி மந்திரம்:
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே!!
பாச ஹஸ்தாய தீமஹி!!
தந்நோ சூரிய: ப்ரசோதயாத்!!!

- Advertisement -

இப்படி செய்வதால் தண்ணீரை சூரியனுக்கு சமர்ப்பணம் செய்வதாக அர்த்தம். அதன் பிறகு நீங்கள் தண்ணீர் பருகி இந்த பிரார்த்தனையை நிறைவு செய்து கொள்ளலாம். சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரத்தை அனுதினமும் செய்து வருபவர்களுக்கு நிச்சயம் எல்லா புகழும் வந்து சேரும். தினமும் முடியாதவர்கள் சூரியனுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமாவது செய்யலாம்.

uruli

மேலும் சூரியனுடைய அருள் பெற பித்தளை அல்லது வெண்கல தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதனை வீட்டு வாசலில் வைத்து அதன் மீது சிவப்பு நிற பூக்களை மிதக்க விட வேண்டும். செந்நிற பூக்கள் சூரியனுக்கு மிகவும் உகந்தவை ஆகும். இவ்வாறு சூரியனுக்கு எதிரே நாம் வீட்டில் செய்து வைப்பதால் நம்மை சுற்றி நல்ல அதிர்வலைகள் உண்டாகும். பெரிய பெரிய வணிக வளாகங்கள், வியாபார ஸ்தலங்களில் இது போல் செய்து வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இதனை சூரியனுக்கு எதிரே வெயில்படும் இடங்களில் செய்வது இன்னும் சிறப்பு.

thulasi chedi

சூரியனின் அருள் பெற மேலும் துளசி பூஜை செய்வது, துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற செயல்களை செய்யலாம். அது போல எப்பொழுதும் வெளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் காலணிகளை கழற்றி வைக்கும் பொழுது உங்கள் கைகளை தண்ணீரால் கழுவி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சூரிய பகவானுடைய எதிர்மறையான விளைவுகள் குறையும். உப்பு மற்றும் அரிசி உணவுகளை நீங்கள் எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு சூரியனுடைய வலிமையை பெறலாம். இந்த விஷயங்களை எல்லாம் சரியாக கடைபிடித்தால் எவரும் வெல்ல முடியாத உயரத்திற்கு நீங்கள் செல்ல முடியும்.

- Advertisement -