நாளை மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு செல்லும் சூரிய பகவானால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தெரியுமா? சூரிய பெயர்ச்சி பலன்கள்!

suryan-astro-wheel
- Advertisement -

2022 சுபகிருது ஆண்டின் ஒவ்வொரு பெயர்ச்சியும் 12 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டங்களையும், துரதிர்ஷ்டங்களையும் மாறி மாறி வழங்குகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் இடம் பெயரும் கிரகங்களால் மனித வாழ்வில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. ஓரளவுக்கு இவற்றை பொதுவாக கணித்து கூறி விட முடியும். அந்த வகையில் நாளை மே 15ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு செல்லும் சூரிய பகவானால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை தேவை? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் காண இருக்கிறோம்.

ரிஷபம்:
உங்கள் ராசியில் இடம் பெயர இருக்கும் சூரிய பகவானால் தொழில் மற்றும் குடும்ப விஷயங்களில் சில சிக்கல்களை சந்திக்க நேரும். நீங்கள் எவ்வளவு தான் விடாமுயற்சி செய்து கொண்டிருந்தாலும், உங்களுக்கு அடிமேல் அடி விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு, எனவே எதையும் குருட்டாம் போக்கில் செய்யாமல் திட்டமிட்டு எந்த ஒரு காரியத்தையும் செய்வது நல்லது. சகோதர, சகோதரிகளுக்கு இடையே சில மனக்கசப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. அவர்கள் மூலம் தேவையற்ற வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. இந்த சூரிய பெயர்ச்சியால் கண் தொடர்பான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நாளை சூரிய பெயர்ச்சிக்குப் பிறகு சோர்வு அதிகம் காணப்படும். உடம்பில் ஒரு விதமான பலவீனமும் தென்படும். சுறுசுறுப்பின்மை, ஆற்றல் குறைவு, உடல் சோர்வு, உஷ்ணம், உடல் வலி போன்றவற்றை அனுபவிக்க நேரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற இடங்களுக்கு பயணம் செல்வதை தவிர்த்து விடுங்கள். பொருளாதார ரீதியான சரிவை சந்திக்க நேரும் என்பதால் முக்கிய முதலீடுகளை தள்ளி வைப்பது நல்லது. பெரிய தொகையை ஈடுபடுத்தும் முன்பு அதிக கவனம் தேவை, நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் சூரிய பெயர்ச்சிக்கு பிறகு அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய கோபத்தை சிலர் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நேரும். அடுத்தவர்கள் தோண்டிய குழியில் நீங்களே போய் விழுந்து விடாமல் இடம், பொருள், ஏவல் பார்த்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். உங்களுடைய உழைப்பிற்கு உரிய வருமானம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு என்பதால் அனாவசிய வாக்குவாதங்களை தவிர்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி பணப்புழக்கத்தை குறைத்து விடும் எனவே அனாவசிய ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து சிக்கனத்தை கடைபிடிப்பது ரொம்பவே நல்லது. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க திணறுவீர்கள். இதனால் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதிலும் காலதாமதம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அதிக தொகையை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்த்து விடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடங்களில் அடிக்கடி சிலரிடம் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படும் என்பதால் வார்த்தையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சாதகமற்ற நிலையில் இருப்பதால் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் குறையக்கூடும். சமூகத்திலும், குடும்பத்திலும் உங்களை சிலர் மட்டம் தட்டி பேசுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய சுயமரியாதை பல இடங்களில் கேள்விக்கு உள்ளாகும் என்பதால் கூடுமானவரை தேவையற்ற விஷயங்களில் ஈடுபடாமல் உங்களுடைய பொறுப்பு உணர்ந்து செயல்படுவது நல்லது. மற்றவர்களுடைய கேலி, கிண்டலுக்கு ஆளாகாமல் இருக்க அலட்சியம் கூடாது. சுவாச ரீதியான பிரச்சினைகளை அதிகம் அனுபவிக்க நேரும் என்பதால் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

- Advertisement -