தினமும் இதை மட்டும் செய்தாலே போதும். இருளில் இருக்கக்கூடிய உங்களுடைய வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துவிடும். நீங்கள் ஜெயிப்பதற்கு பிறந்தவர்களாக மாறிவிடுவீர்கள்.

surya-vanakkam
- Advertisement -

இந்த உலகத்தையே இருளிலிருந்து காக்க கூடிய சக்தி கொண்ட இறைவன் என்றால், அது அந்த சூரிய பகவான் தான். உலகத்தில் இருக்கக்கூடிய இருள் அத்தனையையும் நீக்கி, வெளிச்சத்துடன் சந்தோஷமாக வைத்துக் கொள்ளக்கூடிய சக்தியை கொண்ட அந்த சூரியபகவானுக்கு, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் இருளை போக்குவதா கஷ்டம். மனதில் நினைத்த எல்லாவற்றையும் சாதிக்க, வாழ்க்கையில் முன்னேற, சுறுசுறுப்பாக செயல்பட, தினமும் காலையில் எழுந்தவுடன் சூரியபகவானை பார்த்து நாம் இப்படி ஒரு சிறிய வழிபாட்டைனை மேற்கொள்ள வேண்டும். அது என்ன வழிபாடு என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sury

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட வேண்டும். 6 மணிக்கு முன்பாகவே குளித்து தயாராகி விடுங்கள். 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சூரிய பகவானை நீங்கள் தரிசனம் செய்ய வேண்டும். சூரிய பகவானைப் பார்த்து இரண்டு கைகளிலும் வணங்கிக்கொண்டு அதன் பின்பு ‘ஓம் சூர்யாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து நீங்கள் அன்றைய தினம் என்ன வேலையை செய்யப் போகிறீர்களோ, அந்த வேலை சிறப்பாக முடிய வேண்டும் என்று சூரிய பகவானிடம் சொல்லி ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சூரிய உதயத்தில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்வீச்சு நம்முடைய உடலுக்கு தேவையான உத்வேகத்தை கொடுக்கின்றது. பெரும்பாலும் இது நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இதனால்தான் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சூரிய நமஸ்காரத்தை செய்து வந்தார்கள். ஆனால் இன்று நூற்றுக்கு, 10 பேர் கூட சூரியன் உதயமாகும் போது கண்விழிப்பது கிடையாது. இதனாலேயே வாழ்க்கையில் நமக்கு பெரிய பெரிய பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது. இதை இல்லை என்று நம்மில் யாராலும் மறுக்கவே முடியாது.

surya-namaskar1

உங்களுடைய வாழ்க்கையில் எதை தொட்டாலும் தோல்வி, வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையாக இருக்கின்றது. இருள் சூழ்ந்த வாழ்க்கையாக இருக்கின்றது, என்று கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள், 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சூரிய பகவானை இரண்டு செகண்ட் பார்த்துவிட்டு, மேலே சொன்ன மந்திரத்தை உச்சரித்து உங்களுடைய தினசரி வேலையைத் தொடங்கி தான் பாருங்களேன். இதன் பின்னால் மறைந்திருக்கும் சக்தி என்ன என்பது உங்களுக்கே புரியும்.

- Advertisement -

வணக்கம், என்று இருக்கையை நாம் கூப்பி கும்பிடும் போது நம்முடைய உடம்பில் இருக்கக் கூடிய சக்கரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சீராக செயல்படத் தொடங்குகின்றன. நம் எதிரே எந்த நல்ல சக்தி இருந்தாலும், அந்த சக்தியை அப்படியே நம் உடம்புக்குள் ஏற்றுக் கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்த முத்திரைதான் இந்த அஞ்சலி முத்திரை. அதாவது வணக்கம் வைப்பதை தன் அஞ்சலி முத்திரை என்று சொல்வார்கள். அதனால் தான் அந்த காலத்தில் இருந்தே நம்முடைய முன்னோர்கள், நம்முடைய பண்பாட்டில் வணக்கம் சொல்ல வேண்டும் என்ற பழக்கத்தையே கொண்டு வந்துள்ளார்கள்.

anjali-mudra

எதிரே நிர்ப்பவர்களுடைய நேர்மறை ஆற்றலை அப்படியே கிரகித்துக் கொள்ளக் கூடிய சக்தி இந்த வணக்கத்திற்கு உண்டு. சூரியனை பார்த்து நாம் வணக்கம் வைக்கும்போது சூரியனிடம் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றலும் சக்தியும் அப்படியே நமக்குள் வந்துவிடும். பிறகு என்ன. தீயாய் வேலை செய்து முன்னேற வேண்டியது மட்டும்தான் இனி பாக்கி. முயற்சி செய்து பாருங்கள். வெற்றி உங்கள் பக்கம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -