உங்களைப் பீடித்து இருக்கும் கொடுமையான வறுமையும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக இந்த அதிசக்தி வாய்ந்த சொர்ண ஆகர்ஷன எந்திரத்தை காகித்ததில் வரைந்து, இந்த மந்திரத்தை சொல்லித்தான் பாருங்களேன்!

- Advertisement -

வறுமையின் பிடியிலிருந்து எளிதாக நம்மை விடுவிக்க கூடிய சக்தி படைத்தவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். கலியுகத்தில் காக்கும் கடவுளாக விளங்கும் இந்த பைரவர், சுவர்ண ஆகர்சன அவதாரத்திலும் நமக்கு அருள் புரிகின்றார். இத்தகைய அதிசக்தி வாய்ந்த சுவர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரத்தை வரைந்து அவருக்கு உரிய மந்திரங்களை உச்சரித்து இப்படி வழிபட்டால் நம் இல்லத்திலும் வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும் என்பது தீவிரமான நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வழிபாட்டினை எப்படி முறையாக செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

swarna-agarshana-bairavar-yantra

மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் காட்டியுள்ளபடி நீங்கள் எந்திரத்தை வரைந்து கொள்ள வேண்டும் அல்லது உங்களால் பணம் கொடுத்து இந்த ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் எந்திரத்தை வாங்க முடிந்தால் அதனை வாங்கியும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். இந்த வழிபாட்டினை நீங்கள் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில் தொடங்குவது முறையாகும். பூஜையை தொடங்கும் நாளன்று நீங்கள் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு பின்னர் மாலை நேரத்தில் பூஜை அறையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த எந்திரத்தில் இருக்கும் வரைபடத்தை காகிதத்தில் வரைந்து தாம்பூலத் தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதற்கு வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். சந்தன, குங்குமம் திலகம் இட்டுக் கொள்ளுங்கள். செப்புத் தகட்டினை வைத்திருப்பவர்கள் அதற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். நீர் அல்லது பன்னீரால் அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பின்னர் மேற்கூறிய அலங்காரங்களை செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

swarna-bairavar3

இந்த வழிபாட்டிற்கு நைவேத்தியம் படைக்க கற்கண்டு, சுண்டல், சர்க்கரை, தேன், இளநீர், பொரி கடலை, அவல் பாயசம், பானகம் ஆகியவற்றில் உங்களால் முடிந்ததை நீங்கள் படைத்துக் கொள்ளுங்கள். சுவர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்திருந்தால் அதற்கும் இதே போல அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாழை இலையை விரித்து அதில் தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். பின்னர் கிழக்கு முகமாக நீங்கள் அமர்ந்து கொண்டு இருக்கிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சொர்ணாகர்சண பைரவர் மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே சொர்ணாகர்சண
பைரவாய தன தான்ய விரித்திகராய
சீக்கிரம் வசியம் குருகுரு ஸ்வாகா!

swarna-bairavar2

பின்னர் இந்த செப்பு தகட்டிற்கும், ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் தூப, தீப ஆரத்தி காண்பிக்க வேண்டும். பின் மேற்கூறிய இந்த மந்திரத்தை 1008 முறை நீங்கள் பாராயணம் செய்ய வேண்டும். அதிசக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை சொல்லும் பொழுது உங்கள் மனதில் தேவையற்ற எண்ண ஓட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். மிகுந்த பக்தி சிரத்தையுடன் இந்த மந்திரத்தை கூறி முடிக்கும் வரை தியான நிலையில் அமர்ந்து கொள்ளுங்கள். இதே போல நீங்கள் ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் உங்கள் இல்லத்தில் இருக்கும் எத்தகைய வறுமையும் நீங்கி உங்களுக்கு செல்வ செழிப்பு நிச்சயம் உண்டாகும். மேலும் குடும்பத்தில் இருக்கும் எத்தகைய தரித்திரம், பீடைகளும் நீங்கி மஹாலக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.

- Advertisement -