சொர்ணாகர்ஷன பைரவரை நினைத்து, உங்கள் வீட்டிலேயே 9 வாரங்கள் இப்படி பூஜை செய்தால், வேண்டுதல் அப்படியே நிறைவேறும்.

swarna-bairavar
- Advertisement -

பொதுவாகவே, பைரவரை வீட்டில் வழிபாடு செய்வதற்கு எல்லோருமே கொஞ்சம் தயங்குவார்கள். அஷ்ட பைரவர்களில், சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ளலாம். தவறு ஒன்றும் கிடையாது. அப்படி படம் வைத்துக் கொள்ள இஷ்டம் இல்லாதவர்கள் கூட, சொர்ணாகர்ஷனரை நினைத்து, வீட்டில் பூஜை செய்யலாம். மனதார நினைத்து வீட்டில் ஏற்றக்கூடிய தீபச்சுடரில் சொர்ணாகர்ஷண பைரவர் நமக்கு அருள் புரிவார் என்பதில் சந்தேகமே கிடையாது. வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கி, சுபிட்சமான வாழ்க்கையை பெறுவதற்கு சொர்ணாகர்ஷண வழிபாடு மிகவும் உகந்தது. இந்த சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டை நம்முடைய வீட்டில் முறைப்படி எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

swarna-bairavar3

இந்த பூஜைக்கு செவ்வரளி பூ, மரிக்கொழுந்து கிடைத்தால் மிகவும் நல்லது. ஒரு சிறிய கண்ணாடி பௌலில் ஒரு கைப்பிடி அளவு சில்லரை காசுகளை போட்டுக் கொள்ளுங்கள். அந்த காசின் மேல் கொஞ்சம் செவ்வரளி பூ, கொஞ்சம் மரிக்கொழுந்து போட்டு அலங்காரம் செய்து, ஒரு தாம்பாளத் தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இதேபோல் இன்னொரு கண்ணாடி பௌலில் கொஞ்சமாக பன்னீர் சேர்த்து அந்த பன்னீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கொஞ்சம், மரிக்கொழுந்து போட்டு அந்தத் தண்ணீரையும் வாசமாக மாற்றி அதே தாம்புல தட்டில் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் பைரவருக்கும் உளுந்த வடை செய்து நைவேத்தியமாக வைக்கலாம். பிரசாதம் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு பழத்தை நைவேத்தியமாக வைப்பது தவறு கிடையாது. பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, எப்போதும் போலவே தீபம் தூபம் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜைக்கு தயாரான பின்பு சுவர்ணாகர்ஷண பைரவரின் ‘ஓம் ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவரே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து பைரவருக்கு வாசனை நிறைந்த மல்லிகை பூவால் அர்ச்சனை செய்யலாம்.

marikozhunthu

அப்படி இல்லை என்றால், ஜெப  மாலை ஏதேனும் உங்கள் கையில் வைத்திருந்தால் கூட, அந்த மாலையில் எண்ணிக்கையை வைத்து 108 கணக்கு செய்து கொள்ளுங்கள். அது உங்களுடைய இஷ்டம்தான். இவ்வாறாக சொர்ணாகர்ஷண பைரவர் பூஜை உங்களுடைய வீட்டில் மனநிறைவோடு செய்ய வேண்டும். பூஜையில் வைத்த அந்த தீர்த்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். தரித்திரம் நீங்கும். பூஜையில் வைத்த அந்த சில்லரை காசுகளை பீரோவில் வைத்துக்கொள்ளலாம். பூஜை பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தவறு கிடையாது. வாரம் ஒரு முறை அந்த சில்லரை காசுகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

- Advertisement -

தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளிக்கிழமை இந்த பூஜையை நம்முடைய வீட்டில் செய்வது, நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தேடித்தரும். முடியாதவர்கள் 9 பவுர்ணமி தினத்தில் இந்த பூஜையை செய்யலாம். 9 தேய்பிறை அஷ்டமியில் இந்த பூஜையை செய்வது மேலும் மேலும் அதிர்ஷ்டத்தை நமக்கு தேடித்தரும். அதிலும் இந்த தேய்பிறை அஷ்டமி செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் வந்தால் மிகவும் சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது.

தொடர்ந்து 9 வாரங்கள் இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் கூட தேய்பிறை அஷ்டமி வரக்கூடிய செவ்வாய் கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் செய்தால் கூட நல்ல பலனை பெற முடியும். தீராத பண கஷ்டம், தீராத பிரச்சனை மனக்கவலை, தீராத நோய் தீர இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்தால், கைமேல் பலனை கொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உங்களுக்கு இவர்களுடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -