ஸ்வர்ண தோஷம் விலக வழிபாடு

mahalashmi6
- Advertisement -

நம்முடைய வீட்டில் இருக்கும் தங்கம் நிலையாக நம் வீட்டிலேயே இருக்க வேண்டும். அடகு கடைக்குச் செல்லக்கூடாது. தொலைந்து போகக்கூடாது என்றால் அந்த ஸ்வர்ண தேவதையின் ஆசிர்வாதம் தேவை. புதுசாக நகைகளை வாங்கி சேர்க்க வேண்டும் என்றாலும் சுவர்ண தேவதையின் ஆசிர்வாதம் தேவை.

அடமானத்தில் வைத்த நகையை மீட்டு எடுக்க வேண்டாம் என்றாலும் இந்த ஸ்வர்ண தேவதையின் ஆசிர்வாதம் நிச்சயம் இருக்க வேண்டும். ஸ்வர்ண தோஷத்தை விளக்குவதற்கு ஆன்மீகம் சார்ந்த எளிமையான பரிகாரம் இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

- Advertisement -

ஸ்வர்ண தோஷம் விலக பரிகாரம்

தினமும் ஸ்வர்ண தேவதையை வீட்டில் இருக்கும் பெண்கள் நினைத்தாலே உங்களுக்கு தங்கம் சேரும். ஸ்வர்ண தேவதை என்பவள் தங்கத்திற்கு அதிபதியாக இருப்பவள். அவளும் மகாலட்சுமி ஸ்வரூபம் தான். வீட்டில் விளக்கு ஏற்றும் போது ‘ஸ்வர்ண தேவதையே எங்க வீட்டில நிறைய தங்கம் சேரனும்’ என்று நினைத்து விளக்கு ஏற்றினால் நிச்சயம் உங்களுடைய வீட்டிற்கு ஸ்வர்ண தோஷம் என்பது வராது.

எங்களிடம் நிறைய தங்க நகை இருந்தது. நான் 50 பவுன் வச்சிருந்தேன், 100 பவுன் வச்சிருந்தேன், ஆனா இன்று எல்லாம் அடகு கடைக்கு போய் உட்கார்ந்து விட்டது. கழுத்தில் போட்டிருக்கும் செயின், காதில் போட்டு இருக்கும் தோடு மட்டும்தான் மிச்சம் என்று நீங்கள் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறீர்களா, முதலில் தாமரை பூ, பன்னீர் ரோஜா, மஞ்சள் நிற ஆவாரம் பூ, இந்த மூன்று பூக்களை எடுத்துக்கோங்க.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் நீங்கள் அணிந்திருக்கும் நகையை கழட்டி போடுங்க. ஒரே ஒரு கம்மல், ஒரு மூக்குத்தி போட்டாலும் போதும். சின்ன திருகாணி போட்டாலும் போதும். உங்க தங்கம் அந்த கிண்ணத்தில் இருக்க வேண்டும். அதன் மேலே தயாராக இருக்கும் இந்த மூன்று பூக்களை போட்டு அப்படியே மேலே ஒரு மூடி போட்டு வைத்து விடுங்கள். இந்த பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு ஸ்வர்ண தேவதையை நினைத்து பிரார்த்தனை வைக்க வேண்டும்.

என்னுடைய தங்க நகைகள் எல்லாம் அடமானத்திலிருந்து சீக்கிரம் மீட்டு எடுக்க வேண்டும் என்ற வேண்டுதலை வையுங்கள். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். மூன்று வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை இரண்டு மணி நேரமோ, மூன்று மணி நேரமோ உங்களுடைய தங்கம் அந்த பூக்களின் வாசத்திலேயே இருக்கட்டும்.

- Advertisement -

பிறகு வெள்ளிக்கிழமையே அந்த நகையை எடுத்து வீட்டில் இருக்கும் பெண்கள் அணிந்து கொள்ள வேண்டும். பரிகாரம் இவ்வளவுதான். இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுக்கு இருக்கும் ஸ்வர்ண தோஷம் விலகி அடமானத்தில் வைத்த நகையை திரும்பவும் மீட்டு எடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சரி எங்களிடம் அடமானத்தில் நகை எல்லாம் இல்லை.

இதையும் படிக்கலாமே: பண வரவுக்கு பௌர்ணமியில் செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு

புது நகை வாங்க வேண்டும் என்றாலும் இதே போல பரிகாரத்தை செய்யலாம். பரிகாரத்தை செய்து அந்த கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு இன்னும் நிறைய தங்கம் வாங்கக்கூடிய யோகத்தை கொடு ஸ்வர்ண தேவதையே என்றும் மனமுருகி பிரார்த்தனை செய்து அந்த நகையை நீங்கள் அணிந்து கொண்டால், புதுப்புது நகையை வாங்கி அழகாக அணிந்து கொள்ளக்கூடிய யோகத்தை அந்த ஸ்வர்ண தேவதை உங்களுக்கு கொடுப்பாள் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -