பண வரவுக்கு பௌர்ணமியில் செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு

kula dheivam pournami
- Advertisement -

குலதெய்வ வழிபாடு ஒரு குலத்தையே தழைத்து வாழ செய்யக் கூடியது. ஆகையால் தான் நம் முன்னோர்கள் காலம் முதலில் குலதெய்வ வழிபாட்டிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள் எத்தனை தெய்வங்களை நாம் வணங்கினாலும் குலதெய்வ வழிபாட்டை சரிவர செய்யவில்லை என்றால் அனைத்தும் பயனற்றது.

அந்த வகையில் நம்முடைய பணவரவு அதிகரிக்க குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்பதற்கு சில வழிபாட்டு முறைகள் உள்ளது அதில் ஒரு வழிபாட்டு முறை குறித்த தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவு இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவை அதிகரிக்க குலதெய்வ வழிபாடு

இந்த வழிபாடு பௌர்ணமி தினத்தன்று தான் செய்ய வேண்டும் இந்த வழிபாடு நீங்கள் செய்யும் நேரத்தில் பௌர்ணமி திதி இருக்க வேண்டும் அதை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டிற்கு நமக்கு சுத்தமான நல்ல மனம் மிக்க குங்குமம் தேவை இதை மட்டும் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் அவரவர் முறைப்படி வீட்டில் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு பூஜை அறையில் அமர்ந்து குலதெய்வத்தை முதலில் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் நீங்கள் வாங்கிய குங்குமத்தை பரப்பி வைத்து விடுங்கள். இவையெல்லாம் செய்யும் போது உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டே செய்யுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அந்த குங்குமத்தின் மீது ரூபாய் என்ற வார்த்தையை இடது கை மோதிர விரலால் எழுத வேண்டும். இதை ஆங்கிலம் தமிழ் என அவரவருக்கு தெரிந்த மொழியில் எழுதலாம். அதன் பிறகு இந்த குங்குமத்தை குலதெய்வத்தை நினைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். அதன் பிறகு பௌர்ணமி தொடர்ந்து வரும் 15 நாட்களும் இந்த குங்குமம் பூஜை அறையில் இருக்க வேண்டும்.

நீங்கள் வெளியில் செல்லும் ஒவ்வொரு நாளும் இந்த குங்கும தட்டில் எழுதி இருக்கும் ரூபாய் என்ற வார்த்தையை பார்த்து மனதார இன்று பணவரவு எங்களுக்கு தாராளமாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வெளியில் செல்லுங்கள். வீட்டிற்கு திரும்ப வரும் போது நிச்சயம் உங்களின் தேவைக்கான பணம் கட்டாயமாக கிடைத்திருக்கும்.

- Advertisement -

இதை அமாவாசை அன்று எடுத்த குங்குமத்தை நீங்கள் தினமும் நெற்றியில் வைத்தால் போதும்.15 நாள் கழித்து மீண்டும் பௌர்ணமி அன்று இதே போல செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டு முறை உங்களுக்கு நல்ல பணவரவையும் குலதெய்வத்தின் அருளையும் தரக்கூடியதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: திருச்செந்தூர் முருகன் அருளை பெற சூட்சம வழிபாடு

தினமும் அந்த குங்குமத்தை பார்த்து வேண்டும் போது குலதெய்வத்தையும் நீங்கள் மனதார வேண்டிக் கொள்வீர்கள். ஆகையால் இது இரட்டை பலனை தரக் கூடிய அற்புதமான பரிகாரம். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடையுங்கள்.

- Advertisement -