Tag: காதல் கவிதை வரிகள்
உன் நினைவில் என் இரவு – காதல் கவிதை
உன்னை காண துடிக்கும்
என் கண்களை,
காலை வரை பொறுத்திருக்க
கெஞ்சுகிறேன்..
உன் நினைவோடு கொஞ்சி விளையாடும்
என் மனதை,
விடியல் வரை அமைதிகாக்க வேண்டுகிறேன்..
உன் கால்களின் கொலுசு சத்தமும்
உன் முகத்தின் முத்து சிரிப்பும்
என் காதுகளில் ஒளித்திருக்க..
கண்ணயர்ந்து நான் எப்படி உறங்குவேன்...