விளக்கு ஏற்றுவதில் சந்தேகமா? 10 சந்தேகங்களும் பதில்களும்.

vilakku
- Advertisement -

தினந்தோறும் நம் வீட்டில் விளக்கினை ஏற்றி வழிபட்டு வந்தாலும் அதில் உள்ள சந்தேகங்கள் மட்டும் சிலருக்கு இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அதை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் நம் முன்னோர்கள் நமக்கு கூறிச்சென்ற பழக்கவழக்கங்கள் என்ன என்று நாம் தெரிந்து கொண்டு அதனை பின்பற்ற வேண்டும். ஏனென்றால் நாம் சாஸ்திரத்தில் கூறப்பட்டதை விட நம் பாரம்பரியத்தில் கூறப்பட்டிருக்கும் பழக்கத்தைப் பின்பற்றி வருவது நன்மையான ஒன்று. அந்த பழக்கவழக்கத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் ஆன்மீக புத்தகங்களை படித்து அல்லது மற்ற பெரியவர்களிடம் அதனை கேட்டு பின்பற்ற வேண்டும். அப்படி பலருக்கும் விளக்கேற்றுவதில் உள்ள சந்தேகங்களை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.

deepam

1. வீட்டில் விளக்கை எந்த திசை நோக்கி ஏற்றி வைப்பது நல்லது?

- Advertisement -

யஜுர்வேதத்தின் படி விளக்கினை கிழக்கு, வடக்கு திசை நோக்கி ஏற்றலாம். மேற்கும் தெற்கும் விளக்கு ஏற்ற சரியான திசை அல்ல. இறந்தவர்களுக்கு கர்மா செய்யும் போது குறிப்பிட்ட அந்த நாட்களில் மட்டும் தான் தெற்கு திசையை நோக்கி விளக்கினை ஏற்ற வேண்டும். மற்றபடி யார் கூறினாலும் தெற்கு திசையை நோக்கி நம் வீட்டில் விளக்கு ஏற்றுக் கூடாது.

2. எந்த திரியை கொண்டு விளக்கு ஏற்றலாம்?

- Advertisement -

பருத்தியால் ஆன பஞ்சுத்திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு வீட்டிலும் கோவில்களிலும் விளக்கு ஏற்றலாம். தாமரை தண்டினாலான திரியில் ஏற்றும் விளக்கிற்கு அதிக பலன் உண்டு.

3. விளக்கின் திரி எத்தனை இதழ்களில் இருக்க வேண்டும்?

- Advertisement -

திரியானது ஒன்று, இரண்டு, மூன்று என்ற எந்த கணக்கில் வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். தீபம் அணையாமல் எரியும் அளவிற்கு திரியினை போடவேண்டும். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.

4. வீட்டில் விளக்கேற்ற சிறந்த எண்ணெய் எது?

சுத்தமான பசு நெய், நல்லெண்ணெய் இவைகளை கொண்டு நம் வீட்டில் விளக்கினை ஏற்றலாம். இதனால் நமக்கு கிடைக்கும் பலன் நன்மையாக தான் இருக்கும். ஆனால் நெய்யையும் நல்லெண்ணையையும் கலந்து விளக்கினை ஏற்றக்கூடாது.

5. கடையில் விற்கப்படும் கூட்டு எண்ணெயால் விளக்கு ஏற்றலாமா?

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணெய் கலந்து தீபம் ஏற்றுவது சாஸ்திரப்படி சரியானது அல்ல. கூட்டு எண்ணெய், கடலை எண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய் இவற்றில் கட்டாயம் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.

kamatchi vilakku

6. ஆலயங்களில் விளக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது?

நம் வீட்டில் சாந்தமான தெய்வங்களை மட்டும் வைத்து வழிபடுகின்றோம். ஆனால் ஆலயங்களில் சாந்தமான தெய்வம், உக்கிரமான தெய்வம் இரண்டையும் சேர்த்து வழிபடுவோம். ஆகையால் விளக்கு ஏற்றுவதில் சிறு வேறுபாடு உள்ளது. ஆலயங்களில் நெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணை இவைகளில் விளக்கு ஏற்றலாம்.

7. ஆலயங்களில் இலுப்பெண்ணெயில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்?

இலுப்பை எண்ணெய் கசப்புத் தன்மை உடையது. இந்த எண்ணெயில் கோவில்களில் விளக்கு ஏற்றும் போது நம்மீது மற்றவர்களுக்கு உள்ள கசப்புகளும், வெறுப்புகளும் நீங்கி, அன்பும் பரிவும் ஏற்படும். மேற்கு நோக்கி உள்ள சிவாலயங்களில் மாலை நேரத்தில் பிரதோஷ தினத்தன்று இலுப்பெண்ணெய்யில் விளக்கேற்றி வந்தால், கணவன் மனைவியாக இருந்தாலும், அண்ணன் தம்பியாக இருந்தாலும், தந்தை பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடையேயான மனக்கசப்புகள் விலகும். 16 வாரங்கள் கழித்து நம் மீது கோபம் கொண்டவர்கள் தானாகவே வந்து நம்மிடம் பேசுவார்கள்.

8. தினசரி வீட்டில் பூஜை அறையில் எத்தனை தீபங்கள் ஏற்றலாம்?

தினம்தோறும் நம் வீட்டில் ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் போதுமானது. அம்பாளையும், அல்லது ஸ்ரீ சக்கரத்தை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்கள், பூஜை அறையின் வலது புறம் பசு நெய் தீபமும் இடது புறம் நல்லெண்ணை தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

9. வாசலில் கோலம் போடும் முன் விளக்கேற்ற வேண்டுமா? விளக்கேற்றிய பிறகு கோலம் போட வேண்டுமா?

வாசலை தெளித்து கோலமிட்டு விட்டு பின்புதான் பூஜை அறையில் விளக்கு ஏற்றவேண்டும்.

10. வீட்டு வாசலில் தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும்?

vilakku

பூஜை அறையில் தீபத்தை ஏற்றி விட்டு, பின்பு அந்த தீபத்திலிருந்து மற்றொரு தீபத்தை ஏற்றிக்கொண்டு அதன்மூலம் வாசலில் உள்ள தீபத்தை ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே
இந்தக் கடவுளை இத்தனை முறைதான் சுற்றி வலம் வரவேண்டும். மாற்றி சுற்றினால் ஒரு பயனும் இல்லை.

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Veetil vilakku vaipathu eppadi? Deepam etrum murai in Tamil. Vilakku etrum palangal Tamil.

- Advertisement -