இந்த 4 பொருளை மட்டும் இப்படி செய்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எந்த தடையும் உடனே நீங்கி செல்வம் மேலும் பெருகும்!

milagu-padikaram-lakshmi
- Advertisement -

எவ்வளவு முயற்சி செய்தாலும் தொடர் சறுக்கல்கள் மற்றும் தோல்விகளை சந்தித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் விரக்தி உண்டாகிறது. இது எல்லா மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்தில் அனுபவிக்கும் ஒரு விஷயமாக தான் இருக்கும். இன்று ஒருவருக்கு நேர்ந்தால், நாளை இன்னொருவருக்கும் அது நேரலாம். அவரவர் கர்ம வினைப்படி தங்களுடைய சுய ஜாதகத்தில் குறிப்பிட்ட காலங்களில் பாதகமான அமைப்புகள் உண்டாகின்றன. அதனடிப்படையில் ஏற்றமும், இறக்கமும் நம் வாழ்வில் நடைபெறுகிறது. இது ஜோதிட சூட்சம விதியாகும். இதனை எப்படி சாதுர்யமாக நாம் வென்று காட்டலாம்? தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற என்ன பரிகாரம் செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

money

நன்றாக முன்னேறி கொண்டிருக்கின்ற தொழில் திடீரென ஏதாவது ஒரு பிரச்சனையை முன்னிறுத்தி மந்த நிலைக்கு சென்றுவிடும். எவ்வளவு முதலீடு செய்தாலும், புதிய முயற்சிகளை கையாண்டாலும் எதுவும் பலன் தராமல் போய்விடும். அது போல் புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு எதுவும் சரியாக அமையாமல் போய்விடும். இதற்கு சுய ஜாதகத்தில் பாதக பலன்களை கொடுக்கும் பாதகாதிபதிகள் காரணமாக அமைவர்.

- Advertisement -

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் பாதகமான பலன்களைக் கொடுக்கிறது? என்பதை தெரிந்து வைத்துக் கொண்டால் அதனுடைய அதி தேவதைகளை வணங்கி நாம் அந்த கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். வரக்கூடிய துன்பத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதன் வீரியத்தை கட்டாயம் குறைத்துக் கொள்ள முடியும். இதை பல்வேறு ஜோதிட நூல்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறது.

jathagam astro

தொடர் தோல்விகளை சந்திக்கும் ஒரு நபருடைய ஜாதகத்தில் ஏதாவது ஒரு சில கிரகங்கள் பாதகமாக நிச்சயம் அமைந்திருக்கும். அது என்ன கிரகம்? என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அந்த கிரகத்தினுடைய அதி தேவதையாக விளங்கும் கடவுளை வணங்கி வர அத்தனை பிரச்சினையும் தீர்ந்துவிடும். அப்படி எனக்கு தெரியவில்லை என்று நினைப்பவர்கள் எளிதாக வீட்டிலேயே இந்த பரிகாரத்தை செய்து எல்லா பிரச்சினைகளிலிருந்தும் நிவர்த்தி காணலாம்.

- Advertisement -

நீங்கள் எந்த நாளில் பிறந்தீர்கள்? என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். திங்கள் முதல் ஞாயிறு வரையிலான ஏழு நாட்களில் நீங்கள் பிறந்த நாள் வெள்ளி என்று வைத்துக் கொண்டால் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து இந்த எளிய பூஜையை மேற்கொள்ள வேண்டும். ஒரு முறை இதை செய்தால் கூட போதும். உங்களுடைய பிரச்சனைகள் அத்தனையும் தீரும். பிரம்ம முகூர்த்தமான 4.30 மணி முதல் 5 மணி வரையிலான காலகட்டத்தில் எழுந்து நீராடி உங்கள் வீட்டு பூஜை அறைக்கு சென்று அங்குள்ள படத்திற்கு முன்பு வெள்ளியால் ஆன பிறகு அல்லது பித்தளை காமாட்சி விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

padikaram

பின்னர் கிழக்கு பார்த்து நின்று கொண்டு உங்கள் கைகளில் கொஞ்சம் படிகாரத்தை இடித்து வைத்துக் கொள்ளுங்கள், அதே போல பச்சை கற்பூரம் கொஞ்சம், கருமிளகு கொஞ்சம், கல் உப்பு கொஞ்சம் இடித்து பரிகாரத்துடன் சேர்த்து உள்ளங்கையில் வைத்து மூடி உங்களை நீங்களே கிழக்கு திசையில் நின்றபடி கடிகார முல்லை போல மும்முறை சுற்றி கொள்ளுங்கள். பின்னர் கைகளை தண்ணீரால் கழுவி விடுங்கள். அன்று மாலை விநாயகர் கோவிலுக்கு சென்று உங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வந்து விடுங்கள். எவ்வளவு கிரக தோஷம் இருந்தாலும் இந்த எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் அதிலிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். எல்லா தடைகளும் நீங்கி வெற்றி உங்கள் பக்கம் திரும்பும்.

- Advertisement -