இவ்வளவு எளிமையான பரிகாரத்தில் எவ்வளவு தடைகள் தகர்த்தெறியப்படுகிறது என்று தெரியாமல் போய் விட்டதே… இனி மேல் ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் இதை செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.

kula-dheivam-manjal
- Advertisement -

அன்றாடம் நம் வாழ்க்கையில் பல தடைகளும், தடங்கல்களும் ஏற்படுகின்றன. அந்த தடைகளையும், தடங்கல்களையும் அகற்றுவதற்கு நாம் அனுதினமும் போராடிக் கொண்டு தான் இருக்கின்றோம். அந்த போராட்டத்தினால் சில நேரங்களில் நன்மைகள் ஏற்பட்டாலும், பல நேரங்களில் தோல்வியே ஏற்படுகிறது. நாம் செய்யக் கூடிய நல்ல காரியங்கள் நல்லபடியாக நடந்தேற நாம் பல பரிகாரங்களை செய்கிறோம். ஒரே ஒரு பொருள் பல தடைகளை தகர்த்தெறிவதோடு நம் வாழ்க்கையும் மங்களகரமாக மாற்றுகிறது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தடைகளை தகர்த்தெறிவதற்கு என்ன செய்யலாம் என்று தான் பார்க்கப் போகிறோம்.

மங்களகரமான பொருட்கள் என்றதும் முதலில் நம் நினைவிற்கு வருவது மஞ்சள் தான் அப்படிப்பட்ட மஞ்சளில் தான் இந்த பொருளை நாம் தயார் செய்ய போகிறோம். இந்த பொருளை நாம் தயார் செய்வதற்கு விரலி மஞ்சள் மற்றும் தர்ப்பையும் தேவைப்படும். ஒரு சிறிய துண்டு விரலி மஞ்சள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு தர்ப்பையை எடுத்து நன்றாக சுத்த வேண்டும். அந்த தர்ப்பை பிரியாத வண்ணம் அதன் மேல் மஞ்சள் நிற கயிற்றால் சுற்றி நன்றாக முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் பொருள் தயாராகி விட்டது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று நீராடி விட்டு, வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாளத்தின் மேல் இந்த பொருளை வைத்து, அதன் மேல் நம் கையை வைத்து “இது எனக்கு உறுதுணையாக பக்கபலமாக இருக்க வேண்டும்” என்று நம்முடைய குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்ள வேண்டும். மஞ்சள் மங்களகரமான பொருள். தர்ப்பை நம் தோஷத்தை நீக்கக்கூடியது. இவை இரண்டும் ஒன்றாக சேரும் பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தோஷங்களும், அந்த தோஷத்தால் ஏற்படக்கூடிய தடைகளும் தகர்த்தெரிந்து நம் வாழ்க்கை மங்களகரமாக அமையும் என்பதே இதன் அர்த்தம்.

இதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும். பழைய மஞ்சள் மற்றும் தர்ப்பையை கால்படாத இடத்தில் போடலாம் அல்லது ஓடுகிற நீரில் போடலாம். இதை நாம் தினமும் கையில் வைத்துக்கொண்டு நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் இதை நம்முடைய பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் அல்லது நம்முடைய பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இதை நாம் எடுத்துக் கொண்டு வெளியில் செல்லும் பொழுது நமக்கு எதிராக வரக்கூடிய தடைகள் அனைத்தையும் அது தகர்த்தெறியும் வல்லமை படைத்தது. திருமண தடை உள்ளவர்கள் இதை தங்களுடைய உச்சியின் மேல் வைத்து சிறிது நேரம் பிரார்த்தனை செய்வதன் மூலம் தங்களுடைய திருமண தடைகள் அனைத்தும் விலகி வரன் வீடு தேடி வரும். தியானம் செய்யும் பொழுது இந்த பொருளை நம் நெற்றியில் வைத்து தியானம் செய்வதன் மூலம் நாம் நினைக்கும் செயலை செய்வதற்குரிய நல்ல வழிகள் நமக்கு தென்படும்.

இதையும் படிக்கலாமே: தாங்க முடியாத துன்பத்தில் தவிப்பவர்கள் துர்க்கை அம்மனை இந்த ஒரு மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் நிச்சயம் அம்பிகையே நேரில் வந்து உங்கள் பிரச்னைகளை தீர்ப்பார்.

குறிப்பு: இந்த பொருளை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் உபயோகப்படுத்தியதை மற்றொருவர் உபயோகப்படுத்தக் கூடாது. மேலும் பெண்கள் மாதவிலக்கு சமயத்தில் இதை தொடக்கூடாது.

- Advertisement -