தாங்க முடியாத துன்பத்தில் தவிப்பவர்கள் துர்க்கை அம்மனை இந்த ஒரு மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் நிச்சயம் அம்பிகையே நேரில் வந்து உங்கள் பிரச்னைகளை தீர்ப்பார்.

amman4
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல விதமான வேதனைகளும் பிரச்சனைகளும் இருக்கத் தான் செய்கிறது. அது ஒரு அளவிற்கு மேல் போகும் போது அதை சமாளிக்க முடியாமல் நாம் இறைவனை தான் சரணடைவோம். அப்படி நம்முடைய துன்பம் துயரங்கள் இருந்து உடனே மீட்கும் அன்னையாக விளங்குபவள் தான் இந்த துர்க்கை. துர்க்கை என்றால் வெல்ல முடியாதவள் என்றும், வெற்றி தருபவள் என்றும் பொருள். அப்படியான இந்த அம்பிகையை நாம் நம்முடைய தீராத துன்பத்திலிருந்து வெளிவர எப்படி வழிபடுவது என்பதை பற்றிதான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த துர்க்கை அம்மன் வடமாநிலங்களில் வெகு விமர்சையாக வழிபடுகிறார்கள். நாமும் இந்த துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை ராகு காலத்திலும், வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த பதிவில் துர்க்கை அம்மனை நாம் செவ்வாய் ஹோரையில் அவருக்கு பிடித்த ஒரு மலரை கொண்டு வழிபட்டு நம்முடைய பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தீராத பிரச்சனைகள் தீர துர்க்கை அம்மன் வழிபாடு
இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை காலை 6 யிலிருந்து 7 செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டும். இந்த வழிபாடை செய்ய ஆலயம் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. வீட்டில் செய்து கொள்ளலாம் உங்களிடம் ஏற்கனவே துர்க்கை அம்மன் படம் இருந்தால் அதை வைத்து இந்த வழிபாடை செய்யலாம் இல்லை எனில் இதற்கென புதிதாக படம் எதையும் வாங்க வேண்டாம் ஒரே ஒரு மண் அகலை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நெய் ஊற்றி பஞ்சத்தில் போட்டு தீபம் ஏற்றி விடுங்கள் இந்த விளக்கின் தீபத்தையே அம்மனாக பாவித்து வழிபடலாம்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான முக்கியமான ஒரே ஒரு மலர் பிச்சிப்பூ. இந்த மலரை தான் நம் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதாவது இந்த பிச்சை மலரை 108 என்ற கணக்கில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு பொருளை செய்து வைத்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை மேற் சொன்ன நேரத்தில் துர்க்கை அம்மன் படத்திற்கு முன் விளக்கேற்றிக் கொள்ளுங்கள் இல்லை என்றால் அகலை மட்டும் ஏற்றி வைத்து படத்திற்கு முன்பாக அமர்ந்து துர்க்கை அம்மன் மந்திரங்கள் அல்லது நாம அர்ச்சனை செய்து 108 முறை இந்த பிச்சி மலர அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்யும் நேரத்தில் உங்களுடைய எல்லா விதமான பிரச்சினையும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து 9 வாரங்கள் செய்ய வேண்டும. இதை செய்ய தொடங்கிய சிறிது நாட்களுக்குள்ளாகவே உங்களுடைய பிரச்சனைகளிலிருந்து நீங்கள் வெளிவருவதற்கான வாய்ப்பினை அன்னை உங்களுக்கு வழங்குவார். இந்த வழிபாட்டை முடித்த பிறகு ஆலயத்திற்கு செல்ல முடிந்தால் துர்க்கை அம்மனுக்கு ராகுகால நேரத்தில் சென்று ஒரே ஒரு எலுமிச்சை பழ தீபம் ஏற்றுங்கள்.

இதையும் படிக்கலாமே: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எளிமையான இந்த பூஜை முறையை இனி மேலாவது நம் வீட்டில் செய்து பணத்தடைகளை உடைத்து எறிந்து சகல செல்வங்களையும் பெறலாம்.

எதிரிகளை அழித்து பக்தர்களை காக்க அவதாரம் எடுத்த இந்த துர்க்கை அம்மனை நினைத்து இந்த வழிபாடை நான் தொடர்ந்து செய்யும் பொழுது நம்முடைய எதிரிகளான பிரச்சனை துன்பம் சோகம் போன்ற அனைத்தையும் விரட்டி அடைத்து நல்ல இன்பமானதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார். இந்த வழிபாட்டு முறையில் நீங்களும் செய்து அம்பிகையின் அருளாசியை பெற்று நல்ல முறையில் வாழுங்கள்.

- Advertisement -