வேலை கிடைத்து வருமானம் அதிகரித்து கடனில்லா வாழ்க்கை வாழ புதன்கிழமையன்று இதை செய்யுங்கள்

guru bhagavan krishnan
- Advertisement -

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டும் எனில் ஒவ்வொரு படியாக தான் முன்னேறி செல்ல வேண்டும். முதலில் நல்ல வேலை கிடைக்க வேண்டும். அதற்கேற்ற வருமானம் கிடைப்பதுடன் வீண் செலவுகள் ஆகாமல் பணம் சேர வேண்டும். இத்துடன் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது அனைத்திலும் முக்கியம். இவை அனைத்தும் தடையில்லாமல் கிடைக்க நம் செய்ய வேண்டிய ஒரு எளிய வழிபாட்டை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வேலைகள் தடையில்லாமல் நடக்கவும், கடன் அடையவும் நெய்வேத்தியம்

வேலை கிடைக்க வருமானம் அதிகரிக்க வேண்டும் எனில் முதலில் நாம் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அந்த முயற்சிகளில் எந்த வித தடையும் இல்லாமல் இருக்க வேண்டும் எனில் நம்முடைய கிரக பலன்கள் எல்லாம் சரியானதாக இருக்க வேண்டும். அதில் தடைகள் இருந்தால் நாம் தொடங்கும் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடியும்.

- Advertisement -

இதை சரி செய்வதற்கான எளிய வழிபாட்டு முறைகளை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த வழிபாட்டை புதன்கிழமை அன்று தொடங்க வேண்டும். ஏனெனில் வேலை தொடர்பான அனைத்திற்கும் புதன் கிரகத்துடைய அருள் தேவை. இவருக்கான அதிபதி பெருமாள் ஆகையால் இந்த நாளில் பெருமாள் படம் அல்லது கிருஷ்ணர் படத்தை வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

இந்த வழிபாட்டிற்கு கொஞ்சம் அவலை எடுத்து அதில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இத்துடன் கொஞ்சம் தேங்காயை துருவி சேர்த்து நைவேத்தியமாக தயார் செய்து படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி வணங்க வேண்டும். இந்த நெய்வேத்தியத்தை வீட்டில் அருகில் இருக்கும் குழந்தைகளை கிருஷ்ணராகவே பாவித்து அவர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்யும் பொழுது வேலை தொடர்பான தடைகள் நீங்கும்.

- Advertisement -

அடுத்து வியாழனன்று குரு பகவானுக்கு இதே போல அவல் நெய்வேத்தியத்தை பிரசாதமாக வைக்க வேண்டும். இதற்கு அவலை கொஞ்சம் வெந்நீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த அவலுடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து அதை நெய்வேத்தியமாக வைத்து வணங்க வேண்டும்.

இந்த நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்களுக்கும் அருகில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். தடைகள் அனைத்தும் நீங்கும். சிலருக்கு ஜாதகத்தில் குரு பலம் இழந்து இருக்கும். அது போன்றவர்களும் இந்த வழிபாட்டை செய்யும் போது குருபலம் பெற்று மேலும் மேலும் வாழ்க்கையில் முன்னேறலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் ஒரு வருட காலம் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கும் இதே போல் கிருஷ்ணர் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கும் இதே போல் அவலை வெந்நீரில் போட்டு எடுத்த பிறகு அதில் வெல்லம் கலந்து வைத்து வழிபட்டு அதையும் பிரசாதமாக கொடுங்கள். இந்த வழிபாட்டை செய்ய செய்ய கடன்கள் அடைந்து கொண்டே வரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சொத்து பிரச்சனை, கடன் பிரச்சனையில் இருந்து விடுபட கிராம்பு பரிகாரம்.

மேற் சொன்ன இந்த வழிபாடுகளை நம்பிக்கையுடன் செய்து வரும் போது நம்முடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி விடும். அத்தோடு நல்ல வேலை வருமானம் ஆகியவை கிடைத்து கடன் இல்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -