உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு பொருளை வைத்தால் போதும். வற்றாத செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்

cash
- Advertisement -

பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேர்ந்துகொண்டே இருக்கும். பணம் இல்லாதவர்கள் எப்பொழுதும் பணப்பற்றாக்குறையால் துயரப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு உழைத்தாலும் வாங்கும் சம்பளம் சாப்பிடுவதற்கும், வாங்கிய கடனை அடைப்பதற்குமே செலவாகிறது. என்னதான் முயற்சி செய்தாலும் சிறு தொகையை கூட சேமித்து வைக்க முடியாது. ஆனால் பணக்காரர்களிடம் மட்டும் எப்படி பணம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, என்று யோசித்துப் பார்த்தால் பலருக்கும் தெரிவதே கிடையாது. ஏனென்றால் இவர்கள் தங்களிடம் பணம் பெருகிக் கொண்டிருக்க சில சூட்சும பரிகாரங்ளை செய்து கொண்டிருப்பார்கள். அப்படி அனைவரும் செய்ய கூடிய ஒரு சூட்சம பரிகாரத்தை நாமும் நமது வீட்டில் செய்து வந்தால் போதும். நிமிடமும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும், செல்வமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். வாருங்கள் இவற்றை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மனதில் ஏதேனும் வருத்தம் இருந்தாலும் கவலையாக இருந்தாலும் கோவிலுக்குச் சென்று வந்தால் மனநிம்மதி கிடைக்கும், என்று தான் பலரும் தவறாமல் கோவிலுக்கு சென்று வருகின்றனர். கோவிலுக்குள் நுழைந்த உடனேயே அங்கு வீசும் நறுமணத்தால் நமது மனது அமைதியாகி விடுகிறது.

- Advertisement -

எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து எடுக்க முடியும் என்ற நம்பிக்கை வரும். இதற்குக் காரணம் அங்கு சில நறுமண பொருட்களை ஒன்று சேர்த்து ஒரு கலவையாக செய்து வைத்திருப்பார்கள். இவை இருக்கும் இடத்தில் எப்போதும் நேர்மறை ஆற்றல் இருந்துகொண்டிருக்கும். அவை எப்பொழுதும் நல்லதையே நடத்தி வைக்கும்.

அதில் மிகவும் முக்கிய பொருளான ஒன்று தான் பச்சை கற்பூரம். இந்தப் பொருள் ஒன்று மட்டும் வீட்டில் இருந்தால் அனைத்து வித துன்பங்களும் நம்மை விட்டு அகன்று விடும். அதுமட்டுமல்ல வருமானத்தை பெருக்கிக் கொடுக்கும். அந்தப் பணத்தை இரட்டிப்பாக்கி கொடுக்கும். எப்பொழுதும் பணம் தடையின்றி வந்து கொண்டிருக்கும். முதலில் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை மஞ்சள் நிற துணியில் முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும். பின்னர் அதனை வீட்டின் குபேர மூலையில் வைத்துவிட வேண்டும். வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் பூஜை செய்யும்பொழுது இந்த மஞ்சள் முடித்திருக்கும் தீப தூப ஆராதனை காண்பிக்க வேண்டும்.

- Advertisement -

அதேபோல் சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வீட்டின் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பணம் எப்பொழுதும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அடுத்ததாக குபேர விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கிலும் சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அதேபோல் ஒரு சிறிய அகல் விளக்கில் சிறிய துண்டு பச்சை கற்பூரம், ஏலக்காய், 2 கிராம்பு இவை மூன்றையும் சேர்த்து வைத்திருந்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி, நடப்பவை அனைத்தும் நன்மையாகவே நடக்கும். மனம் எப்பொழுதும் தெளிவாக இருக்கும். ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை நீங்கள் பணம் வைக்கும் பஸ்ஸில் பற்ற வைத்துக் கொண்டால் உங்கள் பர்சில் எப்போதும் பணம் குறையாமல் இருக்கும்.

- Advertisement -