தை கிருத்திகை அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

murugan1
- Advertisement -

தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று எல்லோரும் ஒரு விடியலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். தை மாதம் 6ஆம் தேதி நாளைய தினம் தை கிருத்திகை. முருகப்பெருமானுக்கு உகந்த தினம். தை மாதம் 11-ம் தேதி தைப்பூசத் திருநாள் வரவிருக்கின்றது. தை மாதத்தில் வரும் இந்த தைப்பூசம் மட்டும் முருகப்பெருமானுக்கு உகந்தது அல்ல. தை கிருத்திருத்திகையும் சிறப்பு வாய்ந்த நாள் தான். ஆகவே இந்த நாளையும் நீங்க தவற விடாதிங்க.

கை நிறைய பணம் சம்பாதிக்கணும், நல்ல வேலை கிடைக்கணும், கடன் சுமை குறையணும், நோய்நொடி இல்லா வாழ்வை வாழனும், சொத்து சேர்க்கணும் என்று முருகப்பெருமானை நினைத்து நாளைய தினம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்க ஏதாவது ஒரு ரூபத்தில் ஓடோடி வந்து விடுவார் அந்த முருகப்பெருமான்.

- Advertisement -

குழந்தை வரம் தேவை என்பவர்களும் நாளை இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடவும். வெற்றிக்கு உரிய கடவுள் இந்த முருகப்பெருமான் என்பதால், இந்த விரதத்தை இருப்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி மட்டுமே கிட்டும். அதிகாலை வேலையில் எழுந்து வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்கி இந்த விரதத்தை தொடங்கலாம்.

முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கு ஏற்றி விரதத்தை தொடங்குங்கள். விரதம் இருப்பது என்பது உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்து. சாப்பிடாமல் விரதம் இருப்பது அல்லது பால் பழம் சாப்பிட்டு விரதம் இருப்பது, அல்லது மூன்று வேளை உணவு சாப்பிட்டு முருங்கப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். தவறு கிடையாது.

- Advertisement -

நாளைய தினம் அதிகாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்கு உங்களுக்கு நேரம் கிடைக்கும் பட்சத்தில் பின் சொல்லக்கூடிய இந்த முருகர் மந்திரத்தை 36 முறை உச்சரிக்கலாம். காலையில் நேரம் கிடைக்காது எனும் பட்சத்தில் மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். நாளைதினம் நீங்கள் உச்சரிக்க வேண்டிய முருகப்பெருமானின் மந்திர வரிகள் இதோ உங்களுக்காக.

முருகர் மந்திரம்

“ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ”

- Advertisement -

நாளை மாலை பூஜை அறையில் இருக்கும் முருகரின் திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்துவிட்டு நட்சத்திர கோலம் போட்டு அதில் ஆறு விளக்குகளை ஏற்றி ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை எழுதி உங்கள் கோரிக்கையை முருகப்பெருமானின் பாதங்களில் வைத்துவிட்டு மேல் சொல்லப்பட்டிருக்கும் மந்திரத்தை 36 முறை உச்சரித்தால் ரொம்ப ரொம்ப நல்லது. முருகனுக்கு மிகவும் பிடித்த பஞ்சாமிர்தத்தை நாளைய தினம் நைவேத்தியமாக  வைப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: தை முதல் வெள்ளிக்கிழமை பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு

விரதம் இருப்பது வழிபாடு செய்வது எல்லாமே அவரவர் சௌகரியத்தை பொறுத்தது. அவர் அவருக்கு இருக்கும் நேரத்தை பொறுத்தது. உங்களால் நாளைய தினம் முருகனுக்கு என்ன வழிபாடு செய்ய முடியுமோ அதை செய்து விடுங்கள். ஆனால் மேல் சொன்ன மந்திரத்தை மட்டும் உச்சரிக்க மறக்காதீங்க.

மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் நேர்மறை ஆற்றல், நம்முடைய வேண்டுதலை சீக்கிரம் நிறைவேற்றி தர உதவி செய்யும். நாளை மந்திரத்தை சொல்ல யாரும் தவற விடாதீங்க. ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -